India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் இன்று (ஜூன் 3) கூறியதாவது, நாளை வாக்கு எண்ணிக்கை முடிவுற்ற கட்டுப்பாட்டு அலகு, வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் விவிபாட் நெல்லை தாசில்தார் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள தேர்தல் ஆணைய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் விவிபேட்களுக்கான கிட்டங்கியில் பாதுகாப்பாக முத்திரையிடப்படும். ஆலங்குளம் தொகுதி இயந்திரங்கள் தாலுகா அலுவலகத்தில் வைக்கப்படும் என்றார்.
நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் இன்று (ஜூன் 3) கூறியதாவது, நாளை ஓட்டு எண்ணும் மையத்தில் செல்போன், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட மின்னணு சாதனங்களும் அனுமதிக்கப்பட மாட்டாது. வேட்பாளர்களின் முகவர்கள் பால்பாயிண்ட், பேனா, பென்சில், பேப்பர், சிறிய நோட்பேட், ஓட்டுப்பதிவு நாளன்று வாக்குச்சாவடி தலைமை அலுவலரால் வழங்கப்பட்ட 17சி படிவம் ஓட்டு எண்ணும் மையத்திற்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவர் என்றார்.
நாங்குநேரி நம்பி நகர் பகுதியில் நீர்நிலை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டு இருந்த 7 செங்கல் சூளைகளை நீர்வளத்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் இணைந்து இன்று (ஜூன் 3) அகற்றினர். இதன் மூலம் சுமார் 2.8 ஹெக்டேர் அரசு நிலம் மீட்கப்பட்டது. போலீஸ் டிஎஸ்பி பிரசன்ன குமார் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நெல்லை மாநகராட்சியில் பல ஆண்டுகளாக பணிபுரியும் டெங்கு கொசு ஒழிப்பு DBC ஊழியர்களுக்கு ஆட்சித் தலைவர் உத்தரவுப்படி சட்டப்படியான சம்பளம் வழங்க கோரியும் தொழிலாளர்களுக்கு கடந்த மே மாதம் வேலை பார்த்த நாட்களுக்கு மாநகராட்சி சம்பளம் வழங்காததை கண்டித்து சம்பளத்தை உடனே வழங்க கோரியும்
இன்று (ஜூன் 3) மாலை மாநகராட்சி ஆணையரிடம் முறையிட முடிவு செய்துள்ளனர்.
நாங்குநேரி சுங்கச் சாவடியில் சுங்கக் கட்டணம் நள்ளிரவு உயர்ந்ததால் வாகன ஓட்டிகள் வேதனை அடைந்தனர். நள்ளிரவு 12 மணிக்கு நாங்குநேரி சுங்கச் சாவடியில் கட்டணம் உயர்ந்தது. அதன்படி ஒரு வழி பயணத்திற்கு கார், ஜீப் கட்டணம் ரூ.110, மினி பஸ், வேன் ரூ.180, பேருந்து ரூ.375, மூன்று அச்சு வாகனங்கள் ரூ.410, நான்கு அச்சு வாகனங்கள் ரூ.590, ஏழு மற்றும் அதற்கு மேல் அச்சுகள் கொண்ட வாகனங்களுக்கு ரூ.715 என உயர்ந்தது.
திருநெல்வேலி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேச ராஜா இன்று தெரிவித்ததாவது, நாளை
வாக்கு எண்ணிக்கைக்கு செல்லும் முகவர்கள் 06.30 மணிக்குள் வாக்கு எண்ணும் அறைக்கு செல்ல வேண்டும். அதற்கு பின்னர் சென்றால் அனுமதிக்க மாட்டார்கள். சீக்கிரம் சென்றால்தான் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட டேபிள்களில் வாக்குப்பதிவு எந்திரம் நமது கண்ணில் தெரியும். கடைசி வரை முகவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றார்.
திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கு பதிவான வாக்குகள் நாளை (ஜூன் 4) பாளையங்கோட்டை அரசு பொறியியல் கல்லூரியில் எண்ணப்பட உள்ளது. இதற்காக ஏற்கனவே அந்தப் பகுதியில் ராணுவப் படையினர் உள்ளிட்ட மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று மாலை முதல் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படுகிறது. மொத்தம் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் இன்று (ஜூன் 2) தெரிவித்ததாவது, பார்லிமென்ட் தொகுதி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை 4-ம் தேதி நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது. இதனை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த பார்கள் மூடப்பட வேண்டும். இதனை மீறி மதுபானங்களை விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்த மகாராஜன் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து மூளை சாவு அடைந்தார். இதனைத் தொடர்ந்து அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. உறுப்பு தானம் செய்யப்பட்ட மகாராஜனின் உடலுக்கு இன்று (ஜூன் 2) நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அரசு மரியாதை செய்யப்பட்டது.
நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி வனச்சரகத்திற்கு உட்பட்ட நம்பி கோவில் வழிபாட்டுத்தலம் மற்றும் சூழல் சுற்றுலா பகுதிகளில் பொதுமக்கள் பக்தர்கள் செல்வதற்கு தடை விதிப்பதாகவும், மறு உத்தரவு வரும் வரை செல்ல வேண்டாம் என திருக்குறுங்குடி வனத்துறையினர் இன்று அறிவித்தனர். இன்று அங்குள்ள ஆற்றில் ஒரு சிறுவன் உயிரிழந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.