Tirunelveli

News July 17, 2024

நெல்லையில் தக்காளி விலை கடும் உயர்வு

image

நெல்லையில் காய்கறிகள் விலை உயர்ந்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களாக தக்காளி விலை உச்சம் தொட்ட வண்ணம் உள்ளது. உழவர் சந்தைகளில், 1 கிலோ 78 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெளி சந்தைகளில் 1 கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. உள்ளூரில் தக்காளி வரத்து குறைந்துள்ளதன் காரணமாக, வெளி மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால் தக்காளி விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

News July 17, 2024

2,768 ஆசிரியர் பணி: வரும் 21ஆம் தேதி தேர்வு

image

தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பணிக்கு, கூடுதலாக 1,000 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், 2,768 பணியிடங்களுக்கு வரும் 21ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த தேர்வானது நடைபெற உள்ளது. தேர்வு கூடங்கள் பற்றிய விவரங்களை ஹால் டிக்கெட்டில் தெரிவிக்கப்படும். இன்னும் ஓரிரு நாட்களில் ஹால் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News July 17, 2024

கர்நாடகா அரசுக்கு நெல்லை முபாரக் கண்டனம்

image

காவிரி நீரை தமிழகத்திற்கு 12-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை 20 நாட்களுக்கு தினமும் 1 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. ஆனால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசு தொடர்ந்து மறுப்பது கடும் கண்டனத்துக்குரியது என்று எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.

News July 17, 2024

அரசே ஏற்று நடத்த வேண்டும்: திருமாவளவன்

image

சென்னையில் செய்தியாளர்களை இன்று சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன் கூறுகையில், நெல்லை மாவட்டம், அம்பை மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை வெறும் கையோடு விரட்டி அடிப்பது அநீதியாகும். குத்தகை காலம் முடிவடைந்தாலும் கூட தேயிலை தோட்டத்திற்கான கட்டமைப்புகள் அப்படியே இருப்பதால் அதனை அரசே ஏற்று நடத்தலாம். இதனால் மாஞ்சோலை மக்களின் வாழ்வாதாரமும் மேம்படும் எனத் தெரிவித்துள்ளார்.

News July 16, 2024

மாணவர்கள் அஞ்சல் சேமிப்பு திட்டம் தொடக்கம்

image

இந்திய அஞ்சல் துறை திருநெல்வேலி அஞ்சல் கோட்டம் சார்பில் பள்ளி மாணவ ,மாணவிகள் அரசின் உதவித் தொகை பெற வசதியாக அஞ்சல்துறை சேமிப்பு கணக்குகள் துவங்குவதற்கான சிறப்பு முகாம் இன்று பாளையில் ஜான்ஸ் மற்றும் கதீட்ரல் பள்ளிகளில் நடந்தது. மாணவர்களுக்கு சேமிப்பு கணக்கு புத்தகங்கள் தலைமை ஆசிரியர்கள் மூலம் வழங்கப்பட்டது.

News July 16, 2024

ஐடிஐ சேர்க்கை தேதி நீட்டிப்பு

image

நெல்லை பேட்டை, அம்பை, ராதாபுரம் ஆகிய ஐடிஐ மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் வரும் ஜூலை 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 8903709298, 9486251843, 9499055790 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

News July 16, 2024

எடப்பாடியை சந்தித்த நெல்லை அதிமுகவினர்

image

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் குறித்து எடப்பாடி பழனிச்சாமி, நெல்லை மாவட்ட நிர்வாகிகளுடன் இன்று (ஜூலை.16) சென்னையில் ஆலோசனை நடத்தினார். இதில் மாவட்ட செயலாளர்கள் தச்சை கணேசராஜா, இசக்கி சுப்பையா, நெல்லைத் தொகுதியில் போட்டியிட்ட மகளிர் அணி ஜான்சி ராணி மற்றும் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்றனர். தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

News July 16, 2024

நெல்லை பெண்ணுக்கு முதல்வர் பரிசு

image

சென்னை தலைமைச் செயலகத்தில், கைவினை பொருட்கள் தயாரிப்பில் சிறந்து பணியாற்றிய பெண்களுக்கு ‘பூம்புகார் மாநில விருதுகளை’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார். அதன்படி இன்று நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே தெற்கு வீரவநல்லூர் தெற்கு பாரதி நகரில் வசித்து வரும் சுலைகாள் பீவிக்கு பூம்புகார் மாநில விருது முதல்வரால் வழங்கப்பட்டது.

News July 16, 2024

நெல்லை அருகே பெண் யானை பலி

image

அம்பை அருகே முண்டந்துறை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் யானை இறந்து கிடப்பதாக வந்த தகவலையடுத்து, துணை இயக்குநர் இளையராஜா தலைமையிலான குழுவினர் சேர்வலாறு நீர் வரும் பாதையில் இன்று ஆய்வு செய்தனர். அப்போது உயரமான(சுமார் 100 அடி) இடத்தில் இருந்து விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டு யானை இறந்தது தெரிய வந்தது. இறந்த 6 வயதுடைய பெண் யானையின் சடலம் அப்பகுதியில் தகனம் செய்யப்பட்டது.

News July 16, 2024

கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

image

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, இன்று (ஜூலை 16) அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகையை ரூ.3000-ஆக உயர்த்த வேண்டும், கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிக்கு உதவித்தொகை ரூ.5000-ஆக உயர்த்த வேண்டும், வீட்டுமனை பட்டா மற்றும் இலவச வீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.

error: Content is protected !!