India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பாளையங்கோட்டையில் நடைபெற்று வரும் தசரா திருவிழாவில் முன்னிட்டு 12 சக்கரங்கள் நேற்று அணிவகுத்து நின்றன. இதில் நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன், பாளை., வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் துரைராஜ், முன்னாள் காங்கிரஸ் மாவட்ட தலைவர் தமிழ்செல்வன் பலர் கலந்து கொண்டனர்.

நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் நேற்று(அக்.,13) வெளியிட்ட அறிக்கையில், தண்ணீர் அதிகமாக தேங்கும் 72 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அங்கு தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள சிறப்பான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. விரைவில் வஉசி திடலில் மாநில மீட்பு குழு வீரர்கள் பங்கேற்கும் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்றார்.

நாகர்கோவிலில் இருந்து கச்சுகுடாவிற்கு நேற்று(அக்.,13) அதிகாலை 12.30 மணிக்கு புறப்பட வேண்டிய எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 10 மணி நேரம் தாமதமாக காலை 10:25 மணிக்கு புறப்பட்டு வந்தது. இணை ரயில் வருகை தாமதம் காரணமாக இந்த ரயில் நேற்று தாமதமாக இயக்கப்பட்டது. இதனால் நெல்லை, கோவில்பட்டி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் பயணிகள் வெகு நேரம் ரயில் நிலையங்களில் காத்துக் கிடந்தனர்.

தமிழ்நாட்டில் இன்று(அக்.,14) 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்திலும் காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 6 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில் பல மாவட்டங்களில் கனமழை கொட்டி சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்பது குறிப்பிடத்தக்கது. SHARE IT.

தமிழக அமைச்சர் கே.என்.நேரு திருநெல்வேலிக்கு முதல்முறையாக வந்ததால் பேட்டை பகுதி திமுக நிர்வாகிகள் திருநெல்வேலி பொறுப்பு அமைச்சரை சந்தித்து பொன்னாடை வழங்கினர். பேட்டை பகுதி சிறுபான்மை பிரிவு செயலாளர் எஸ்.ராஜகனி வழங்கினார். வர்த்தக அணி செயலாளர் முன்னாள் எம்எல்ஏ மாலை ராஜா மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் இன்று 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நெல்லை மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் உடனே பகிரவும்.

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி பண்டிகை என மூன்று நாட்கள் தொடர் விடுமுறை முன்னிட்டு சொந்த ஊர் சென்ற மக்களுக்காக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. நெல்லையில் இருந்து செங்கல்பட்டிற்கு இன்று (அக்.13) மாலை 5.40 மணிக்கு புறப்பட்டு நாளை அதிகாலை 3.30 மணிக்கு செங்கல்பட்டை அடையும். மறுமார்க்கமாக இதே ரயில் 14ஆம் தேதி புறப்பட்டு 15ஆம் தேதி நெல்லையை வந்தடையும் என தெற்கு ரயில்வே நேற்று (அக்.12) அறிவித்துள்ளது.

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் மின் தடம் மாற்றி அமைக்கும் பணிகள் காரணமாக பாலக்காடு – திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 15ஆம் தேதி முதல் நவம்பர் 22ஆம் தேதி வரை திங்கள் கிழமைகள் மற்றும் தீபாவளி நாள் அக்டோபர் 31 தவிர மற்ற நாட்களில் தாழையூத்து – திருச்செந்தூர் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என நேற்று (அக்.12) அறிவிப்பானது வெளியாகியுள்ளது.

பனகுடியை சேர்ந்த பால ரதீஷ் என்பவர் வெளிநாட்டில் வேலை வாங்கித் தரும் வகைக்கு ஒரு லட்ச ரூபாய் பணத்தை விஜிலகுமார் என்பவரிடம் கொடுத்துள்ளார். ஆனால் வேலை வாங்கி கொடுக்காமல் பணத்தை ஏமாற்றி உள்ளார். இதனால் பாலரதிஷ் நெல்லை மாவட்ட எஸ்பி சிலம்பரசனிடம் புகார் அளித்தார். இந்த புகார் பேரில் வழக்கு பதிவு செய்த குற்றப்பிரிவு போலீசார்பணத்தை ஏமாற்றிய விஜிலகுமாரை இன்று கைது செய்தனர்.

நெல்லை மாவட்ட காவல்துறை உங்கள் வீட்டை வாடகைக்கு கொடுக்கும்போது அந்த வீட்டில்அந்த நபர்கள் தான் குடியிருக்கிறார்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். வீட்டு உரிமையாளரின் அனுமதி இன்றி குத்தகைக்கு அல்லது வாடகைக்கு பெற்ற நபர் அவ்வீட்டினை உள் வாடகைக்கு கொடுப்பது சட்டப்படி குற்றமாகும் அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் இன்று தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.