Tirunelveli

News August 1, 2024

நெல்லை – மும்பை ரயில்கள் வழக்கமான பாதையில் இயங்கும்

image

நெல்லை வழியாக இயக்கப்படும் மும்பை ஜிஎஸ்டி – நாகர்கோவில் ரயில் பராமரிப்பு பணி காரணமாக மாற்றுப் பாதையில் இயங்கும் என ஏற்கனவே தென்னக ரயில்வே அறிவித்திருந்தது. இந்த நிலையில் இந்த ரயில் இன்று(ஆக.1) வழக்கமான பாதையிலேயே இயக்கப்படும். இதுபோல் குமரி – புனே விரைவு ரயிலும் வழக்கமான பாதைகளில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

News August 1, 2024

தமிழ் செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

தமிழ் வளர்ச்சிக்கு அரும்பாடு படும் ஆர்வலர்களுக்கு தமிழ் செம்மல் என்ற பெயரில் மாவட்டத்திற்கு ஒருவருக்கு விருது மற்றும் 25 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்பட உள்ளது. விண்ணப்பங்களை தமிழ் வளர்ச்சித் துறையின் இணையதளத்தில் பதிவிறக்கி பூர்த்தி செய்து ஆகஸ்ட் 10ஆம் தேதி மாலை 5 மணிக்குள் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சித் துணை இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 1, 2024

மாநில அளவிலான ஹாக்கி போட்டி தொடக்கம்

image

பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான ஹாக்கி போட்டி நாளை மறுநாள் (ஆகஸ்ட் 2) தொடங்குகிறது. திருநெல்வேலி ஹாக்கி யூனிட் சார்பில் நடத்தப்படும் இந்த போட்டியானது நாளை மறுநாள் தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இதில் நெல்லை, கோவை, சிவகாசி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த எட்டு அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன என மாவட்ட ஹாக்கி சங்கத் தலைவர் சேவியர் சற்குணம் இன்று தெரிவித்துள்ளார்.

News August 1, 2024

காரையார் செல்ல இரண்டாவது நாளாக தடை விதிப்பு

image

காரையார் சொரிமுத்தையனார் கோயில் ஆடி அமாவாசை திருவிழா வரும் 4ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி திருவிழா முன்னேற்பாடு மற்றும் தூய்மை பணிகள் மேற்கொள்ளும் காரணமாக காரையார், அகஸ்தியர் அருவி பகுதிகளுக்கு அரசு பேருந்து, தனியார் வாகனங்கள் பாபநாசம் வன சோதனை சாவடியை கடந்து செல்ல இரண்டாவது நாளாக இன்று சார் ஆட்சியர் உத்தரவின்படி வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

News August 1, 2024

ஒரே நாளில் ஆறு பேர் மீது பாய்ந்த குண்டாஸ்

image

வாகைகுளத்தைச் சேர்ந்த தீபக் ராஜாவை கடந்த மே 20ஆம் தேதி பாளை நான்கு வழிச்சாலை அருகே ஓட்டல் முன்பு ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தது. இந்த கொலையில் தொடர்புடைய நவீன், முருகன், பவித்தன், காசிராமன், முத்து இசக்கி, ஐயப்பன் ஆகிய ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் ஆறு பேரையும் கமிஷனர் மூர்த்தி உத்தரவின் பேரில் குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்து நேற்று(ஜூலை 31) மதுரை சிறையில் அடைத்தனர்.

News July 31, 2024

பெண்களுக்கு மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு

image

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் இன்று விழிப்புணர்வு பதிவை வெளியிட்டுள்ளனர். அதில், “ இரு சக்கர வாகனங்களில் பெண்கள் பின்னால் அமர்ந்து பயணிக்கும்போது, தங்களுடைய ஆடைகள் சேலை மற்றும் துப்பட்டாவை காற்றில் பறக்காதபடியும், வண்டியின் சக்கரத்தில் ஆடைகள் சிக்காதபடியும் கவனமாக இருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.

News July 31, 2024

ரூ.15,000 பரிசு பெற வாய்ப்பு: கலெக்டர் தகவல்

image

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு திருக்குறள் முற்றோதல் போட்டி நடைபெற உள்ளது. வெற்றி பெறும் மாணவர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகை மற்றும் பாராட்டு சான்று வழங்கப்படும். விண்ணப்பத்தை தமிழ் வளர்ச்சித் துறை அலுவலகத்தில் பெற்று 16ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News July 31, 2024

பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களுக்கு தடை – அப்பாவு

image

ராதாபுரம் எம்எல்ஏவும் சபாநாயகருமான அப்பாவு இன்று தமிழக முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளார். அதில், “சீனா பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களுக்கு தடை விதித்து அறிவிப்பு வெளியிட வேண்டும். சீனா லைட்டர்களுக்கு தடை விதித்தாலும் வடநாட்டு நிறுவனங்கள் லைட்டர் மூலப்பொருட்களை இறக்குமதி செய்து தயாரிக்கின்றனர். இதனால் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு நடவடிக்கை வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

News July 31, 2024

மின்வாரிய குறைதீர்க்கும் கூட்டங்கள் அறிவிப்பு

image

திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்தில் வருகின்ற ஆகஸ்ட் மாதம் குறைதீர்க்கும் கூட்டம் தேதிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகின்ற 2 ஆம் தேதி வள்ளியூர் கோட்ட அலுவலகத்திலும், 6 ஆம் தேதி கல்லிடைக்குறிச்சி கோட்ட அலுவலகத்திலும், 9 ஆம் தேதி கிராமப்புற திருநெல்வேலி கோட்ட அலுவலகத்திலும் நடைபெற உள்ளதாக மேற்பார்வை பொறியாளர் அறிவித்துள்ளார்.

News July 31, 2024

தமிழ்நாட்டில் மீண்டும் ‘கள்’? (1/2)

image

சமீபகாலமாகவே ‘கள்’ இறக்குவதற்கான தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பிலிருந்தும் முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக அண்ணாமலை, சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும் இதற்கு ஆதரவு தெரிவிப்பதுடன், பலதரப்பு போராட்டங்களும் முன்னெடுக்கப்படுகிறது. இந்நிலையில், ‘கள்’ விற்பனை மீதான தடையை நீக்க கோரிய மனுவை அரசு பரிசீலிக்க சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!