India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை மாவட்ட எஸ்.பி (பொறுப்பு) சுரேஷ்குமார் இன்று கூறுகையில், போலீசார் தயாரித்த பட்டியல்களில் நெல்லையில் 700 ரவுடிகளில் 600 பேர் சிறைகளிலும், நன்னடத்தை சான்றிதழ்களும் வழங்கியுள்ளனர். இதில் மீதமுள்ள 100 ரவுடிகளின் நடவடிக்கைகளை போலீசார் கண்காணித்து வருகின்றனர். ஒரு ரவுடிக்கு தலா ஒரு போலீசார் வீதம் 2 ஷிப்ட் வீதம் 2 போலீசார் நியமிக்கப்பட்டு மிக நெருக்கமாக கண்காணித்து வருகின்றனர் என்றார்.
திருநெல்வேலி மாநகராட்சி மேயர் சரவணன் தனது பதவியை ராஜினாமா கடந்த வாரம் செய்துள்ளார். இந்த நிலையில் அடுத்த மேயர் யார்? என்ற எதிர்பார்ப்பு நெல்லை மக்கள் மத்தியில் நிலவி வரும் நிலையில் தற்போது துணை மேயராக உள்ள ராஜுவிற்கு கூடுதல் அதிகாரம் கொடுத்து மாநகராட்சியை வழி நடத்த திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் இன்று (ஜூலை 10) விடுத்துள்ள செய்தி குறிப்பு: நெல்லை மாவட்ட அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர்க்கும் முகாம் வரும் 13ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் புதிய குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு, மாற்றம் செய்தல், புகார் அளித்தல் போன்றவை குறித்து பயன் அடையலாம்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று (ஜூலை 10) பாளையங்கோட்டையில் அவரது உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடந்தது. காங்கிரஸ் கட்சியின் மாநகர் மாவட்ட அலுவலகமான செல்லபாண்டியன் பவனத்தில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வில் நெல்லையை சேர்ந்த மாணவி 2ஆம் இடம் பிடித்துள்ளார். பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஜூலை 22 முதல் செப்டம்பர் 11 வரை நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நெல்லையை சேர்ந்த மாணவி நிலஞ்சனா 2 ஆம் இடம் பிடித்துள்ளார். செங்கல்பட்டு மாணவி முதல் இடமும், நாமக்கல் மாணவர் 3வது இடமும் பிடித்துள்ளனர்.
நெல்லை மாநகராட்சி மேயர் பொறுப்புக்கு இம்மாத இறுதிக்குள் தேர்தல் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் நெல்லை மேயர் ராஜினாமா செய்த நிலையில் மாத இறுதியில் மறைமுகத் தேர்தல் நடைபெற உள்ளதாகவும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. தொடர் பிரச்னைகளுக்கு மத்தியில் மேயர் ராஜினாமா செய்த நிலையில் பொறுப்பு மேயராக தற்போது துணை மேயர் ராஜூ உள்ளார்.
கூடங்குளம் 2 ஆவது அணு உலையில் நேற்று முன்தினம் மின் உற்பத்தி தொடங்கிய சிறிது நேரத்திலேயே மீண்டும் பழுது ஏற்பட்டது.
இந்த பழுது நேற்று இரவு 7.43 மணி அளவில் பழுது நீக்கப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. தற்போது 100 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு படிப்படியாக இன்று மாலைக்குள் இரண்டாவது அணு உலையில் ஆயிரம் மெகாவாட்டை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று(ஜூலை 10) மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நெல்லை மாவட்டத்திலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு(காலை 10 மணி வரை) இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தென் தமிழகத்தில் அவ்வப்போது மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் இன்று (9.7.24) அறிக்கை வெளியிட்டுள்ளார். இதில், நெல்லை மாவட்டத்தில் 2ம் கட்டமாக ’மக்களுடன் முதல்வர்’ திட்டம் வரும் 11ம் தேதி முதல் ஆகஸ்ட் 22 வரை 204 கிராம பஞ்சாயத்துகளில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. 15 துறைகளின் சேவைகள் அந்த ஊர்களுக்கு நேரில் சென்று, முகாம் மூலம் வழங்கப்படும். மனுக்களை பதிவு செய்ய இ.சேவை மையங்களில் 50 சலுகை கட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பருவ மழை தீவிரமடைந்து பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் அணைகள் மற்றும் பிற நீர்நிலைகள் கணிசமாக நிரம்பி வருகின்றன. இந்நிலையில், நெல்லை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.