India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ESI திட்ட பயனாளர்களுக்கான மாதாந்திர குறைதீர் முகாம் நாளை(ஜூலை 10) மாலை 4 மணிக்கு, ESI துணை மண்டல அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில், ESI மருத்துவ கண்காணிப்பாளர், மண்டல பொறுப்பு அதிகாரி மற்றும் மருத்துவ அதிகாரிகள் பங்கேற்கின்றனர். குறைகள் இருப்பின், பயனாளிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு நிவர்த்தி செய்துகொள்ளலாம் என நெல்லை மண்டல ESI துறை இயக்குநர் அருண் தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் வருகின்ற 10ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். இல்லையெனில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி தொழிலாளர் உதவி ஆணையர் முருகப்பிரசன்னா இன்று அறிக்கை மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நெல்லை, மாஞ்சோலை விவகாரத்தில் தேயிலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற தடை நீட்டிப்பு செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று (ஜூலை 8) உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் தொழிலாளர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது. மாஞ்சோலை விவாகரத்தில் தனது நிலைப்பாடு என்ன என்பது குறித்து தமிழ்நாடு அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் மாநில தலைவர் வழக்கறிஞர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பலூரில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கொலையாளிகள் மற்றும் அதன் பின்புலத்தில் உள்ள அனைவரையும் விரைந்து கைது செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
நெல்லை மாநகாரட்சியில் தொடர்ந்து பிரச்னை ஏற்பட்டு வந்த நிலையில் மேயராக இருந்த சரணவனன் கடந்த 3 ஆம் தேதி ராஜினாமா செய்தார். இதை தொடர்ந்து இன்று(ஜூலை 8) துணை மேயர் ராஜூ தலைமையில் மாநகாரட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது. கூட்டம் தொடங்கியதும் மேயர் சரவணனின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டது. தேர்தல் ஆணையம் அறிவிக்கும் தேதியில் புதிய மேயர் தேர்தல் நடைபெறும் என ஆணையர் தெரிவித்தார்.
திருநெல்வேலி மாநகராட்சி மேயராக இருந்த சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் அவரது ராஜினாமாவிற்கு பின்பு இன்று(ஜூலை 8) துணை மேயர் ராஜு தலைமையில் மாமன்ற கூட்டம் நடைபெற்றது. மாநகராட்சியில் 55 கவுன்சிலர்கள் உள்ளநிலையில், இந்த கூட்டத்தில் பல மாதங்களுக்கு பின்பு 46 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் தொடகத்தில் மேயர் ராஜினாமா கடிதம் பார்வைக்கு வைக்கப்பட்டது.
திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை ஜூன் மாதம் வரை செயல்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த ரயில் சேவை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருநெல்வேலியில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் ஜூலை 7, 14, 21, 28 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்பட்டு மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு(காலை 10 மணி வரை) மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி நெல்லை மாவட்டத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக கடந்த சில நாள்களாக தென்காசியில் மழை பெய்து வருகிறது. மேலும், ஜூலை 12 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி, மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற மாஞ்சோலை நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் தொழிலாளர்களுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் தலைவர்கள் களமிறக்க வருகின்றனர். அந்த வகையில் வருகின்ற 18ம் தேதி பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும், 24ஆம் தேதி காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகையும் மாஞ்சோலைக்கு வருகை தர உள்ளனர்.
நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன், சில நாட்களுக்கு முன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து அடுத்த யார் மேயர் என பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் நாளை காலை 10.30 மணிக்கு மாநகராட்சி கூட்டம் கூடுவதாக ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ் தெரிவித்துள்ளார். அக்கூட்டத்தில், மேயர் ராஜினாமா குறித்து கூட்டத்தில் பதிவு செய்யப்படவுள்ளது. இக்கூட்டத்தை பொறுப்பு மேயராக இருக்கும் ராஜு நடத்தவுள்ளார்.
Sorry, no posts matched your criteria.