India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் இன்று(அக்.,17) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைக்க தகுதி வாய்ந்த திட்ட மதிப்பில் 50% or ரூ.2.50 கோடி இவற்றில் எது குறைவோ அது அரசால் மானியமாக வழங்கப்படுகிறது. குறைந்தபட்சம் 2 ஏக்கர் நிலப்பரப்பில் 3 ஜவுளி உற்பத்தி தொழில் கூடங்கள் அமைக்கப்பட வேண்டும். இது குறித்த கூட்டம் 21ஆம் தேதி பிற்பகல் 5:30 மணிக்கு நடைபெறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் 53வது ஆண்டு துவக்க விழாவினை முன்னிட்டு வள்ளியூர் பேருந்து நிலையத்தில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சௌந்தரராஜன் தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வள்ளியூர் வடக்கு ஒன்றிய செயலாளர் லாசர், வள்ளியூர் பேரூர் கழக செயலாளர் பொன்னரசு உள்ளிட்ட அதிமுகவினர் பலரும் கலந்து கொண்டனர்.

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு நாளை மாத பிறப்பு முன்னிட்டு ஐப்பசி திருக்கல்யாண திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இதனை முன்னிட்டு நேற்று(அக்.16) சுவாமி சன்னதியில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் வெள்ள சப்பரத்தில் உலா வந்த காந்திமதி அம்மனை பக்தர்கள் தரிசித்தனர்.

தமிழகத்தில் தீபாவளி பண்டிகை மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதற்காக சென்னை கோவை உள்ளிட்ட நகரங்களில் வேலை பார்பவர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்புவர். இதனால் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பயணிகள் வந்து செல்ல வசதியாக நெல்லை, தென்காசி, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது. இதற்கான பரிந்துரையை தெற்கு ரயில்வே அனுப்பியுள்ளதாக நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உவரி கூட்டப்பனை பகுதிகளில் நேற்று ஆய்வு மேற்கொண்ட தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பா கூறுகையில், இந்த பகுதியில் கடுமையான கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மூலம் உங்கள் பகுதியில் தூண்டில் அமைப்பதற்கு ரூ 45 கோடியில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, அதற்கான நிதி இன்னும் அரசிடம் இருந்து பெறப்படவில்லை. கடற்கரை அருகில் உள்ள ஆலயம் கூட பாதிப்படைந்துள்ளது என்றார்.

அதிமுகவின் 53வது ஆண்டு தொடக்க விழாவை இன்று (அக்.15) அதிமுகவினர் மிக சிறப்பாக கொண்டாட உள்ளனர். அதையொட்டி ஸ்ரீ நெல்லையப்பர் கோவிலில் அதிமுக சார்பில் மதியம் அன்னதான நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை நெல்லை மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் அதிமுகவினர் செய்து வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை தினமும் பொதுமக்கள் பயனுக்காக இரவு நேர ரோந்து அதிகாரிகள் விபரங்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று (அக்.16) இரவு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. துணை காவல் கண்காணிப்பாளர் சதீஷ்குமார் தலைமையில் காவலர்கள் பெயர்கள் அவர்களின் தொடர்பு எண் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள மாவட்ட காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பு உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய உதவி மைய தொலைபேசி எண்களை மாவட்ட நிர்வாகம் இன்று (அக்.16) அறிவித்துள்ளது. இந்த எண்களை பயன்படுத்தி பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவேந்திரகுல வேளாளர் எழுச்சி இயக்கத்தின் நிறுவன தலைவர் கண்ணபிரான் இன்று (அக்.16) பல்வேறு ஆயுதங்கள் வைத்திருந்ததாக பாளையங்கோட்டை தாலுகா போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் அவர் எவ்வித சம்பந்தமின்றி கைது செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்தி வைரலாகி வரும் நிலையில், மாவட்ட காவல்துறை தவறான செய்திகள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு குற்ற செயல்கள் குறித்தும், மோசடிகள் குறித்தும், கஞ்சா போதை பொருட்கள் உள்ளிட்டவை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இன்று மது போதையில் வாகனம் ஓட்டாதீர், சாலை விதிகளை மதிப்போம், விபத்தினை தடுப்போம் என புகைப்படத்துடன் விழிப்புணர்வு ஏற்படுத்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.