India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பொதுமக்கள் மற்றும் காவல் துறையினர் இணைந்து சட்டவிரோதமான மதுபானங்களை ஒழிப்பதற்காக, நெல்லை மாவட்ட எஸ்.பி., சிலம்பரசன் புது முயற்சியை மேற்கொண்டுள்ளார். அதன்படி, கள்ளச்சாராயம் காய்ச்சுவது, விற்பது குறித்து தெரியவந்தால் 94981 01765 மற்றும் 94981 10581 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு அழைத்து தெரிவிக்கவும் என்றும், தகவல் தெரிவிப்பவரின் விவரங்கள் பாதுகாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வை கண்டித்து நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறையில் மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (ஜூன் 22) மாலை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் பெருமாள் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் ஸ்ரீராம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார், ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ ஆர்.கிருஷ்ணன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (இரவு 7 மணி வரை) திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சபாநாயகரும் ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினருமான அப்பாவும் நேற்று (ஜூன் 21) சட்டத்துறை அமைச்சர் ரகுபதிக்கு கடிதம் எழுப்பி உள்ளார். அதில் 202ஆம் ஆண்டு கூடங்குளம் அணு உலை சார்ந்த போராட்டங்களில் ஈடுபட்ட இடிந்தகரை மக்கள் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அந்த வழக்குகளை முதலமைச்சர் ஆணைக்கிணங்க ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
நெல்லையப்பர் கோயில் தேரோட்டத்தில், நெம்புகோல் வைப்பதற்கு முன்பு பக்தர்கள் பக்தி பரவசத்துடன் இழுத்ததே வடம் அறுபட காரணம் என அமைச்சர் தெரிவித்துள்ளார். நெல்லையப்பர் கோயிலில் நேற்று ஆனித் தேரோட்ட திருவிழா காலை 7 மணிக்கு துவங்கியது. அப்போது தேரின் வடம் அறுந்து விழுந்தது. இது குறித்து கேள்வியெழுந்த நிலையில் அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு சட்டப்பேரவையில் இன்று(ஜூன் 22) விளக்கம் அளித்துள்ளார்.
நெல்லை மாநகர டவுன் நெல்லையப்பர் கோயிலில் நேற்று ஆனி தேரோட்டம் காலை 7 மணிக்கு துவங்கியது. இதனை தொடர்ந்து வடம் அறுந்து விழுந்து பல்வேறு சீரமைப்புக்கு பின்பு தேரோட்டம் நடைபெற்றது. அந்த வகையில் நான்கு ரத வீதிகளில் வலம் வந்து இரவு 12:30 மணிக்கு நிலையம் வந்தடைந்தது. அந்த வகையில் மொத்தம் 17 மணி நேரத்திற்கு மேலாக தேரோட்டம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
நெல்லையப்பர் கோயிலில் நேற்று(ஜூன் 21) ஆனி தேரோட்ட திருவிழா விமரிசையாக நடைபெற்றது. தேரோட்டம் ஆரம்பித்தபோதே வடங்கள் அறுந்து விழுந்து அதிர்ச்சி தந்தாலும், இரும்பு சங்கிலிகள் பிணைக்கப்பட்டு, மக்களும் கை கோர்த்து தேரை இழுத்து சென்றனர். பின்னர் திருச்செந்தூர் முருகன் கோயிலில் இருந்து வடம் வரவழைக்கப்பட்டு இணைக்கப்பட்டது. இந்த சம்பவத்தை, தந்தைக்கு உதவிய மகன் என மக்கள் புகழ்ந்து பேசி வருகின்றனர்.
ஜாதி மறுப்பு திருமணத்தை நடத்தி வைத்ததால் மார்க்.,கம்யூ. அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர்கள் மீது வன்கொடுமை வழக்கு பதிய வேண்டும் என்று கூறி மார்க்., கம்யூ. கட்சியினர் நெல்லையில் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தை தாக்கிய 13 பேர் மீதும் வன்கொடுமை வழக்கு இன்று (ஜூன்.21) பதிவு செய்யப்பட்டது.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு எழுதுபவர்கள் பயன்பெறும் வகையில் வரும் 23ம் தேதி பாளை சேவியர் கல்லூரியில் தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையம் சார்பில் இலவச கருத்தரங்கை நடைபெறுகிறது. இதில் முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு கருத்தரங்கில் ஊக்க உரை ஆற்றுகிறார். கருத்தரங்கில் பங்கேற்பவர்கள் 9626252500 இந்த எண்ணில் முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற விதிக்கபட்ட தொடரும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. மேலும், அரசின் ‘tantea’நிர்வாகம் மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை எடுத்து நடத்துவது குறித்து தகவல் தெரிவிக்கவும் உத்தரவிட்டுள்ளது. குத்தகை காலம் முடிந்த நிலையில் மாஞ்சோலை மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் நடந்து வந்த நிலையில் தொடரப்பட்ட வழக்கில் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.