Tirunelveli

News September 16, 2025

நெல்லை: ரூ.35,000 சம்பளத்தில் ரயில்வேயில் சூப்பர் வேலை..!

image

இரயில்வே துறையில் Station Controller வேலைக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ▶️ காலியிடங்கள்: 368 ▶️ வயது வரம்பு: 20 – 33 ▶️ கல்வி தகுதி: Any Degree ▶️ பணிகள்: Station Controller ▶️ சம்பளம்: ரூ.35,400 ▶️ பணியிடம்: தமிழ்நாடு ▶️ ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 15.09.2025 ▶️ ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள்: 14.10.2025. விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் செய்யவும்<<>>. வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News September 16, 2025

கவின் ஆணவ கொலை வழக்கு…. முக்கிய விசாரணை

image

நெல்லையில் ஐடி ஊழியர் கவின் ஆணவகொலை வழக்கில், கைது செய்யப்பட்ட எஸ்ஐ சரவணன், அவரது மகன் சுர்ஜித், உறவினர் ஜெயபால் ஆகியோரின் நீதிமன்ற காவல் 23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. சரவணனின் ஜாமீன் மனு நெல்லை மாவட்ட 2வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி ஹேமா, விசாரணையை இன்று (செப் 16) ஒத்திவைத்தார். இரு தரப்பு வாதங்களுக்குப் பின் ஜாமீன் முடிவு எடுக்கப்படும்.

News September 16, 2025

நெல்லை: கழுத்து அறுத்துக் கொல்லபட்ட ஆடு

image

பணகுடி அருகே தண்டையார் குலத்தை சேர்ந்தவர் உள்ள முடையார் (44). இவரது ஆடுகள் வேப்பிலங்குளத்தை சேர்ந்த சகாயம் என்பவரது தோட்டத்தில் நுழைந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே ஒரு ஆடு கழுத்து அறுபட்டு இறந்து கிடந்தது. இதற்கு சகாயம் தம்பதிகள் காரணமாக இருக்கலாம் என உள்ள முடையார் அளித்த புகாரின் படி பணகுடி போலீசார் சகாயம் தம்பதி மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News September 16, 2025

நெல்லை: மகனுக்கு கஞ்சா எடுத்துச் சென்ற தாய்..!

image

அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த லலிதா, சிறையில் உள்ள தனது மகன் வினோதைப் பார்க்க பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு சென்றார். அவர் கொண்டு வந்த பேரீச்சம்பழங்களில் 3 கிராம் கஞ்சா மறைக்கப்பட்டிருந்தது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. சிறை அலுவலர் புகாரில், லலிதா மீது போதைப்பொருள் தடுப்புச் சட்டம் மற்றும் சிறைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 16, 2025

நெல்லை: IOB வங்கியில் ரூ.1,00,000 சம்பளத்தில் சூப்பர் வேலை..!

image

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில், Specialist Officer பணிக்கு 127 காலியிடங்கள் உள்ளன. இதற்கு சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,05,280 வரை வழங்கப்படுகிறது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் (அ) BE., B.TECH., MBA., முடித்தவர்கள் 03.10.2025 ம் தேதிக்குள் இந்த <>லிங்கை கிளிக் செய்து<<>> ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இது பற்றிய கூடுதல் விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம். இத்தகவலை உங்க FRIENDS க்கு SHARE பண்ணி உதவுங்க..!

News September 16, 2025

விகேபுரம் நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து

image

விக்கிரமசிங்கபுரம் கட்டபொம்மன் காலணியில் நகராட்சியின் குப்பை கிடங்கு உள்ளது.குப்பை கிடங்கில் நேற்று காலை திடீரென தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்து வந்த அம்பை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். குப்பை கிடங்கில் தீப்பிடித்ததால் அங்கிருந்து கிளம்பிய புகையால் கட்டபொம்மன் காலணியில் உள்ளவர்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.

News September 16, 2025

நெல்லை: விபத்தில் வாலிபர் பலி

image

நெல்லை, நாங்குநேரி அருகே வடக்கு புளியங்குளத்தை சேர்ந்த மந்திரமூர்த்தி நண்பர்கள் இருவருடன் பைக்கில் மேலப்பாளையம் ஆமீன் புறம் 7வது தெரு அருகே சென்றார். அப்போது பைக்கும் லோடு ஆட்டோவும் மோதின. இதில் பைக்கில் சென்ற 3 பேரும் காயமடைந்து பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். சிகிச்சை பெற்று வந்த மந்திரமூர்த்தி உயிரிழந்தார். விபத்துக்குறித்து மேலப்பாளையம் போலீசார் விசாரணை.

News September 16, 2025

விரைவில் நெல்லை வரும் விஜய்

image

தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் நெல்லையில் அக்டோபர் 11ஆம் தேதி சுற்று பயணம் மேற்கொள்கிறார்.நெல்லை டவுன், வாகையடி முனை, வண்ணார்பேட்டை, பாளை மார்க்கெட், சமாதானபுரத்தில் விஜய் பேசுவதற்கு கட்சியினர் ஏற்பாடு செய்து வருகின்றனர். பிரச்சார பயணத்திற்கு அனுமதி கேட்டு தவெக நிர்வாகிகள் ஜாகிர் உசேன், மரிய ஜான், ராஜகோபால், ஆகியோர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

News September 16, 2025

நெல்லை உங்களுடன் ஸ்டாலின் முகாம் – கலெக்டர் அழைப்பு

image

நெல்லை மாவட்டத்தில் நாளை வி.எம் சத்திரம் சண்முக மஹால், வள்ளியூர் எம்.எஸ்.மஹால், கோடீஸ்வரன் நகர் ஜெயம் மஹால், இட்ட மொழி பெருமாள் தங்கவேல் ஜெயராஜ் மண்டபம், கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி சமுதாயம் நலக்கூடம் ஆகிய இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் நடக்கிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் சுகுமார் இன்று தெரிவித்தார்.

News September 16, 2025

மாநகரில் இரவு காவல் பணி அதிகாரி விபரம்

image

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவின் படி நெல்லை மாநகரில் இன்று (செப்.15) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!