India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு(ஜூன் 22, 23, 24) இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, நெல்லை மாவட்டத்தில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், கவனத்துடன் வாகனம் ஓட்டுபடியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நெல்லையப்பர் அருள் தரும் காந்திமதி அம்பாள் திருக்கோயில் தேரோட்ட விழா இன்று(ஜூன் 21) காலை கோலாகலமாக தொடங்கியது. முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் என தேரை வடம் பிடித்து இழுக்கும்போது 3 வடம் அறுந்து விழுந்தது. இதனை 1 மணி நேரத்தில் சரிசெய்து பணி தீவிரமாக நடைபெற்று முடிந்த நிலையில், தேரை வடம் பிடித்து இழுத்தபோது 4வது வடமும் அறுந்து விழுந்தது. இதனால் மீண்டும் தேர் இழுப்பது தாமதமாகியுள்ளது.
நெல்லையில் புகழ்பெற்ற நெல்லையப்பர் – காந்திமதி அம்பாள் திருக்கோயில் ஆனி தேரோட்டம் இன்று(ஜூன் 21) காலை கோலாகலமாக தொடங்கியது. மாவட்ட ஆட்சியர், எம்பி, மேயர் மற்றும் முக்கிய நிர்வாகிகள், பொதுமக்கள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது தேரின் வடம் திடீரென அறுந்தது. இதை தொடர்ந்து வடத்தை மாற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருநெல்வேலி மாநகரின் மிக முக்கிய நிகழ்ச்சியாக ஆண்டுதோறும் நடைபெறும் சுவாமி நெல்லையப்பர் – காந்திமதி அம்மன் கோயில் ஆனி தேர் திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்ற வந்தி நலையில் தேரோட்டம் இன்று(ஜூன் 21) நடைபெறுகிறது. இதை முன்னிட்டு காலை 6 மணிக்கே பக்தர்கள் திரண்டனர். 6.30 மணிக்கு பல்வேறு பாராயணங்கள் பாட சிறப்பு பூஜைகளுடன் தேரோட்டம் தொடங்கியது.
நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் இன்று (ஜூன் 20) விடுத்துள்ள அறிக்கையில், நெல்லை மாவட்டத்தில் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் தனிநபர் கடன் சுய உதவி குழு சிறு கடன் கைவினை கலைஞர்களுக்கான கடன் கல்வி கடன் வழங்கப்படுகின்றன. தகுதி உள்ளவர்கள் கலெக்டர் அலுவலக 3வது தளத்தில் இயங்கும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மண்டல கூட்டுறவு சங்க இணை பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை வழங்கலாம்.
திருநெல்வேலி மாநகர டவுன் நெல்லையப்பர் திருக்கோவில் ஆனித்திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு நாளை (ஜூன் 21) நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வரும் ஜூன் 29ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ராகுல் காந்தியின் 54வது பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகத்திற்கு சென்று ராகுல் காந்தியை நேற்று(ஜூன் 19) மாலை நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். மாவட்டத் தலைவரிடம் கட்சி பணிகளை நன்றாக தொடர்ந்து பணியாற்றவும் அறிவுறுத்தினார்.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு நெல்லை உட்பட 3 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால், பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.
நெல்லை மாநகர டவுன் நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோவிலில் 518வது ஆனி தேரோட்டம் வருகின்ற 21ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் பாதுகாப்பு பணிக்காக திருநெல்வேலி மாநகர, வெளி மாவட்ட காவல் துறையினர் என சுமார் 1500 பேர் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் மூர்த்தி தலைமையில் பணியமர்த்தப்பட உள்ளனர். மேலும் 147 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு நெல்லை உட்பட 4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால், பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.