India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நெல்லை மாவட்டம் கோட்டை கருங்குளத்தில் நேற்று(செப்.,21) மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் பேசுகையில், நெல்லை மாவட்டத்தில் குழந்தை திருமணம் மிகவும் குறைந்துள்ளது. குழந்தை திருமணம் நடக்கிறதா என தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இன்று(செப்.,20) நடைபெற்ற நிகழ்ச்சியில் வேளாண் பொறியியல் துறையில் சார்பில் வேளாண்மை இயந்திர மயமாக்கல் திட்டத்தின் கீழ் பவர் டில்லரை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் பயனாளிக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை துறை அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

டெல்லியில் நேற்று நடைபெற்ற கால நிலை தாங்கும் நகர செயல்திட்டம் வெளியிட்டு விழாவில், மத்திய அமைச்சர் டோகன் சாஹீ கலந்து கொண்டு திருநெல்வேலி மற்றும் 7 நகரங்களுக்கான கால நிலை தாங்கும் நகர செயல் திட்டத்தை வெளியிட்டார். தொடர்ந்து சிறந்த மாநகராட்சியாக திருநெல்வேலி மாநகராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்குரிய விருதினை மாநகராட்சி ஆணையாளர் சுகபுத்ராவிடம் மத்திய அமைச்சர் வழங்கினார்.

நெல்லை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், செல்போன் மூலம் தொடர்பு கொண்டு அடையாளம் தெரியாத நபர்கள் சுய விவரங்களை கேட்டு ஸ்காலர்ஷிப் தருவதாக கூறி மோசடி நடைபெற்று வருகிறது. மோசடி பற்றி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படியும், இது போன்ற அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம் என்றும் பாதிக்கப்பட்டால் புகார் அளிக்கவும் என தெரிவிக்கப்பட்டது.

வீரளபெருஞ்செல்வி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த முத்துக்குட்டி நாராயணன் என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பேச்சிமுத்துவுக்கும் இடையே சொத்து பிரச்சனை இருந்துள்ளது. இதில் முத்துக்குட்டி நாராயணனை கடந்த 2020ஆம் ஆண்டு வெட்டி கொலை செய்ய முயன்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேச்சிமுத்து அவருடைய மகன்கள் கந்தசாமி, முருகன் ஆகியோருக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து நெல்லை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

நெல்லை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று பகல் 11 மணிக்கு ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இதில் அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்க உள்ளனர். எனவே விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பங்கேற்குமாறு ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டத்தில் புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் (NEEDS) கீழ் தொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர்களுக்கு ரூ.5 கோடி வரை மானியத்துடன் கூடிய தொழில் கடன் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் தொழில் முனைவோர்கள் www.msme.online.tn.gov.in/needs என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் தற்காலிக பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் இணைந்து நடத்தும் இளைஞர்களுக்கான மாவட்ட அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற செப்டம்பர் 21ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை பாளை தூய யோவான் கல்லூரியில் வைத்து நடைபெறுகிறது. அனைவரும் கலந்து கொள்ளுமாறு இன்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை முடிந்து ஜனவரி 17ஆம் தேதி கல்லிடைக்குறிச்சியில் இருந்து நேரடியாக தாம்பரம் செல்லும் (வண்டி எண் 20684) அதிவேக விரைவு ரயிலின் முன்பதிவு இன்று (செப்.19) காலை 8 மணிக்கு ஆரம்பமாகின்றது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நல சங்கம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.