India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடையம் அருகே மேட்டூர் பரிசுத்த திரித்துவ ஆலயம் 131வது பிரதிஷ்டை விழா கடந்த 24ஆம் தேதி தொடங்கி நேற்று வரை 3 நாட்கள் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் நேற்று சிறப்பு விருந்தினராக திமுக தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன் கலந்துகொண்டு சிறப்பித்தார். இதில் கடையம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் மகேஷ், மாயவன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
குமரிக்கடல் மற்றும் வங்கக்கடலில் அடுத்த 5 தினங்களுக்கு காற்றின் வேகம் அதிகரிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீசும் வாய்ப்பு உள்ளதால் நெல்லை உள்ளிட்ட தென் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்வதை தவிர்க்க வேண்டும் என எச்சரித்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே கடந்த ஒரு வாரமாக மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை எழும்பூரில் அகில இந்திய அனைத்து பத்திரிகை ஊடக செய்தியாளர்கள் சங்கத்தின் தேசியத் தலைவர் டாக்டர் ரஷ்மி ரூமி தலைமையில், நேற்று விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பங்கேற்ற, அமெரிக்க அரசின் டிப்ளமேட்டிக் ஹோல்டர் மற்றும் முன்னாள் இன்டர்நேஷனல் கிரிமினல் கோர்ட் (ICC) நீதிபதி டாக்டர் மது.கிருஷ்ணன், நெல்லை பாடகர் செய்யது அலாவுதீனுக்கு சிறந்த இளம் பாடகர் விருது வழங்கி பாராட்டினார்.
நெல்லை மாவட்ட ஆட்சியர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் உயர் கல்வி பயின்ற இளைஞர்கள் வெளிநாடு வேலைக்கு செல்லும்போது விசா, பணி விவரங்களை உதவி எண்கள் மூலம் தொடர்பு கொண்டு சரி பார்த்துக் கொள்ளலாம். சென்னை குடிபெயர்வு பாதுகாப்பு அலுவலக உதவி எண் 90 42 14 92 22, என்ற எண்ணில் 24 மணி நேரமும் அழைத்து தங்களது சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம் என தெரிவித்தார்.
தென்காசி வழியாக இயக்கப்படும் நெல்லை-மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.இதன்படி ஜூன் 2, 9, 16, 23 30 ஆகிய தேதிகளில் நெல்லையில் இருந்து புறப்படும் இதுபோல் மறு மார்க்கத்தில் மேட்டுப்பாளையத்தில் இருந்து இரவு 7.45 மணிக்கு ஜூன் 3 , 10, 17, 24, 31 ஆகிய தினங்களில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கு முன்பதிவு நடைபெறுகிறது.
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றியவர் விஜயகுமார். இவர் நெல்லை மாவட்டம் பாளை பெருமாள்புரம் காவல் நிலையத்தில் பணியாற்றிய போது டாக்டர் மீது பொய் வழக்கு பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அவர் இன்னும் நான்கு நாட்களில் ஓய்வு பெற இருந்த நிலையில் அவரை சஸ்பெண்ட் செய்து இன்று திருநெல்வேலி டிஐஜி பிரவேஷ் குமார் உத்தரவிட்டார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று (25.5.24) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நெல்லையில் இடி மின்னலுடன் கனமழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது வழக்கு காவல்துறையிடம் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிபிசிஐடி காவல் ஆய்வாளர் உலகராணி தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இன்று (மே 25) ஜெயக்குமார் உறவினர்கள் விசாரணைக்காக சிபிசிஐடி அலுவலகத்திற்கு வருகை தந்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகின்றது.
நெல்லை மாவட்டம், மூன்றடைப்பு தீபக்ராஜா படுகொலையில் அவருடைய உடல் அரசு மருத்துவமனையில் உள்ளது. தீபக் ராஜாவின் உடலை அவரது உறவினர்கள் பெறும் வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து சாலைகள் மற்றும் முக்கிய இடங்களில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியிலும் இருசக்கர வாகனத்தில் ஆயுதம் ஏந்திய காவலர்கள் ரோந்து பணியும் மேற்கொள்ள நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் இன்று (மே25) உத்தரவிட்டார்.
பேருந்தில் காவலர் ஒருவர் டிக்கெட் எடுக்காமல் வாக்குவாதம் செய்த வீடியோ வைரலானதை தொடர்ந்து காவல்துறையினருக்கும், போக்குவரத்து துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இது குறித்து தமிழக சபாநாயகரும் ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினருமான அப்பாவு காவல்துறைக்கும் போக்குவரத்து துறைக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனை குறித்து அரசு நடவடிக்கை எடுக்கும் என இன்று (மே 25) தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.