India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று(அக்.28) வெளியிட்ட தீபாவளி திருநாள் முன்னெச்சரிக்கை அறிவுரைகள்; அதிக ஒலி எழுப்பும் மற்றும் ஆபத்தான பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்கவும். குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் போது பெரியவர்கள் கண்காணிக்க வேண்டும். மின் வயர் இல்லாத திறந்த வெளியில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். பயன்படுத்திய பட்டாசுகளை குப்பை தொட்டியில் போட்டு அப்புறப்படுத்தவும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

பாபநாசத்தில் சபாநாயகர் அப்பாவு இன்று(அக்.,28) அளித்த பேட்டியில், நடிகர் விஜய்க்கு எனது வாழ்த்துகள். புஸ்ஸி ஆனந்தை கிரிமினல் என விஜயின் தந்தை கூறியிருக்கிறார். அவரை எப்படி கட்சியின் பொதுச்செயலாளராக ஆக்கினார் என தெரியவில்லை. வருமான வரித்துறையினரிடம் சிக்கியபோது நடிகர் விஜய்க்கு ஆதரவாக திமுகதான் குரல் கொடுத்தது. ஒருவர் மற்றவரை குறை சொல்லும்போதுதான் உண்மையாக இருக்க வேண்டும் என்றார்.

நெல்லை அரசு போக்குவரத்துக் கழக மண்டல இயக்குநர் தசரதன் உத்தரவுப்படி, கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் செல்லும் பக்தர்கள் வசதிக்காக அங்குள்ள பகத்சிங் பேருந்து நிலையத்திலிருந்து கோயில் நாழிக்கிணறு பஸ் நிலையம் வரை ரூ.10 கட்டணத்தில் சர்க்கிள் பஸ் இயக்கம் இயக்கப்படுகிறது. இந்த பஸ்ஸில் பெண்கள், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் கிடையாது. நெல்லை பக்தர்கள் இதை பயன்படுத்திக்கொள்ளலாம்.

நெல்லை மாவட்ட எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை( அக்.,29) மாலை 5 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா தலைமை தாங்குகிறார். எரிவாயு ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்கின்றனர். இதில் எரிவாயு நுகர்வோர் பங்கேற்று தங்கள் குறைகளை தெரிவித்து தீர்வு பெறலாம் என டிஆர்ஓ தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகை முன்னிட்டு சென்னை, கோவை பகுதிகளில் இருந்து நெல்லை வருபவர்களுக்கு வசதியாக இன்று(அக்.,28) பிற்பகல் 3 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து AC சிறப்பு ரயில்(06073) நெல்லைக்கு புறப்படுகிறது. இந்த ரயில் காட்பாடி, சேலம், திருப்பூர், கோவை, பொள்ளாச்சி வழியாக நாளை காலை 7:15 மணிக்கு நெல்லை வரும். இதற்கு முன்பதிவு நடக்கிறது. SHARE IT.

தேவர் ஜெயந்தி விழா அக்டோபர் 30 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் நெல்லையில் 501 பால்குடம் ஊர்வலமும், 1000 பேருக்கு அன்னதானம் நிகழ்ச்சியும் ஜங்ஷனில் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் பவானி வேல்முருகன் இன்று அழைப்பு விடுத்துள்ளார்.

நெல்லை ப்ரூஸ் எம்பி புரூஸ் இன்று(அக்.,28) பங்கேற்கும் நிகழ்ச்சி விவரங்கள். ➤காலை 9:30 மணிக்கு பாபநாசம் அணை திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். ➤தொடர்ந்து முகிலன்விளை திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். ➤மதியம் 12:30 மணிக்கு இடிந்தகரை மீனவர்களுடன் சந்திக்கிறார். ➤மாலை 5 மணிக்கு களக்காடு சிஎஸ்ஐ கிறிஸ்தவ ஆலய சபை ஊழியர் இல்ல விழாவை தொடர்ந்து அசன பண்டிகையில் பங்கேற்கிறார்.

நெல்லை வழியாக குமரியில் இருந்து புதுச்சேரி செல்லும் வாராந்திர விரைவு ரயில்(எண் 16862) பெட்டிகள் பற்றாக்குறை காரணமாக இரு மார்க்கத்திலும் இன்று(அக்.,28) ரத்து செய்யப்பட்டுள்ளது. பிற்பகல் 2 மணிக்கு குமரியிலிருந்து இந்த ரயில் புறப்பட வேண்டிய நிலையில் இந்த விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் பயணிகள் மாற்று ஏற்பாடு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அம்பை வட்டார பகுதியில் ரேஷன் அரிசி கடத்துவதாக டிஎஸ்பி சதீஷ்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து நேற்று(அக்.,28) அந்த பகுதியில் போலீசார் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த வேனில் 3 டன் அரிசி கடத்தல் முயன்றது தெரிய வந்தது. ஆண்டி(35), முப்புடாதி(29), முன்னீர்பள்ளம் முருகன்(27), சிவக்குமார்(26), மதன்குமார்(29) ஆகியோரை கைது செய்து அரிசி மற்றும் வேன் பறிமுதல் செய்தனர்.

தாதர் – திருநெல்வேலி இடையே மதுரை வழியாக இயக்கப்படும் ரயில்களின் நேரத்தில் வருகின்ற நவம்பர் 1 ஆம் தேதி முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அதன்படி வியாழக்கிழமைகளில் இயக்கப்படும் தாதர் திருநெல்வேலி ரயில் (22629) இரவு 8:40 மணிக்கு தாதரில் இருந்து புறப்பட்டு சனிக்கிழமை அதிகாலை 4:10 மணிக்கு திருநெல்வேலிக்கு சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.