India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கடந்த 1951, 57,62 ஆண்டுகளில் லோக்சபா தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடந்தது. ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தில் உள்ளாட்சி அமைப்பு தேர்தலையும் ஒன்றாக நடத்த வேண்டும். திருப்பதி லட்டு தயாரிப்பின் போது விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்ட விவாகரத்தில் பாரபட்சம் இல்லாமல் ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.அவருக்கு ஆண்டவன் தண்டனை கொடுப்பார் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

கடந்த பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.4 கோடி கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் பாஜக நிர்வாகி கேசவ விநாயகத்துக்கு சம்மன் அனுப்ப சிபிசிஐடி க்கு சுப்ரீம் கோர்ட் நேற்று உத்தரவிட்டது. ஒரு வாரத்திற்கு முன்னதாக அவரது வாட்ஸ் அப், அவரது முகவரிக்கு அனுப்ப வேண்டும் என தெரிவித்துள்ளது.

நெல்லை மின்வாரியம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தனித்தனி வீடுகளாக பயன்பாடுகள் இருந்தால் அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் இலவசம் மின்சாரம் தொடரும். 2 மின் இணைப்புகள் பெற்று ஒரே குடும்பம் 2 மின் இணைப்புகளின் மின்சாரத்தை பயன்படுத்தினால் அந்த 2 மின் இணைப்புகளின் பயன்பாடுகளும் ஒன்றாக கணக்கீடு செய்யப்பட்டு 100 யூனிட் இலவசம் மின்சாரம் வழங்கபடும். 2 மின் இணைப்புகளும் தொடர்ந்து மின்சாரம் வழங்கப்படும்.

திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1097 குளங்களில் 638 குளங்கள் தற்போது வரண்டு விட்டன. எனவே இதைப் பயன்படுத்தி விரைவில் மழைக்காலம் தொடங்க உள்ளதால் வறண்ட குளங்களில் உடனடியாக தூர்வாறும் பணியை மேற்கொள்ள வேண்டும் என நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

நெல்லை மாவட்டத்தில் உள்ள காய்கறி சந்தைகளுக்கு தேங்காய் வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது. இது குறித்து தச்சநல்லூர் மார்க்கெட் தேங்காய் மொத்த வியாபாரிகள் கூறுகையில் தென்காசி, கடையநல்லூர், பொள்ளாச்சியில் இருந்து வரும் தேங்காய் வரத்து குறைந்து விட்டது. வறட்சி நீடிப்பதால் கிலோ ரூ.55 ஆக உயர்ந்து உள்ளது. இதனால் மைசூருக்கு சென்று லாரியில் தேங்காய் வாங்கி வர ஏற்பாடு செய்துள்ளோம் என்றனர்.

நெல்லை மாவட்டம் முழுவதும் நேற்று 6 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு பொதுத் தேர்வு தொடங்கியது. ஏற்கனவே பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில் நேற்று இவர்களுக்கு தொடங்கியது. முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் ஆலோசனைப்படி கல்வி மாவட்ட அதிகாரிகள் தலைமை ஆசிரியர்கள் தேர்வு மையங்களில் ஆய்வு செய்தனர்.

நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 53.55 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இது வழக்கமான மழை அளவான 23.50 மில்லி மீட்டர் மழையை விட 130 சதவீதம் அதிகமாகும். நடப்பு செப்டம்பர் மாதத்தில் 16 ஆம் தேதி வரை 2.33 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் அணைகளில் போதுமான அளவு நீர் இருப்பு உள்ளது என ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலெக்டர் கார்த்திகேயன் பேசுகையில், “நீர்வழிப் பாதையில் குப்பையை கொட்டி அடைப்பு ஏற்படுத்துபவர்கள் மீது நீர்வளத்துறை சார்பில் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்படும். அந்த புகார் மனுவை பெற்று சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீசார் குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் நெல்லையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறுகையில், நெல்லை ரயில் நிலையம் உலக தரத்திற்கு ரூ.300 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட உள்ளது. விமான நிலையத்திற்கு இணையான தரத்தில் வசதிகள் கிடைக்கும் நெல்லை சென்னை இடையே கூடுதல் ரயில்கள் குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. நெல்லை எக்ஸ்பிரசில் கூடுதல் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கப்படும் என்றார்.

நெல்லை மாவட்ட காவல்துறை இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சாலையில் அதிவேகமாக செல்லும் வாகனங்களால் விபத்துகள் நீடிக்கின்றன. இதனால் பல்வேறு குடும்பங்கள் ஆதரவின்றி மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே வாகனங்களை ஓட்டுபவர்கள் அதிவேகமாக செல்லாமல் மிதமான வேகத்திலேயே செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.