Tirunelveli

News June 12, 2024

10 நாள் கொண்டாட்டம் நாளை தொடக்கம்: சிறப்பு பஸ் ஏற்பாடு

image

திருநெல்வேலி மாநகர மாவட்ட மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் 10 நாள் கொண்டாட்டமான ஆனி பெரும் தேர்த்திருவிழா நாளை (ஜூன் 13) நெல்லையப்பர் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. 21 ஆம் தேதி தேர் திருவிழாவுக்காக அதிக மக்கள் கூடுவார்கள் என்பதால் முக்கிய பகுதிகளில் இருந்து அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News June 12, 2024

கடல் சீற்றம் எச்சரிக்கை: தீவிர கண்காணிப்பு

image

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று (ஜூன் 12) முதல் நாளை இரவு வரை கடல் சீற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. “கள்ளக் கடல்” என அழைக்கப்படும் இந்த கடல் அலை 2.6 மீட்டர் வரை உயரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் நெல்லை மாவட்ட கடலோரப் பகுதிகளை பாதுகாப்பு படையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

News June 12, 2024

நெல்லை மாவட்டத்தில் மழை குறைந்தது

image

நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் இன்று தெரிவித்ததாவது, நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை பரவலாக மழை பெய்து வந்தது. தற்போது மழை குறைந்துள்ளது. இன்று காலை வரை மாவட்டத்தின் நாலு முக்கு பகுதியில் 4, ஊத்து பகுதியில் 3 உட்பட மொத்தம் ஏழு மில்லி மீட்டர் மழை மட்டும் பெய்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

News June 12, 2024

நெல்லையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு

image

திருநெல்வேலியில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (மதியம் 1 மணி வரை) லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. நேற்று நள்ளிரவு முதல் நெல்லையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ததால், கோடை வெயிலில் இருந்து பொதுமக்கள் சற்று நிமமமதி பெருமூச்சு விட்டனர்.

News June 12, 2024

நெல்லை கலெக்டர் சென்னை பயணம்

image

சென்னையில் கலெக்டர்கள் கூட்டம் மண்டல வாரியாக 11, 13, 15, 19ஆம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி ஜூன் 15இல் நடைபெறும் கூட்டத்தில் திருச்சி, புதுகை, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, தென்காசி மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்கின்றனர். இக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் 15ம் தேதி சென்னை செல்கிறார்.

News June 12, 2024

நெல்லை: பத்திரத்தை மீட்டெடுத்த போலீசார்

image

அம்பை அடுத்த வி.கே.புரம் டாணா பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான ரவிக்குமாருக்கு சொந்தமான அசல் உயில் பத்திரம் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்ததை துரிதமாக கண்டுபிடித்துக் கொடுத்து ஊனமுற்றோர் வாழ்வில் ஒளி விளக்கேற்றி வைத்த விக்கிரமசிங்கபுரம் காவல் ஆய்வாளர் சுர்ஜித் ஆனந்த், உறுதுணையாக இருந்த எஸ்ஐ ஆறுமுகம் மற்றும் காவல் துறையினருக்கு அவரது குடும்பம் சார்பில் இன்று நன்றி தெரிவித்தனர்.

News June 11, 2024

பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

image

நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் கார்த்திகேயன் இன்று (ஜூன் 11) தெரிவித்ததாவது, நெல்லை மாவட்டத்தில் விளையாட்டில் சிறந்து விளங்குபவர்களுக்கு மத்திய அரசு சார்பில் பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்களை வரும் 28ஆம் தேதிக்குள் இணையதளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். இது சம்பந்தமாக மேலும் விபரங்களுக்கு மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தார்.

News June 11, 2024

திருநெல்வேலியில் லோக் அதாலத் சிறப்பு நீதிமன்றம்

image

இந்திய உச்ச நீதிமன்றம் 2024 ஜூலை 29 முதல் ஆகஸ்ட் மூன்று வரை சிறப்பு லோக் அதாலத் வாரத்தை ஏற்பாடு செய்துள்ளது. இந்த சிறப்பு லோக் அதாலத்தின் நன்மைகள், விரைவான சமரசம் மற்றும் சர்ச்சைகளை தீர்ப்பது மற்றும் சர்ச்சைகளுக்கு செலவு குறைந்த தீர்வினை அளிப்பதாகும். எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி
கொள்ள திருநெல்வேலி மாவட்ட முதன்மை நீதிபதி இன்று (ஜூன் 11) அறிக்கை மூலம் கேட்டுக் கொண்டனர்.

News June 11, 2024

நெல்லை ஆசிரியர்கள் முடிவு

image

தேசிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை (NHIS) தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும், கட்டணமில்லா சிகிச்சை உறுதிப்படுத்த வேண்டும், அரசாணையில் தெரிவிக்கப்படாத மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றாலும் தொகையை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஜூன் 13 மாலை நெல்லை தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் பால்ராஜ் தெரிவித்துள்ளார்.

News June 11, 2024

நெல்லை மாவட்ட காவல்துறை அறிவிப்பு

image

சைபர் குற்றவாளிகள் பல்வேறு வகையான மோசடிகளில் ஈடுபடுகின்றனர். இதில் அழகு, இனிமையான பேச்சுக்கள் மூலம் மக்களை கவர்ந்து வலையில் விழச்செய்து பிளாக்மெயில் செய்கின்றனர். இதில் பாதிக்கப்பட்டால் https://cybercrime. gov.in/ ல் புகார் அளிக்கவும். மேலும் 1930 என்ற சைபர் கிரைம் இலவச எண்ணிலும் புகார் அளிக்கலாம் என்று இன்று (ஜூன் 11) வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் நெல்லை மாவட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!