Tirunelveli

News July 20, 2024

தொடர் கண்காணிப்பில் 30 ரவுடிகள்

image

நெல்லை மாநகரில் சட்டம் ஒழுங்கிற்கு குந்தகம் ஏற்படுத்தும் 466 ரவுடிகளில் மிக முக்கியமான 30 ரவுடிகள் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படுகின்றனர். கடந்த ஒரு வருடத்தில் 64 பேர் கைதாகி அதில் 31 பேர் குண்டர் சட்டத்தில் கைதாகியுள்ளனர். குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருக்க 178 நபர்களிடம் நன்னடத்தை பிணை பத்திரம் பெறப்பட்டுள்ளது என்று நெல்லை மாநகர காவல்துறை இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

News July 19, 2024

கலை பயிற்சி குறித்து ஆட்சியர் அறிக்கை

image

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறையின் சார்பில் திருநெல்வேலி மாவட்ட பகுதி நேர நாட்டுப்புற கலை பயிற்சி வகுப்புகள் கடந்த 12ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது. இப்பயிற்சிக்கு 2024-25ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை ஜூலை 1ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றது. கலை பயிற்சி பெறுவதற்கான இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று (ஜூலை 19) அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

News July 19, 2024

முன்னாள் படைவீரர்கள் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்

image

நெல்லை மாவட்ட முன்னாள் படைவீரர்கள், படைவீரர்களை சார்ந்தோர்கள் நலனை கருத்தில் கொண்டு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் வரும் 26ஆம் தேதி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே முன்னாள் படைவீரர்கள் அவரை சார்ந்தோர்கள் தங்களுக்கு குறைகள் இருப்பின் மாவட்ட ஆட்சி தலைவரால் நடத்தப்படும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயனடையுமாறு ஆட்சியர் கார்த்திகேயன் இன்று தெரிவித்துள்ளார்.

News July 19, 2024

பால் கொள்முதலில் சாதனை

image

திருநெல்வேலி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் 2023 அக்டோபர் மாதம் முதல் 2024 மார்ச் மாதம் வரை 6 மாத காலத்திற்கு 65 கிளை கறவை கூடங்கள் மூலம் 13லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து சாதனை படைத்துள்ளது. அரசு ஆணைப்படி தினசரி பால் நெல்லை ஆவினுக்கு அனுப்பப்படுகிறது. இதில் கறவை உறுப்பினர்களை ஊக்கப்படுத்த போனஸ் வழங்கப்பட்டுள்ளது.

News July 19, 2024

நெல்லையில் குறைவாகவே மழை பெய்துள்ளது

image

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் இன்று (ஜூலை.19) விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் உள்ள ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கூறுகையில் மாவட்டத்தில் ஜூன், ஜூலையில் வழக்கமான தென்மேற்கு பருவ மழையை விட இந்த ஆண்டு குறைவாகவே மழை பெய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

News July 19, 2024

என் உயிருக்கு ஆபத்து: ஜான்பாண்டியன்

image

நெல்லையில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் இன்று (ஜூலை.19) செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், திருமாவளவன், கிருஷ்ணா சாமி, சீமான் போன்ற தலைவர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் எனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை, திமுக வந்தது அதை திரும்பபெற்றது. மேலும் தனக்கு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றார்.

News July 19, 2024

விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

image

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் வேளாண்மை இயந்திரமாக்குதல் திட்டத்தின் கீழ் 40,000 மானியத்தில் ரோட்டோ கல்வெட்டேரியை விவசாயி முருகேசனுக்கும், 10 லட்சம் மதிப்பிலான டிராக்டரை திருக்குறுங்குடி வாழை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவர் ஆறுமுகத்திற்கும் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று வழங்கினார். இதில் அலுவலர்கள் உடனிருந்தனர்.

News July 19, 2024

நாளை புதிய பேருந்துகள் இயக்கம்

image

நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்திலிருந்து 29 புதிய வழித்தடங்களுக்கு நாளை (ஜூலை 20) புதிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழக போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர், திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு, சுபாநாயகர் அப்பாவு ஆகியோர் இதனை துவக்கி வைக்கின்றனர். இந்நிகழ்ச்சியில் எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் மாநகராட்சி மேயர், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

News July 19, 2024

மாவட்டத்தில் 67 மில்லி மீட்டர் மழை பதிவு

image

தென்மேற்கு பருவமலை மேலும் தீவிரமடைந்துள்ளது. இதனால் தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி பகுதிகளை ஒட்டியுள்ள பகுதிகளில் மழை பெய்து வருகிறது.இந்நிலையில் நேற்று மத்திய மேற்கு மற்றும் அதனையொட்டிய வடமேற்கு வங்ககடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 67 மிமீ மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

News July 19, 2024

பள்ளிகளுக்கு இடையே ஹாக்கி போட்டி

image

நெல்லை மாவட்ட ஹாக்கி யூனிட் சார்பில், பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் நாளை (ஜூலை 20) பள்ளிகளுக்கு இடையேயான வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் ஹாக்கி போட்டி நடைபெற உள்ளது. 2 நாள் நடைபெறும் இந்தப் போட்டியில், 38 பள்ளி அணிகளை சேர்ந்த 648 வீரர் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். போட்டிகளை நெல்லை பயிற்சி கலெக்டர் அம்பிகா ஜெயின் துவக்கி வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!