Tirunelveli

News June 13, 2024

நெல்லைக்கு வருமா அரசு செயற்கை கருத்தரித்தல் மையம்

image

தமிழகத்தில் முதன் முறையாக எழும்பூர் அரசு மருத்துவமனையில் செயற்கை கருத்தரித்தல் மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதை போல் தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் நெல்லை மாவட்டத்திலும் தொடங்கப்பட வேண்டும் என நெல்லை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் இரண்டாவது கருத்தரிப்பு மையம் தொடங்குவதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News June 13, 2024

மின்சார வாரியத்தை தனியாரிடம் அளிக்க கடும் எதிர்ப்பு

image

தமிழ்நாடு ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர்கள் நலச் சங்க மாநில செயற்குழு கூட்டம் பாளை தியாகராஜ நகரில் உள்ள CITU அலுவலகத்தில் வைத்து இன்று (ஜூன் 13) நடைபெற்றது. மாநிலத் தலைவர் சுப்பிரமணியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் மாநில துணை பொதுச்செயலாளர் ராமநாதன் பாலசுப்ரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். மின்சார வாரியத்தை தனியாரிடம் தாரை வார்க்க கூட்டத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

News June 13, 2024

ஜெயக்குமார் வழக்கு: விரைவில் சிக்கும் குற்றவாளிகள்

image

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் உயிரிழந்த மர்ம வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிபிசிஐடி எஸ்பி முத்தரசி தலைமையில் பல்வேறு கட்ட விசாரணை நடைபெற்ற முடிவடைந்த நிலையில் இன்று (ஜூன் 13) எஸ்பி முத்தரசி தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதன் காரணமாக இன்னும் சில நாட்களில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவார்கள் என கருதப்படுகின்றது.

News June 13, 2024

நெல்லை: கூட்டுறவு பயிற்சி மாணவர் சேர்க்கை

image

திருநெல்வேலி மேடை தளவாய் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி மையத்தில் நடப்பு ஆண்டிற்கான கூட்டுறவு மேலாண்மை பட்டய முழுநேர பயிற்சி வகுப்புக்கு மாணவர்கள் சேர்க்கை வருகிற ஜூலை 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கல்வித் தகுதி பிளஸ் 2 தேர்ச்சியாகும். விருப்பம் உள்ளவர்கள் tncu.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என திருநெல்வேலி மண்டல கூட்டுறவு இணைப் பதிவாளர் அறிவித்துள்ளார்.

News June 12, 2024

திருநெல்வேலியில் உதவி காவல் ஆய்வாளர்கள் மாற்றம்

image

திருநெல்வேலி மாவட்டத்தில் 29 காவல்துறை உதவி ஆய்வாளர்களை மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் இன்று (ஜூன் 12) உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி உதவி ஆய்வாளர் நஸ்ரின் திருநெல்வேலி தாலுகா காவல் நிலையத்தில் இருந்து தேவர்குளம் தாலுகா காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் 29 காவலர்கள் பல்வேறு காவல் நிலையங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

News June 12, 2024

நெல்லையில் இன்றைய அரசியல் போஸ்டர்..!

image

தமிழிசை சவுந்தராஜன் அவர்களை, மேடையில் வைத்து மத்திய அமைச்சர் அமித்ஷா கண்டித்தது போன்ற வீடியோ வைரலானது. இந்நிலையில் அமித்ஷாவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து நெல்லை நாடார் மகாஜன சங்கம் சார்பில் கண்டனம் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக பேசிய நெல்லை மாவட்ட நாடார் மகாஜன சங்க தலைவர் அசோகன், எங்களது சங்கத்தில் இருந்து அதிகாரப்பூர்வமான போஸ்டர் இது இல்லை என விளக்கம் அளித்துள்ளார்.

News June 12, 2024

மருத்துவமனையில் அடிக்கடி ஏற்படும் பழுது

image

திருநெல்வேலி அரசு பல்நோக்கு மருத்துவமனையில் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனையில் பொதுமக்கள் மற்றும் நோயாளிகளின் வசதிக்காக மூன்று மின் தூக்கிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு மின் தூக்கி அடிக்கடி பழுது ஏற்படுவதால் மீதமுள்ள இரண்டு மின் தூக்கி மட்டுமே செயல்பட்டு வருகின்றது. இதன் காரணமாக மக்கள் பெரிதும் அவதி அடைந்துள்ளனர். இதை சரி செய்ய பலர் கோரிக்கை வைத்துள்ளனர்.

News June 12, 2024

கண்டுபிடிக்கப்படாத குற்றவாளிகள்

image

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்து இன்றுடன் (ஜூன் 12) 41 நாட்கள் ஆகின்றது. இந்த நிலையில் முதல் கட்டத்தில் மாவட்ட காவல்துறையினர் இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில் சிபிசிஐடிக்கு இந்த கொலை வழக்கு மாற்றம் செய்யப்பட்டது. இருப்பினும் இதுவரை 41 நாட்கள் ஆகியும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

News June 12, 2024

ஆணையரிடம் எஸ்டிபிஐ கட்சியினர் மனு

image

தமிழகத்தில் கலவரம் செய்தால் தான் பாஜகவை வளர்க்க முடியும் என்ற இந்து முன்னணி நிர்வாகி மற்றும் பாஜக நிர்வாகிகள் பேசிய ஆடியோ வைரலான நிலையில் இன்று (ஜூன் 12) எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாநகர மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி தலைமையில் மாநகர காவல் ஆணையாளரிடம் கலவரத்தை தூண்ட நினைக்கும் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர். இதில் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News June 12, 2024

ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு

image

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜூன் 12) குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. அதனை தொடர்ந்து குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு குறித்து கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார். இதில் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

error: Content is protected !!