India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

டவுன் பழனி தெருவை சேர்ந்த பார்வதி என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வரும் வானுமாமலை என்பவரிடம் ரூ.5 லட்சம் கடன் வாங்கியுள்ளார். வாரம் ரூ.10,000 வட்டி செலுத்தி வந்துள்ளார். ஒரு மாதம் வட்டி செலுத்தவில்லை. நேற்று முன்தினம் பார்வதி தனது தம்பியுடன் சுத்தமல்லியில் நின்று கொண்டிருந்த போது வானுமாமலை 2 பேரையும் காரில் கடத்தி சென்று மிரட்டியுள்ளார். இதில் பேட்டை போலீசார் நேற்று வானுமாமலையை கைது செய்தனர்

தச்சநல்லூர் காவல் நிலையம் அருகேயும், தாழையூத்து காவல் சோதனை சாவடி அருகேயும் 2 பைக்கில் வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு சென்றுள்ளனர். போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார் பைக்கில் வந்த மர்ம நபர்களை CCTV காட்சி மூலம் கண்டறிந்தனர். இதில் ஊருடையான் குடியிருப்பை சேர்ந்த அஜித் குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 4 பேர் உட்பட 5 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று [அக்.12] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் அசோக்குமார் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.

நெல்லை மாவட்டத்தில் உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து இனி மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக எளிதில் புகார் அளிக்கலாம். அதன்படி 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இத்தகவலை மறக்காமல் SHARE பண்ணுங்க!

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் இன்று முதுகலை ஆசிரியர் பணிக்கு எழுத்து தேர்வு நடைபெற்று வருகிறது. நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 5527 தேர்வுகள் தேர்வு எழுத அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது. இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் 5527 பேரில் 5075 பேர் மட்டுமே தேர்வெழுத வந்தனர். 452 பேர் தேர்வு எழுத வரவில்லை.

நெல்லையில் உங்கள் வாகனத்திற்கு தவறுதலாக அபராதம் விதிக்கப்பட்டிருந்தால், அதனை ரத்து செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?. அதற்கு இங்கே க்ளிக் செய்து உங்கள் பெயர், மொபைல் எண், சலான் எண் ஆகியவற்றை குறிப்பிட்டு, அபராதம் தவறானது என விளக்கம் அளிக்க வேண்டும். ஆதாரம் இருந்தால் கூடுதலாக இணைக்கலாம். உங்கள் புகார் சோதனை செய்யப்பட்டு சலான் ரத்து செய்யப்படலாம். இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க eportal.incometax.gov.in என்ற இணையத்தளத்திற்கு சென்று உங்கள் ஆதார் & பான் கார்டினை மிக எளிதாக இணைத்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

மழைக்காலம் தொடங்கியுள்ளதை அடுத்து திருநெல்வேலி மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில், தினமும் ஒரு விழிப்புணர்வு வாசகத்தை மின் நுகர்வோர், பொதுமக்களுக்கு வெளியிட்டு வருகிறது. இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பில் ஈரக்கையால் ஒருபோதும் மின் சாதனங்களை கையாளக் கூடாது. அது ஆபத்தை விளைவிக்கும் அபாயம் உள்ளது. எனவே கைகளில் ஈரம் இன்றி எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மக்களே, கனரா வங்கி (Canara Bank) 3500 அப்ரண்டிஸ் (Graduate Apprentices) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.15,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <

நெல்லை மாவட்டம், வடக்கன்குளம் அண்ணாநகர் பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் மயில் ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இது குறித்து மகேஷ் என்பவர் தெரிவித்த தகவலின் படி பணகுடி போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். அங்கே வீட்டின் பக்கவாட்டுக்கு சுவரிலும் குண்டு பாய்ந்த தடம் இருந்துள்ளது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.