India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடந்த 2017ஆம் ஆண்டு தென்காசி மாவட்டம் காசிதர்மத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து, அவரது மனைவி சுப்புலட்சுமி, 2 குழந்தைகள் உட்பட 4 பேர் கந்துவட்டி கொடுமையால் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்டனர். தற்போது மருதகுளத்தைச் சேர்ந்த விவசாய சங்கரசுப்பு கடந்த திங்கட்கிழமை தீக்குளித்து இறந்தார். இது மாவட்டம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக கடலில் அதிகபட்சமாக மணிக்கு 55 கிலோமீட்டர் வேகம் வரை காற்று வீசப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என நேற்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து இன்று (மே 17) கடலுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால் 1000க்கும் மேற்பட்ட படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மேற்கு தொடர்ச்சி மலையில் 143 அடிஉச்சநீர் மட்டம் கொண்ட பாபநாசம் அணை மற்றும் 156 அடி உச்சநீர் மட்டம் கொண்ட சேர்வலாறு ஆகிய இரு அணைகளில் இருந்து வினாடிக்கு 256 கன அடி நீர், 118 அடி உச்சநீர் மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணையிலிருந்து வினாடிக்கு 245 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று காலை தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பரவலாக கனமழை விட்டு விட்டு பெய்து வருகிறது. நேற்று முன் தினம் (மே 15) இரவு வள்ளியூர் ரயில்வே சுரங்கப்பாதை பகுதியில் தேங்கிய மழை நீரை அரசு பஸ் ஒன்று சிக்கியது. இந்த நிலையில் தரைப்பாலம், சுரங்க பாலம், தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கினால் மாற்றுப்பாதையில் பஸ்களை இயக்க வேண்டும் என ஓட்டுநர்களுக்கு எஸ்இடிசி அறிவுறுத்தி உள்ளது.
“தொடர்ந்து கல்வி கற்போம்” திட்டத்தின்கீழ் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாத, பள்ளி படிப்பை பாதியில் முடித்த மாணவர்கள் விவரம் நெல்லை மாவட்டத்தில் கணக்கெடுக்கப்பட்டது. இதில் சுமார் 2000 மாணவர்கள் உள்ளனர். இவர்கள் தொடர்ந்து கல்வி கற்போம் திட்டத்தில் சேர்ந்து பயனடைய பாளை மாவட்ட கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தேவையான சிறப்பு பயிற்சி அளித்து துணைத்தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுவருகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று (மே 16) இரவு கன மழை வெளுத்து வாங்கியது. இந்த
நிலையில் நேற்று இரவு 10 மணி நிலவரப்படி மாவட்டத்தில் மொத்தமாக 25 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதில் அதிகபட்சமாக நெல்லை மாநகர பகுதியில் 9.80 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் நேற்று இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் பள்ளி திறக்கும்போது பாட நோட்டு புத்தகங்கள் அதிகபட்சம் 10 சதவீதம் வரை உயரும். ஆனால் நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டு 10% வரை பாடநோட்டுகள் விலை சரிந்துள்ளது. கடந்த ஆண்டு 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட லாங் சைஸ் நோட்டு இப்போது 25 ரூபாயாக குறைந்துள்ளது. டிராயிங் நோட்டு, கணக்கு நோட்டு உள்ளிட்டவற்றின் விலை 20 சதவீதத்திற்கும் மேல் சரிந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
அடுத்து வரும் நாட்களில் தொடர்ந்து கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்து உள்ளதால் முன் எச்சரிக்கை நடவடிக்கை குறித்து இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் கார்த்திகேயன் பேசியதாவது: மழை முன்னேற்பாடுகளை அனைத்து அலுவலர்களும் தயார் நிலையில் செய்ய வேண்டும். நீர் தேங்கும் பகுதிகளில் அகற்றுவதற்கு வசதியாக தேவையான ஜேசிபி இயந்திரம் மின் மோட்டார்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்ட முழுவதும் அடுத்து வரும் நாட்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. மேலும் இன்று (மே 16) முதல் மன்னார் வளைகுடா, குமரி கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 55 கிலோமீட்டர் வரை காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அடுத்த அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் கடந்த 13ஆம் தேதி விவசாயி சங்கர சுப்பு தனது நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வதாக கூறி தனது உடலில் தீ வைத்து கொண்டார். இதில் 90% காயம் அடைந்த அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (மே 16) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Sorry, no posts matched your criteria.