Tirunelveli

News October 10, 2024

நெல்லை, வள்ளியூர் வழியாக சிறப்பு ரயில்!

image

தீபாவளி மற்றும் நவராத்திரி பண்டிகை வரும் நிலையில், விடுமுறை கால கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை எழும்பூரில் இருந்து கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. இந்த ரயில் திருநெல்வேலி, வள்ளியூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்ல உள்ளது. இந்த சிறப்பு ரயிலானது (06193, 06194) வருகின்ற 10, 11, 12, 13 ஆகிய நாட்களில் இயங்க உள்ளது.

News October 10, 2024

சரஸ்வதி பூஜை: பூக்கள் விலை கிடுகிடு உயர்வு

image

சரஸ்வதி பூஜை மற்றும் நாளை மறுதினம் விஜயதசமி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதன் காரணமாக நெல்லை மொத்த பூ விற்பனை சந்தையில் நேற்று(அக்.,9) மாலை பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்தது. நேற்று முன்தினம் ஒரு கிலோ பிச்சி மற்றும் மல்லி 600 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், நேற்று காலை 800 ரூபாயாகவும், மாலை ஆயிரம் ரூபாயாகவும் உயர்ந்தது. இன்றும் விலை உச்சம் பெற வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

News October 10, 2024

நெல்லைக்கு வருகை தரும் முன்னாள் அமைச்சர்

image

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விக்கிரமசிங்கபுரம் நகரத்தில் இன்று (அக்.10) அதிமுக கொடியேற்ற நிகழ்ச்சி மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக அதிமுக பொருளாளரும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் நெல்லைக்கு வருகை தர உள்ளார். இதற்கான ஏற்பாட்டினை நெல்லை புறநகர் மாவட்ட அதிமுகவினர் செய்து வருகின்றனர்.

News October 10, 2024

தேவர் ஜெயந்தி விழாவிற்கு அழைப்பு

image

நெல்லையில் வரும் 30ஆம் தேதி 117வது தேவர் ஜெயந்தி விழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் ஜங்ஷன் வெற்றி விநாயகர் திருக்கோவிலில் 501 பால்குடம் மற்றும் 100 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் பவானி வேல்முருகன் நேற்று (அக்.09) அழைப்பு விடுத்துள்ளார்.

News October 10, 2024

முதலிடம் பிடித்த முதல்நிலை காவலருக்கு பாராட்டு

image

திருநெல்வேலி மாவட்ட அளவில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் அரசு ஊழியர்களுக்கான 1500 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் பங்கு பெற்று முதலிடம் பிடித்த முதல் நிலை காவலர் ரேணுகா தேவியை காவல் ஆணையாளர் ரூபேஸ் குமார் நேற்று (அக்.09) நேரில் அழைத்து பாராட்டி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இந்த நிகழ்வின் போது காவலர்கள் உடன் இருந்தனர்.

News October 10, 2024

வள்ளியூர் கல்வி அதிகாரி திடீர் ட்ரான்ஸ்பர்

image

நெல்லை மாவட்டம் வள்ளியூர் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) ஷெர்லின் விமல் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் மாவட்ட கல்வி அலுவலராக இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். இதுபோல் விழுப்புரம் மாவட்டம் தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலர் சாய் சுப்புலட்சுமி நெல்லை மாவட்ட இடைநிலை கல்வி அலுவலராக பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை பள்ளிக் கல்வி இயக்குனர் நேற்று (அக்.09) பிறப்பித்துள்ளார்.

News October 9, 2024

தேசிய தொழிற் பழகுனர் சேர்க்கை முகாம் – ஆட்சியர்

image

நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில்; பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 14ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பிரதம மந்திரி தேசிய தொழிற் பழகுனர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்று தேவையான இளைஞர்கள் இளம்பெண்களை தேர்வு செய்ய உள்ளனர். விருப்பமுள்ளவர்கள் தாங்கள் பயின்ற கல்வி சான்றுகளுடன் நேரில் பங்கேற்கலாம் என தெரிவித்துள்ளார்.

News October 9, 2024

தமிழ் வழியில் ஜப்பானிய மொழி பயிற்சி வகுப்பு

image

நெல்லை மாவட்ட நிர்வாகம் இன்று (அக்.9) வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ் வழியில் ஜப்பானிய மொழி கற்றுக் கொடுக்கப்படுகிறது. ஏதாவது ஒரு டிகிரி அல்லது ஐடிஐ முடித்திருக்க வேண்டும். இந்த பயிற்சி காலம் மூன்று மாதம் ஆகும். பதிவு செய்வதற்கு கால அவகாசம் வரும் அக்டோபர் 15ஆம் தேதி ஆகும். இந்த வகுப்பானது டிசம்பர் மாதம் தொடங்க உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் நேரில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

News October 9, 2024

குலசை செல்லும் நெல்லை பக்தர்கள் கவனத்திற்கு..!

image

குலசேகரபட்டினம் தசரா விழாவில் சூரசம்ஹார நிகழ்ச்சியை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வர். இதில் பங்கேற்க நெல்லை மக்களும் அதிகளவில் செல்வதுண்டு. இந்நிலையில், நெல்லையிலிருந்து செல்வோர் வாகனங்களை நிறுத்த தேவையான இட வசதி செய்யப்பட்டுள்ளது. குடிநீர் குழாய்கள், கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வேடமணிவோர் உலோக ஆயுதங்களை எடுத்து வரக்கூடாது என அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

News October 9, 2024

காவல்துறைக்கு நெல்லை முபாரக் வலியுறுத்தல்

image

திருப்பூர் மாவட்டம் பாண்டியன் நகர் சத்யா காலணியில் கார்த்திக் என்பவர் வீட்டில் சட்டவிரோதமாக தயாரித்த நாட்டு வெடிகுண்டு வெடித்து வீட்டின் அருகில் இருந்த 3 பேர் உயிரிழந்தனர். இது குறித்து எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த வழக்கில் காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!