Tirunelveli

News July 7, 2024

திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை மின்தடை

image

திருநெல்வேலி மாவட்டம் மானூர் வட்டாரம் தாழையூத்து, மாநகர் பகுதி தச்சநல்லூர் மற்றும் களக்காடு ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (ஜூலை 8) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக இந்த மின் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என அந்தந்த பகுதி செயற்பொறியாளர்கள் அறிவித்துள்ளனர்.

News July 7, 2024

செமி கிரையோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி

image

காவல்கிணறு மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் அதிக எடை கொண்ட ராக்கெட்டுகளையும் விண்ணில் செலுத்துவதற்கு ஏதுவாக, செமி கிரையோஜெனிக் என்ஜின் தயாரிக்கப்பட்டு சோதனை நடத்தப்படுகிறது. செமி கிரையோஜெனிக் என்ஜினின் ஒரு பகுதி யான ப்ரி-பர்னர் இக்னிஷன் சோதனை ஏற்கனவே நான்கு முறை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. 5-வது முறையாக ப்ரி-பர்னர் இக்னிஷன் சோதனை நேற்று 2 1/2 வினாடிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டது

News July 6, 2024

புலிகளாக மாறுவார்கள்: கிருஷ்ணசாமி எச்சரிக்கை

image

மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றார். அந்த வகையில் இன்று நெல்லையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாஞ்சோலை தேயிலை தோட்ட விவகாரத்தில் மாவட்ட ஆட்சித்தலைவரோ , அரசோ தவறான முடிவை எடுத்தால் எங்கள் கட்சி தொண்டர்கள் புலிகளாக மாறுவார்கள் என எச்சரித்துள்ளார்.

News July 5, 2024

நெல்லை: நாளை மின் தடை அறிவிப்பு

image

பாளையங்கோட்டை, சமாதானபுரம், கொக்கிரகுளம், பணகுடி, நவ்வலடி, சங்கனான்குளம் ஆகிய துணை மின் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் நாளை ஜூலை 6ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

News July 5, 2024

மாவட்ட நிர்வாகத்தின் செயலில் சந்தேகம் – எஸ்டிபிஐ

image

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நெல்லை புறநகர் மாவட்ட எஸ்டிபிஐ மாவட்ட தலைவர் கோட்டூர் பீர் மஸ்தான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்க மறுத்து வெளியேற்றும் முயற்சியில் தீவிரம் காட்டும் மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடு, தொழிற்சாலை நிர்வாகத்திற்காக செயல்படுகிறதோ என சந்தேகத்தை எழுப்புவதாக தெரிவித்துள்ளார்.

News July 5, 2024

நெல்லை: வண்டல் மண் எடுக்க விண்ணப்பிக்கலாம்

image

திருநெல்வேலி மாவட்டத்தில் விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்கள் தங்களுக்கு தேவையான வண்டல் மண் எடுப்பதற்கு இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று(ஜூலை 5) வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணப்பிக்க tnesevai.tn.gov.in இந்த லிங்கை பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 4, 2024

நெல்லை கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

நாட்டுக்கோழி வளர்ப்பதில் திறன் கண்ட கிராமப்புற பயனாளிகளுக்கு சிறிய அளவிலான நாட்டுக்கோழி பண்ணை அலகுகள் நிறுவ 50 % மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவர் அணுகி விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

News July 4, 2024

கேரளத்திற்கு ரயில் சேவை; எம்பி கோரிக்கை

image

திருநெல்வேலி எம்பி ராபர்ட் புரூஸ், ரயில்வே போர்டு சேர்மன் ஜெயவர்மா சின்காவை நேற்று (ஜூலை 3) நேரில் சந்தித்து மனு அளித்தார். அதில் நெல்லை, செங்கோட்டை, கொல்லம், திருவனந்தபுரம், நாகர்கோவில் வழியாக சர்குலர் பயணிகள் ரயிலை இயக்க வேண்டும். நெல்லை – பாலக்காடு ரயில் கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

News July 4, 2024

நெல்லை: தொடக்கம் முதலே மோதல் போக்கு!(1/3)

image

2022 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், நெல்லை மாநகராட்சி 16வது வார்டில் வெற்றிபெற்ற திமுகவை சேர்ந்த பி.எம்.சரவணன் மேயராக தேர்வானார். தொடக்கம் முதலே மேயர்-கவுன்சிலர்கள் இடையே மோதல்போக்கு காணப்பட்ட நிலையில் மாதம்தோறும் நடைபெறும் கூட்டங்களில் சலசலப்பு ஏற்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பே மேயர் ‘ராஜினாமா’ என்ற பேச்சு உலாவிய நிலையில் நேற்று பதவி விலகல் குறித்த அறிவிப்பு வெளியானது.

News July 4, 2024

குடும்ப சூழ்நிலையால் ராஜினாமா – கமிஷ்னர்(2/3)

image

மேயர் சரவணன்-கவுன்சிலர்கள் இடையே மோதல் போக்கு தீவிரமடைந்த நிலையில் கடந்த மாதம் 28 ஆம் தேதி நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்திலும் பெரும்பாலான கவுன்சிலர்கள் பங்கேற்கவில்லை. இந்நிலையில், சென்னைக்கு வருமாறு நேற்று முன்தினம் கட்சித் தலைமை அழைப்பு விடுத்தது. இதை தொடர்ந்து, குடும்ப சூழ்நிலையால் மேயர் ராஜினாமா செய்ததாக மாநகராட்சி ஆணையர் சுபம் ஞானதேவ் ராவுக்கு கிடைத்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!