Tirunelveli

News July 1, 2024

6 வேட்பாளர்கள் செலவு கணக்கு ஒப்படைக்கவில்லை

image

திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் செலவின கணக்குகளை நேர் செய்யும் கூட்டம் இன்று (ஜூன் 1) கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கலெக்டர் கார்த்திகேயன் தேர்தல் செலவினை பார்வையாளர்கள் காசி சுகை , அனீஸ் அகமது ஆகியோர் ஆய்வு பணியை மேற்கொண்டனர். 6 வேட்பாளர்கள் தங்கள் கணக்குகளை மூன்றாம் தேதிக்குள் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டது. 

News July 1, 2024

நெல்லை: மின் குறை தீர் கூட்டம் அறிவிப்பு

image

நெல்லை மாவட்டத்தில் ஜூலை மாதம் நடைபெறும் மின் நுகர்வோர் குறைதீர் கூட்ட தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி நாளை 2ம் தேதி கல்லிடைக்குறிச்சி கோட்ட அலுவலகத்திலும், 5ம் தேதி வள்ளியூர் கோட்ட அலுவலகத்திலும், 12ம் தேதி நெல்லை கிராமப்புற கோட்ட அலுவலகத்திலும், 19ம் தேதி நெல்லை நகர்புற கோட்ட அலுவலகத்திலும் பகல் 11 மணிக்கு குறைதீர் கூட்டங்கள் நடைபெறும் என மேற்பார்வை பொறியாளர் செல்வராஜ் அறிவித்துள்ளார்.

News July 1, 2024

நெல்லை மேயர் ராஜினாமா..?

image

நெல்லை மேயர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேயர் சரவணனுக்கு திமுக கவுன்சிலர்களே தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ராஜினாமா கடிதத்தை சென்னையில் அமைச்சர் கே,என்.நேருவை சந்திந்து வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

News July 1, 2024

மாசோலை மக்களை சந்திக்கும் கிருஷ்ணசாமி

image

புதிய தமிழகம் கட்சி ஆலோசனை கூட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்காக 20 ஆண்டுகளாக போராடி வருகிறோம். அந்த மக்களுக்கு வேறு வாழ்வாதாரம் கிடையாது. 100 ஆண்டுகளாக வசிப்பவர்களை கட்டாய விருப்ப ஓய்வு கடிதம் பெற்று வெளியாற்ற நினைப்பத்தாக கூறினார். இன்று(ஜூலை 1) மாஞ்சோலை மக்களை சந்திப்பதாகவும் தெரிவித்தார்.

News June 30, 2024

நெல்லை காவல்துறை எச்சரிக்கை

image

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை இன்று (ஜூன்.30) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் SBI reward points மூலமாக சைபர் குற்றவாளிகளின் மோசடியில் சிக்கி விடாதீர்கள். மொபைலில் செயலிகளை பதிவிறக்கம் செய்யும் முன் நன்கு யோசியுங்கள். ஒரு வேளை நீங்கள் பாதிக்கப்பட்டால் https://cybercrime. gov. in/ ல் புகார் அளிக்கவும். மேலும் 1930 என்ற சைபர் கிரைம் இலவச எண்ணிலும் புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

News June 30, 2024

நெல்லை: 31 பேர் பணியிட மாற்றம்

image

நெல்லை, பாளையங்கோட்டை, தச்சநல்லூர், மேலப்பாளையம் ஆகிய 4 மண்டலங்களில் பணியாற்றி வந்த சிறப்பு வருவாய் ஆய்வாளர்கள், கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள், ஓட்டுநர்கள் உள்ளிட்ட 31 பேரை நிர்வாக நலன் கருதி பணியிட மாற்றம் செய்துள்ளதாக நெல்லை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த ஆணை உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும், பணியாளர்கள் பொறுப்பேற்றுக் கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 30, 2024

நெல்லையில் புதிய தீயணைப்பு நிலையம்: முதல்வர் அறிவிப்பு

image

நெல்லை மாநகர பகுதிகளான பாளை மற்றும் பேட்டை பகுதிகளில் மட்டும் தான் தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. மாநகரப் பகுதி விரிவாகி வருவதால், அவசர தீ தடுப்பு பேரிடர் மீட்பு பணிகளுக்கு குறித்த நேரத்தில் போக்குவரத்து நெரிசலைக் கடந்து உரிய இடத்துக்கு செல்வது சவாலாக உள்ளது. இதையடுத்து, நெல்லை நகர் பகுதியில் மேலும் ஒரு தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

News June 30, 2024

நெல்லை மாணவர்களுக்கு அழைப்பு

image

‘தமிழ்நாடு நாள்’ விழாவை முன்னிட்டு, மாவட்ட அளவில் 6 முதல் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி உள்ளிட்டவை நடைபெற உள்ளன. நெல்லை ரத்னா தியேட்டர் அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், வரும் 9ஆம் தேதி காலை 9 மணிக்கு இந்தப் போட்டிகள் நடைபெறும் என்றும், முதல் 3 இடங்களை பிடிப்பவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

News June 29, 2024

களக்காடு: 3 நாட்களுக்குப் பிறகு அனுமதி

image

களக்காடு மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள தலையணையில் தொடர் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.  இதனையடுத்து வெள்ளம் குறைந்ததை தொடர்ந்து மூன்று நாட்களுக்குப் பிறகு சுற்றுலா பயணிகளுக்கு இன்று குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தண்ணீரின் அளவு அதிகரித்தால் மீண்டும் தடை விதிக்கப்படும் என முண்டந்துறை புலிகள் காப்பக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். 

News June 29, 2024

பாபநாசம் அணைக்கு 2000 கனஅடி நீர் வரத்து

image

நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் இன்று (ஜூன் 29) கூறியதாவது, பாபநாசம் அணையின் நீர்மட்டம் 101.90 அடி, மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 78.64 அடி, சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 115.81 அடியாகவும் உள்ளது. பாபநாசம் மணிக்கு சுமார் 2000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது, அணையில் இருந்து 806 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. பாபநாசம் அணைப்பகுதிகளில் 2 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

error: Content is protected !!