Tirunelveli

News July 8, 2024

மேயர் சரணவனின் ராஜனாமா கடிதம் ஏற்பு

image

நெல்லை மாநகாரட்சியில் தொடர்ந்து பிரச்னை ஏற்பட்டு வந்த நிலையில் மேயராக இருந்த சரணவனன் கடந்த 3 ஆம் தேதி ராஜினாமா செய்தார். இதை தொடர்ந்து இன்று(ஜூலை 8) துணை மேயர் ராஜூ தலைமையில் மாநகாரட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது. கூட்டம் தொடங்கியதும் மேயர் சரவணனின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டது. தேர்தல் ஆணையம் அறிவிக்கும் தேதியில் புதிய மேயர் தேர்தல் நடைபெறும் என ஆணையர் தெரிவித்தார்.

News July 8, 2024

46 கவுன்சிலர்கள் பங்கேற்ற கூட்டம்

image

திருநெல்வேலி மாநகராட்சி மேயராக இருந்த சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் அவரது ராஜினாமாவிற்கு பின்பு இன்று(ஜூலை 8) துணை மேயர் ராஜு தலைமையில் மாமன்ற கூட்டம் நடைபெற்றது. மாநகராட்சியில் 55 கவுன்சிலர்கள் உள்ளநிலையில், இந்த கூட்டத்தில் பல மாதங்களுக்கு பின்பு 46 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் தொடகத்தில் மேயர் ராஜினாமா கடிதம் பார்வைக்கு வைக்கப்பட்டது.

News July 8, 2024

சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு

image

திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை ஜூன் மாதம் வரை செயல்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த ரயில் சேவை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருநெல்வேலியில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் ஜூலை 7, 14, 21, 28 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்பட்டு மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News July 8, 2024

நெல்லை: 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு(காலை 10 மணி வரை) மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி நெல்லை மாவட்டத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக கடந்த சில நாள்களாக தென்காசியில் மழை பெய்து வருகிறது. மேலும், ஜூலை 12 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 7, 2024

மாஞ்சோலைக்கு வருகை தரும் மாநில தலைவர்கள்

image

திருநெல்வேலி, மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற மாஞ்சோலை நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் தொழிலாளர்களுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் தலைவர்கள் களமிறக்க வருகின்றனர். அந்த வகையில் வருகின்ற 18ம் தேதி பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும், 24ஆம் தேதி காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகையும் மாஞ்சோலைக்கு வருகை தர உள்ளனர்.

News July 7, 2024

நெல்லை மாநகராட்சி நாளை கூடுகிறது

image

நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன், சில நாட்களுக்கு முன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து அடுத்த யார் மேயர் என பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் நாளை காலை 10.30 மணிக்கு மாநகராட்சி கூட்டம் கூடுவதாக ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ் தெரிவித்துள்ளார். அக்கூட்டத்தில், மேயர் ராஜினாமா குறித்து கூட்டத்தில் பதிவு செய்யப்படவுள்ளது. இக்கூட்டத்தை பொறுப்பு மேயராக இருக்கும் ராஜு நடத்தவுள்ளார்.

News July 7, 2024

திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை மின்தடை

image

திருநெல்வேலி மாவட்டம் மானூர் வட்டாரம் தாழையூத்து, மாநகர் பகுதி தச்சநல்லூர் மற்றும் களக்காடு ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (ஜூலை 8) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக இந்த மின் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என அந்தந்த பகுதி செயற்பொறியாளர்கள் அறிவித்துள்ளனர்.

News July 7, 2024

செமி கிரையோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி

image

காவல்கிணறு மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் அதிக எடை கொண்ட ராக்கெட்டுகளையும் விண்ணில் செலுத்துவதற்கு ஏதுவாக, செமி கிரையோஜெனிக் என்ஜின் தயாரிக்கப்பட்டு சோதனை நடத்தப்படுகிறது. செமி கிரையோஜெனிக் என்ஜினின் ஒரு பகுதி யான ப்ரி-பர்னர் இக்னிஷன் சோதனை ஏற்கனவே நான்கு முறை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. 5-வது முறையாக ப்ரி-பர்னர் இக்னிஷன் சோதனை நேற்று 2 1/2 வினாடிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டது

News July 6, 2024

புலிகளாக மாறுவார்கள்: கிருஷ்ணசாமி எச்சரிக்கை

image

மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றார். அந்த வகையில் இன்று நெல்லையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாஞ்சோலை தேயிலை தோட்ட விவகாரத்தில் மாவட்ட ஆட்சித்தலைவரோ , அரசோ தவறான முடிவை எடுத்தால் எங்கள் கட்சி தொண்டர்கள் புலிகளாக மாறுவார்கள் என எச்சரித்துள்ளார்.

News July 5, 2024

நெல்லை: நாளை மின் தடை அறிவிப்பு

image

பாளையங்கோட்டை, சமாதானபுரம், கொக்கிரகுளம், பணகுடி, நவ்வலடி, சங்கனான்குளம் ஆகிய துணை மின் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் நாளை ஜூலை 6ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!