India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கல்லூரி உதவி பேராசிரியர் பதிவிக்கான செட் தகுதி தேர்வு நடத்த நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனை அடுத்து கல்லூரி உதவி பேராசிரியர் பதவிக்கான செட் தகுதி தேர்வு வருகிற ஜூன் 7 மற்றும் 8ம் தேதி நடக்கிறது. தேர்வு மையம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என பல்கலைக்கழகம் சார்பில் நேற்று(மே 30) தெரிவிக்கப்பட்டது.
நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் கார்த்திகேயன் நேற்று கூறியதாவது, கர்ப்பிணிகள் தங்களது கர்ப்ப பதிவு தமிழ்நாடு அரசு தற்போது அறிமுகப்படுத்தியுள்ள பிக்மி 3.0 எனும் புதிய இணையதளம் மூலம் தாங்களாகவே பதிவு செய்யலாம். இந்த புதிய இணையதளத்தில் ஒவ்வொரு கற்பணியும் செவிலியர் இல்லாமலே கர்ப்ப பதிவை picme3.tn.
gov.in என்னும் இணையதளம் மூலம் பதிவு செய்து RCH – ID பெற்றுக் கொள்ளலாம் என்றார்.
மக்களைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. இதனால் நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், தங்கும் விடுதியுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் அன்று காலை 10 மணி முதல் இரவு 12 மணி வரை மூடபட்டிருக்கும் என நேற்று(மே 30) மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று(மே30) இரவு 12 மணி முதல் 36 மணி நேரம் மும்பையில் நடைமேடைகளை சீரமைக்கும் பணி நடப்பதால் தாதர்-மும்பை இடையே ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் தானே ரயில்நிலைய நடைமேடைகள் விரிவாக்கம் செய்யப்படுவதால் நேற்று(மே 30) இரவு 12 மணி முதல் ஞாயிறு(ஜூன் 2) இரவு வரை ரயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. எனவே நெல்லை மக்கள் அதற்கு ஏற்ப பயணங்களை திட்டமிட்டுக்கொள்ளலாம்.
திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சரும், தமிழக நிதி மற்றும் மனித வள மேம்பாட்டு துறை அமைச்சருமான தங்கம் தென்னரசு நாளை (மே 31) நெல்லைக்கு வருகை தர உள்ளார். அவர் நெல்லையில் கலைஞர் 101வது பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். அவரை வரவேற்பதற்கான பணிகளை நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் மைதீன்கான் தலைமையில் திமுகவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
திருநெல்வேலி ராணி அண்ணா அரசு மகளிர் கலை கல்லூரியில் புதிய கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு நடைபெற்று முடிந்துள்ளது. இதைத் தொடர்ந்து வருகிற ஜூன் 10ஆம் தேதி முதல் பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வு நடைபெறும் என கல்லூரி முதல்வர் மைதிலி அறிவித்துள்ளார். தொடர்ந்து 14 ஆம் தேதி வரை இந்த கலந்தாய்வு நடைபெறும். இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூன் 24ஆம் தேதி தொடங்கும் என தெரிவித்துள்ளார்.
நெல்லை ஆட்சியர் கார்த்திகேயன் நேற்று கூறியதாவது: மாவட்டத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவைபுரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு 2024ஆம் ஆண்டிற்கான சுதந்திர தின விழா விருது வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு தகுதியானவர்கள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தை நேரில் தொடர்புகொள்ளலாம் என தெரிவித்தார்.
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் நேற்று (மே 29) அரசு பேருந்தில் சென்ற பெண் காவலர்களை நடுவழியில் இறக்கிவிட்டுள்ளனர். நெல்லையிலிருந்து சென்ற அரசு பேருந்து வள்ளியூருக்குள் செல்லாமல் பெண் காவலர்கள் உள்ளிட்ட 4 பயணிகளை வள்ளியூர் புறவழிச் சாலையில் இறக்கி விட்டுள்ளனர். இதனை அடுத்து விதிகளை மீறிய அரசுப் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.
வருகிற 4ம் தேதி நெல்லை மக்களவைத் தொகுதிக்கான வாக்குகள் அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் அதிகாரிகள் செய்து வருகின்றனர். வாக்கு எண்ணிக்கையின் போது மையத்திற்குள் செல்போன் உள்ளிட்ட எந்த எலக்ட்ரானிக்ஸ் சாதனைகளுக்கும் அனுமதி கிடையாது என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த செய்யது அலி (48), சமூக ஆர்வலர் பெர்டின்ராயர் என்பவரை தனது ரியல் எஸ்டேட் தொழில் பிரச்சனை காரணமாக கூட்டாளிகள் மூலம் வெட்டிக் கொலை வெறி தாக்குதல் நடத்தினார். இவர் மீது மொத்தம் 12 வழக்குகள் உள்ள நிலையில் நேற்று மாநகர காவல் ஆணையர் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி குண்டர் தடுப்பு சட்டத்தில் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Sorry, no posts matched your criteria.