Tirunelveli

News July 19, 2024

மணிமண்டபம் அமைக்க வேண்டும்: அப்பாவு

image

தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, நேற்று முதல்வருக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில், 1800ஆம் ஆண்டுகளில் பெண் கல்விக்கு வித்திட்ட இங்கிலாந்தைச் சேர்ந்த சாரா டக்கர் மற்றும் அயர்லாந்தைச் சேர்ந்த ஏமி கார் மைக்கேல் ஆகியோர் இந்தியா வந்து பல்வேறு கல்விப் பணிகள் மற்றும் சமூகப் பணிகளில் ஈடுபட்டனர். அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும்” என கடிதத்தில் கூறியிருந்தார்.

News July 19, 2024

மீண்டும் சூடு பிடிக்கும் ஜெயக்குமார் வழக்கு

image

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர் ஜெயக்குமார். இவரது மரண வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்ற நிலையில், மீண்டும் நேற்று அவரது குடும்பத்தினர் மற்றும் வேலையாட்களிடம் விசாரணை நடத்தினர். மேலும், சிபிசிஐடி அலுவலகத்தில் அவரது ஆதரவாளர்கள் 4 பேர் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளனர். இந்த விசாரணை நேற்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற்றது.

News July 19, 2024

நாளை ரேஷன் கடைகள் இயங்காது

image

மகளிா் உரிமைத் தொகை பயனாளிகளைத் தோ்வு செய்யும் பணிகளை, ரேஷன் கடை ஊழியர்கள் கடந்தாண்டு மேற்கொண்டனர். ஜூலை 23, ஆகஸ்ட் 4 ஆகிய விடுமுறை தினங்களில் பணிகளை மேற்கொண்டதால், அதனை ஈடுசெய்யும் வகையில் நாளை (சனிக்கிழமை) விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதனால் நெல்லை முழுவதும் நாளை ரேஷன் கடைகள் இயங்காது. எனவே, பொதுமக்கள் இன்றே ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க.

News July 19, 2024

நெல்லையில் போராட்டம் அறிவித்த நாம் தமிழர்

image

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை காக்க தவறிய திமுக அரசை கண்டித்தும், மின் கட்டணத்தை 3வது முறையாக உயர்த்தி உள்ளதை கண்டித்தும் நாம் தமிழர் கட்சி சார்பில் வரும் 21ஆம் தேதி நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பு நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக நேற்று(ஜூலை 18) வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிவித்துள்ளனர். இதற்கான ஏற்பாட்டை நாதக நிர்வாகிகள் செய்துள்ளனர்.

News July 19, 2024

பணியிடமாற்றம் செய்யப்பட்ட கமிஷனர் உத்தரவு

image

திருநெல்வேலி மாநகராட்சியில் 55 லட்சம் ரூபாய் பினாயில் ஊழலுக்கு துணை போனதாக, மாநகராட்சி சுகாதார அலுவலர் டாக்டர் சரோஜாவை மாநகராட்சி கமிஷனர் தாக்கரே நேற்று(ஜூலை 18) பணி விடுவிப்பு செய்து திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கமிஷனர் தாக்கரே ஏற்கனவே பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் இந்த திடீர் உத்தரவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News July 19, 2024

நெல்லையில் இன்று மின் குறைதீர் கூட்டம்

image

திருநெல்வேலி நகரப்புற கோட்ட மின்வாரிய அலுவலகத்தில் இன்று(19ம் தேதி) மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. பகல் 11 மணிக்கு இந்த கூட்டம் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும் என மின்வாரிய செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மின் அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.

News July 18, 2024

வெற்றி: நெல்லை மாணவர்கள் அசத்தல்

image

மாவட்ட அளவில் நடைபெற்ற ‘அட்டையா பட்டயா’ விளையாட்டுப் போட்டியில், பேட்டையை அடுத்துள்ள நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 2ஆம் இடம் பிடித்தனர். இவர்களுக்கு தலைமை ஆசிரியை ரோகிணி வெள்ளிப் பதக்கம், சான்றிதழ் வழங்கி பாராட்டினார். மாநிலப் போட்டியில் பங்கேற்பதற்கு மாணவர்கள் சுதாகர், சூர்யா, இசை, கார்த்தி, சுரேஷ்குமார், தரணி, விஜய் ஆகியோர் தேர்வாகியதாக உடற்கல்வி ஆசிரியர் பெரியதுரை தெரிவித்தார்.

News July 18, 2024

ராபர்ட் புரூஸ் வெற்றிக்கு எதிராக மனு தாக்கல்

image

மக்களவைத் தேர்தலில் நெல்லை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராபர்ட் புருஸ்க்கு எதிராக, பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். வாக்கு எண்ணிக்கையின்போது தொடர்ந்து 2ஆம் இடத்தில் இருந்த அவர், இறுதியில் 1.65 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இந்த வெற்றியை எதிர்த்து தற்போது நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

News July 18, 2024

நெல்லையில் தக்காளி விலை குறைந்தது

image

நெல்லையில் கடந்த ஒரு வாரமாக தக்காளி விலை ஏற்றத்தில் இருந்தது. இதனால், உழவர் சந்தையில் கிலோ ரூ.78க்கும், வெளிச் சந்தையில் ரூ.100 வரையும் விற்பனையானது. இந்த நிலையில், தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் இன்று விலை சற்று குறைய தொடங்கியுள்ளது. நெல்லை உழவர் சந்தையில் 1 கிலோ தக்காளி ரூ.8 குறைந்து 70 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. வெளிச்சந்தையில் ரூ.10 முதல் ரூ.15 வரை கிலோவிற்கு குறைந்துள்ளது.

News July 18, 2024

அரசே எடுத்து நடத்த வேண்டும்: வழக்கறிஞர்

image

நெல்லை மாவட்டம் உயர்நீதிமன்ற கிளை வழக்கறிஞர் ராபர்ட் சந்திரகுமார், நேற்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மீனவ சமுதாய மக்களை கடலோரப் பகுதியில் இருந்து அப்புறப்படுத்தி, வேறு இடங்களுக்கு குடிபெயர வைப்பது எப்படி தவறானதோ, அதேபோல் மாஞ்சோலை மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி வேறு பகுதிக்கு கொண்டு செல்வது முற்றிலும் தவறானது. இதனை அரசே எடுத்து நடத்த வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!