India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லையில் இன்று (ஜூலை 21) நடந்த அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள் பட்டமளிப்பு விழாவில் சிறப்புரையாற்றிய கூடங்குளம் அணு மின் நிலைய விஞ்ஞானி ஸ்ரீ ஜாய் வர்கீஸ் பேசுகையில், கூடங்குளம் அணு மின் நிலையத்தில் வெளியேற்றப்படும் வெப்பநீரால் கடல் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என பரப்பப்படும் தகவல் தவறானது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மிகவும் தரமான அளவில் அணுமின் நிலையம் கட்டமைக்கப்பட்டுள்ளது என்றார்.
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மேற்கு திசை காற்று மாறுபாடு காரணமாக, ஆங்காங்கு மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் கடந்த சில தினங்களாக இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் திருநெல்வேலி புறநகர் சப்-டிவிஷன் டிஎஸ்பியாக பணி செய்து வந்த பாலசுந்தரம் மதுரை ஊமச்சிகுளம் சப்-டிவிஷன் டிஎஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை டிஜிபி சங்கர் ஜிவால் பிறப்பித்துள்ளார்.
நெல்லை பத்திரிகையாளர்கள் மீது நெல்லை ஆட்சியர் விரோத போக்கை கடைபிடித்து பல்வேறு தவறான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற அரசு புதிய வழித்தட பேருந்துகள் துவக்க விழாவில் செய்தியாளர்கள் கருப்பு பட்டை அணிந்து செய்தி சேகரித்தனர். ஆட்சியரின் நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வருக்கும் செய்தித் துறை அதிகாரிகளுக்கும் புகார் தெரிவிக்க முடிவும் செய்துள்ளனர்.
நெல்லை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பரவலாக தொடர்ந்து பெய்து வருகிறது. இன்று (ஜூலை 21) காலை நிலவரப்படி மாவட்டத்தில் மொத்தம் 41 மி.மீ மழை பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதிகபட்சமாக ஊத்து பகுதியில் 14 மி.மீ மழை பெய்துள்ளது. நாலுமுக்கு பகுதியில 11 மி.மீ, காக்காச்சியில் 8 மி.மீ, மாஞ்சோலை மற்றும் சேர்வலாறு அணை பகுதியில் 3 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழக சட்டமன்ற மனுக்கள் குழு விரைவில் நெல்லை மாவட்டத்தில் ஆய்வு செய்ய உள்ளது. எனவே, தனிநபர், சங்கம், நிறுவனங்கள் குறைகள் குறித்த மனுக்களை தலைவர், மனுக்கள் குழு, சட்டப்பேரவை, சென்னை என்ற முகவரிக்கு நேரடியாகவோ மாவட்ட ஆட்சியர், வருவாய் அலுவலர் மூலமாகவோ ஆக., 5 ஆம் தேதிக்குள் அனுப்பலாம்” என தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் வரும் ஜூலை 30 ஆம் தேதி மாலை 4 மணிக்கு மீனவர்கள் குறை தீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் மீனவர்கள் தங்களுக்கு உள்ள குறைகள் மற்றும் தங்களது பகுதிகளில் உள்ள குறைகளை அரசு அலுவலரிடம் மனுக்களாக வழங்கலாம். மேலும் மனுக்களை துறைவாரியாக தனித்தனியாக வழங்க வேண்டும் எனவும் ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் நேற்று பாபநாசம் பகுதியில் 3 மி.மீ., சேர்வலாறு பகுதியில் ஒரு மி.மீ., மணிமுத்தாறு பகுதியில் 0.4 மி.மீ., மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள நாலுமுக்கில் 18 மி.மீ., ஊத்தில் 15 மி.மீ., காக்காச்சியில் 10 மி.மீ., மாஞ்சோலையில் 3 மி.மீ. என மொத்தம் 50.40 மி.மீ. மழை பதிவாக இருப்பதாக இன்று காலை மாவட்ட நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.
அம்பை அருகே மாஞ்சோலை பகுதியில் கனமழை எச்சரிக்கை உள்ளதாலும், சட்டம் ஒழுங்கு பராமரிப்பு அவசியம் கருதியும் நாளை 21 முதல் 23 ஆம் தேதி வரை (மூன்று நாட்களுக்கு) சுற்றுலா செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. மேலும் அப்பகுதியில் குடியிருக்கும் மக்களை தவிர்த்து வெளிநபர்கள் தனியார் வாகனங்கள் மற்றும் அரசு பேருந்தில் செல்லக்கூடாது என வனத்துறை இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
திருநெல்வேலி மண்டலத்தில் 47 காவல் ஆய்வாளர்களை சரக டிஐஜி பிரவேஷ்குமார் மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி திருநெல்வேலி தாலுகா காவல் நிலையத்திற்கு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஆய்வாளர் ராஜகுமாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிவந்திபட்டி காவல் நிலையத்திற்கு திருச்செந்தூர் காவல் ஆய்வாளர் சாந்தி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.