India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் இன்று (ஜூலை 11) விடுத்துள்ள செய்தி குறிப்பில், தூய்மைப் பணிகளை மேற்கொள்ளும் பணியாளர்களுக்கு வருகிற 13 ஆம் தேதி காலை 9 மணிக்கு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. பாளையங்கோட்டை, அம்பை, சேரன்மகாதேவி, களக்காடு, மானூர், நாங்குநேரி, ராதாபுரம், பாப்பாகுடி, வள்ளியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இந்த முகாம் நடைபெறும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை குத்தகை காலம் முடிவடைவதற்கு முன்பாக வெளியேற்றும் முயற்சியில் தோட்ட நிர்வாகம் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி மறு உத்தரவு வரும்வரை குடியிருப்புகளை காலி செய்ய வேண்டாம் என பிபிடிசி நிர்வாகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், 3 நாளில் 75% கருணைத் தொகையை தொழிலாளர் ஆணையத்திடம் ஒப்படைக்கவும் முடிவு செய்துள்ளது.
ராதாபுரம் அருகே மகேந்திரகிரியில் இயங்கி வரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன உந்தும வளாக நிர்வாக அலுவலர் சுப்பிரமணியன் நேற்று(ஜூலை 10) வெளியிட்ட செய்தி குறிப்பில், தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு 8 – 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வினாடி வினா போட்டி ஜூலை 25 ஆம் தேதி மாவட்ட அறிவியல் மையத்தில் வைத்து நடைபெறுகிறது. மாணவர்கள் பங்கேற்று பயன்பெறுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
திருநெல்வேலி, சுவாமி நெல்லையப்பர் கோயிலில் ஆடி மாதம் நடைபெறும் தேர் திருவிழாவில் 3ம் நாள் நிகழ்ச்சியின்போது ரத வீதியில் பூத வாகனம் வீதி உலா நடைபெறும். ஏற்கனவே உள்ள பூத வாகனம் பழுதடைந்து விட்டதால், தற்போது புதிய பூத வாகனம் பிரம்மாண்டமாக தயார் செய்யப்பட்டுள்ளது. இது நேற்று(ஜூலை 10) மாலை ரதவீதியில் பூஜை செய்யப்பட்டு வெள்ளோட்டம் விடப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அனு சங்கமம் மஹாலில் வைத்து நாளை (ஜூலை.11) மக்களுடன் முதல்வர் முகாம் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது. இதனை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பயன்படுத்தி பயன்பெற திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று (ஜூலை.10) வெளியிட்டுள்ள அறிக்கையில் அழைப்பு விடுத்துள்ளார்.
நெல்லை மாவட்ட எஸ்.பி (பொறுப்பு) சுரேஷ்குமார் இன்று கூறுகையில், போலீசார் தயாரித்த பட்டியல்களில் நெல்லையில் 700 ரவுடிகளில் 600 பேர் சிறைகளிலும், நன்னடத்தை சான்றிதழ்களும் வழங்கியுள்ளனர். இதில் மீதமுள்ள 100 ரவுடிகளின் நடவடிக்கைகளை போலீசார் கண்காணித்து வருகின்றனர். ஒரு ரவுடிக்கு தலா ஒரு போலீசார் வீதம் 2 ஷிப்ட் வீதம் 2 போலீசார் நியமிக்கப்பட்டு மிக நெருக்கமாக கண்காணித்து வருகின்றனர் என்றார்.
திருநெல்வேலி மாநகராட்சி மேயர் சரவணன் தனது பதவியை ராஜினாமா கடந்த வாரம் செய்துள்ளார். இந்த நிலையில் அடுத்த மேயர் யார்? என்ற எதிர்பார்ப்பு நெல்லை மக்கள் மத்தியில் நிலவி வரும் நிலையில் தற்போது துணை மேயராக உள்ள ராஜுவிற்கு கூடுதல் அதிகாரம் கொடுத்து மாநகராட்சியை வழி நடத்த திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் இன்று (ஜூலை 10) விடுத்துள்ள செய்தி குறிப்பு: நெல்லை மாவட்ட அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர்க்கும் முகாம் வரும் 13ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் புதிய குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு, மாற்றம் செய்தல், புகார் அளித்தல் போன்றவை குறித்து பயன் அடையலாம்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று (ஜூலை 10) பாளையங்கோட்டையில் அவரது உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடந்தது. காங்கிரஸ் கட்சியின் மாநகர் மாவட்ட அலுவலகமான செல்லபாண்டியன் பவனத்தில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வில் நெல்லையை சேர்ந்த மாணவி 2ஆம் இடம் பிடித்துள்ளார். பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஜூலை 22 முதல் செப்டம்பர் 11 வரை நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நெல்லையை சேர்ந்த மாணவி நிலஞ்சனா 2 ஆம் இடம் பிடித்துள்ளார். செங்கல்பட்டு மாணவி முதல் இடமும், நாமக்கல் மாணவர் 3வது இடமும் பிடித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.