Tirunelveli

News June 18, 2024

நெல்லை: நாளை நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு

image

நெல்லை மாவட்டம் வி.கே.புரத்தில் நாளை அகத்தியர் மீட்பு குழு சார்பாக அகத்தியர் அருவியில் குளிப்பதற்கு கட்டணம் வசூலிப்பது மற்றும் சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்லும் வனப்பாதையை மூடிய வனத்துறையை கண்டித்து என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் போராட்டம் நடைபெறுகிறது. இதற்கு ஆதரவாக எஸ்டிபிஐ நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட தலைவர் பீர் மஸ்தான் இன்று(ஜூன் 18) தெரிவித்துள்ளார்.

News June 18, 2024

நெல்லை: அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள்

image

திருநெல்வேலி மாவட்டத்தில் 169 அரசுப் பேருந்து ஓட்டுநர் மற்றும் 290 நடத்துநர் பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு தொடங்கியுள்ளதாக போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை தனியார் ஏஜென்சிகள் மூலம் நிரப்ப அரசு உத்தரவிட்டிருந்த நிலையில் ஆட்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.

News June 18, 2024

நெல்லையப்பர் கோயில் திருவிழா: தீவிர கண்காணிப்பு

image

வரலாற்று சிறப்புமிக்க நெல்லையப்பர் – காந்திமதி அம்மன் திருக்கோயில் ஆனி பெருந்தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு கோயில் உள் பிரகாரங்கள், வெளி பிரகாரங்கள், ரத வீதிகள் உள்ளிட்ட பகுதிகளை 150 கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். மேலும் மொபைல் கேமரா வேன் மூலமும் ரத வீதியை சுற்றி வந்து கண்காணிக்கின்றனர்.

News June 17, 2024

நெல்லையில் இதுவும் தான் பேமஸ்

image

நெல்லைக்கு அல்வா மட்டும் இல்ல படுத்து தூங்கும் பாயும் பேமஸ் தாங்க. இது சேரன்மகாதேவிக்கு அருகில் உள்ள பத்தமடையில் தயார் செய்யப்படுகிறது. நெல்லை வரும் விஐபிகளுக்கு, நினைவுப் பரிசாக “பத்தமடை பாய்” வழங்கப்படும். இங்கிலாந்தில் உள்ள அரண்மனையில் அலங்கார பொருளாகவும், ஒரு முறை இப்பாயை பார்த்து விக்டோரியா மகாராணியே வியந்துள்ளார். இப்பாயிக்கு 2013ஆம் ஆண்டு இதற்கு புவிசார் குறியீடு கிடைத்தது.

News June 17, 2024

”மாஞ்சோலையை அரசே எடுத்து நடத்த வேண்டும்”

image

நெல்லையில் இன்று சிபிஎம் மாநிலச்செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். பேசிய அவர், மாஞ்சோலையை தமிழ்நாடு அரசு எடுத்து நடத்த வேண்டும். மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை மூடுவது என்பது தீர்வாக இருக்காது. தமிழ்நாடு அரசு தேயிலை தோட்டத்தை எடுத்து நடத்த வேண்டும். மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு நிரந்தரமான வேலைவாய்ப்பை வழங்க வேண்டும். தற்போது கொடுக்கப்படும் நிதி அவர்களுக்கு போதுமானதாக இருக்காது என்றார்

News June 17, 2024

நெல்லை: பாதி விலையில் உர விதைகள் வழங்க ஏற்பாடு

image

நெல்லை வேளாண் இணை இயக்குநர் முருகானந்தம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், முதலமைச்சரின் “மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்” திட்டத்தின் கீழ் நெல்லை விவசாயிகளிடம் பசுந்தாள் உர பயன்பாட்டை அதிகரிப்பதற்காக 50% மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு ஏக்கருக்கு அதிகபட்சம் 20 கிலோ பசுந்தாள் உர விதைகள் வழங்கப்பட உள்ளன. விவசாயிகள், உழவர் செயலி, வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் பதிவு செய்து பயன்பெறலாம்.

News June 16, 2024

நெல்லை: ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

image

நெல்லை மாவட்ட சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டு மிரட்டலை அடுத்து நெல்லை மாநகர வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மோப்ப நாய் உதவியுடன் அங்கு தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் தீவிர சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர்.

News June 16, 2024

திருநெல்வேலியில் ஆர்ப்பாட்டம்

image

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்குள் புகுந்து மார்க்சிஸ்ட், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினரை தாக்கியவர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சார்பில், நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. நெல்லை மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.

News June 16, 2024

கொலை மிரட்டல் விடுத்த பாஜக நிர்வாகி கைது

image

பாளை பகுதியைச் சேர்ந்த வள்ளிநாயகம் கடந்த 6ம் தேதி தச்சநல்லூர் சிவன் கோயில் அருகே மோட்டார் சைக்கிளில் நின்ற போது அங்கு வந்த ஊருடையான்குடியிருப்பை சேர்ந்த சிவபெருமாள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்து சென்றார். இது குறித்து வள்ளிநாயகம் தச்சநல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிவபெருமாளை நேற்று கைது செய்தனர். இவர் பாஜக நிர்வாகி ஆவார்.

News June 15, 2024

நெல்லை: மிளகாய் பொடி தூவி தாலி செயின் பறிப்பு

image

நெல்லை மாவட்டம் தெற்கு கள்ளிக்குளம் அருகே இன்று(ஜூன் 15) வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள் மிளகாய் பொடி தூவி தாலி செயினை பறித்து சென்றுள்ளனர். சிறில் என்பவரது வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள் அவரது மனைவியை கத்தியைக் காட்டி மிரட்டி, அவர் மீது மிளகாய் பொடி தூவி 9 பவுன் தாலி செயினை பறித்து சென்றனர். வள்ளியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து சிசிடிவி வீடியோக்களை ஆராய்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!