India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை மின்வாரியம் சார்பில் இன்று (ஆக.11) வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழகத்தில் சூரிய மின்சக்தி உற்பத்தியில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 2 இல் 5,704 மெகாவாட் மின் உற்பத்தி என்பது அதிகபட்ச சாதனையாக இருந்தது. இது கடந்த 9 ஆம் தேதி 5,979 மெகாவாட் என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் முதன்மையாக இருப்பதை இது உறுதிப்படுத்தியுள்ளது.
அதிமுக தொண்டர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் சசிகலா ஈடுபட்டு வருகிறார். இதற்கான முதற்கட்ட சுற்றுப்பயணத்தை கடந்த மாதம் தென்காசியில் தொடங்கினார். அதைதொடர்ந்து ஆக.13 இல் திருநெல்வேலி, ஆக.14 பாளையங்கோட்டை, ஆக.16 நாங்குநேரி, ஆக.18 ராதாபுரம், ஆக.17 அம்பாசமுத்திரத்தில் சுற்றுபயணம் மேற்கொள்ள உள்ளதாக புரட்சித்தாய் சின்னம்மா மக்கள் தொடர்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் வட தமிழக மாவட்டங்கள், தென் தமிழக உள்மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.இதனால் தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி இன்று இரவு 7 மணி வரை நெல்லை மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சுதந்திர தின விழாவையொட்டி தொடர் விடுமுறையால் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் நெல்லையிலிருந்து செங்கல்பட்டிற்கு ஆக. 13, 18 ஆகிய தேதிகளில் இரவு 10.50 மணிக்கும், மறுமார்க்கத்தில் செங்கல்பட்டிலிருந்து ஆக.14,19 ஆகிய தேதிகளில் மாலை 05.55 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு இன்று(ஆக.,11) காலை 8 மணிக்கு தொடங்கியது.
தமிழ்நாட்டில் நாளை மறுநாள்(ஆக.13) திருப்பூர், ஈரோடு, தென்காசி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நெல்லை மாவட்டத்தில் நாளை மறுநாள்(ஆக.13) கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை பாராளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ் இன்று காலை 10மணி அளவில் நகை கடையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.தொடர்ந்து 10.30 மணிக்கு மாலைமுரசு அலுவலகத்தில் ராமச்சந்திர ஆதித்தனார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார் மதியம் 1.00அளவில் மேலச்செவல் தேவாலயத்தில் தோத்திரப் பண்டிகையில் கலந்து கொள்கிறார். மாலை 5 மணிக்கு கச்சநல்லூரில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்கிறார்.
பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க நெல்லை-செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. நெல்லையில் இருந்து ஆகஸ்ட் 13,18ஆம் தேதிகளில் இரவு 10.50 மணிக்கும், மறுமார்க்கத்தில் செங்கல்பட்டில் இருந்து ஆகஸ்ட் 14,19 ஆகிய தேதிகளில் மாலை 5:55 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே இன்று அறிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
தமிழக பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், தென் தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்து வருகிறது. அதன்படி நாளை(ஆக.11), நாளை மறுநாள்(ஆக.12), ஆக.13 ஆகிய 3 நாட்களுக்கு நெல்லை மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நெல்லை மாவட்டத்திற்கு இன்று (ஆக.10) இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராமநாதபுரம், தேனி, மதுரை, நெல்லை, விருதுநகர், குமரி உள்ளிட்ட 32 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வரும் நிலையில், விவசாயிகள் சாகுபடி பணிகளை துவங்கியுள்ளனர்.
தமிழ்நாட்டில் நாளை மறுநாள்(ஆக.12) தூத்துக்குடி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நெல்லை மாவட்டத்தில் நாளை மறுநாள் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.