Tirunelveli

News May 16, 2024

மக்களே இன்று குடை எடுத்துச் செல்ல மறக்காதீங்க..!

image

கோடை மழை மற்றும் குமரிக்கடலில் மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பிற்பகல் மாலை இரவு நேரங்களில் கன மழை பெய்கிறது. இன்றும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே வெளியே செல்பவர்கள் குடை, விரைவில் கோட் உள்ளிட்ட பாதுகாப்பு எச்சரிக்கையுடன் செல்வது நல்லதென தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

News May 16, 2024

நெல்லை: பெண்ணுக்கு கொலை மிரட்டல்… ஒருவர் கைது

image

நெல்லை மாவட்டம் தாழையூத்து தாராபுரம் தங்கம்மன் கோவில் தெருவை சேர்ந்த மகேஸ்வரி (28). அதே ஊரை சேர்ந்த கணேசன் ( 38) என்பவர் கடந்த 13ஆம் தேதி அன்று மகேஸ்வரி வேலையை பார்க்கும் இடத்திற்கு வந்த கணேசன் பெண் என்றும் பாராமல் அவதூறாக பேசி மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து நேற்று கணேசனை கைது செய்தனர்.

News May 15, 2024

நெல்லை : நாளை கனமழைக்கு வாய்ப்பு

image

திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை (மே.16) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சமீபமாக தமிழகத்தில் ஆங்காங்கு மழைப் பொழிவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 15, 2024

நெல்லை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

image

திருநெல்வேலி மாவட்டத்திற்கு அடுத்த 3 நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை எச்சரிக்கையும் 18 மற்றும் 19ம் தேதிகளுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கையும் வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தகுந்த முன் எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்கும்படியும் மழை நேரங்களில் மரங்கள், மின்கம்பங்கள், நீர் நிலைகள் அருகில் செல்ல வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

News May 15, 2024

3 நாட்கள் தொடர் கனமழை எச்சரிக்கை

image

குமரி கடலில் நிலவும் காற்று சுழற்சி காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் இன்று (மே 15) மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா தெரிவித்துள்ளார். மேலும் வருகிற 17, 18, 19 ஆகிய மூன்று தினங்களும் மாவட்டத்தில் பரவலாக கனமழையை எதிர்பார்க்கலாம் என அவர் கூறியுள்ளார். இதனிடையே அம்பை, மூலைக்கரைப்பட்டி பகுதிகளில் இன்று பிற்பகல் மழை பெய்யத் தொடங்கியது.

News May 15, 2024

வள்ளியூரில் சுவரில் தேர் மோதி விபத்து

image

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் பிரசித்திபெற்ற சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் கடந்த வாரம் கொடி ஏற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்கியது. தொடர்ந்து இன்று காலை சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினர். தேரை பொதுமக்கள் வடம் பிடித்து இழுத்தனர். அப்போது தேர் வளைவு பகுதியில் சென்றபோது அங்குள்ள சுவரின் மோதி விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயம் ஏற்படவில்லை.

News May 15, 2024

காங்கிரஸ் நிர்வாகி இறப்பில் அடுத்த விசாரணை

image

நெல்லை மாவட்டம் காங்கிரஸ் நிர்வாகி இறப்பில் போலீசார் அடுத்த கட்ட விசாரணையைக் கையில் எடுத்தனர். காங்கிரஸ் நெல்லை மாவட்ட தலைவர் ஜெயக்குமாரின் உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. இது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தியும் துப்பு துலங்காததால் அடுத்த கட்ட விசாரணையாக இறப்பிற்கு முன் ஜெயக்குமாரின் செல்போனில் பேசியவர்களை விசாரிக்க போலீசார் இன்று (மே 15) முடிவு செய்தனர்.

News May 15, 2024

துணைப் பொதுச்செயலாளரை சந்தித்த மாவட்ட செயலாளர்

image

நெல்லையில் திமுக துணைப் பொதுச்செயலாளரை மாவட்ட செயலாளர் இன்று (மே 25) சந்தித்தார். திருநெல்வேலி மாவட்ட திமுக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்காக நெல்லைக்கு வந்த அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசாவை நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன் நேரில் சந்தித்து கட்சி பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஆ.ராசாவுக்கு சால்வை அணிவித்தனர்.

News May 15, 2024

வடை இல்லாமல் இட்லி: வியாபாரிகள் மோசடி

image

திருநெல்வேலி ரயில் நிலையத்தில் பயணிகளை ஏமாற்றி இட்லி, வடைக்கு கட்டணம் வாங்கிவிட்டு பின்னர் வடை இல்லாமல் இட்லி விற்பனை செய்வதாக வியாபாரிகள் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற மோசடிகளை தடுக்க ரயில்வே துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென ரயில் பயணிகள், பொதுமக்கள் விரும்புகின்றனர்.

News May 15, 2024

காற்று வாங்கும் நெல்லை – புருலியா ரயில் பெட்டிகள்

image

நெல்லை ரயில் நிலையத்தில் மூன்று நாட்கள் காலியாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நெல்லை – புருலியா எக்ஸ்பிரஸ் பெட்டிகளை கொண்டு ஞாயிற்றுக்கிழமைதோறும் நெல்லையிலிருந்து தென்காசி, மதுரை வழியாக பெங்களூருக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என பயணிகள் இன்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் மூலம் மத்திய அரசுக்கு வருவாய் ஈட்டப்படும் என ரயில் பயணிகள் நல சங்கம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!