India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தாம்பரம் – செங்கோட்டை இடையே நெல்லை வழியாக இயக்கப்படும் அதிவிரைவு ரயில் இன்று (ஆக.19) இரவு 11.30 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தாம்பரம் பகுதியில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் இரவு 9 மணிக்கு புறப்பட இருந்த ரயில் 2.30 மணி நேரம் தாமதமாக புறப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இதனால் பயணிகள் இந்த அறிவிப்பை ஏற்று அதன்படி பயணம் செய்ய தெற்கு ரயில்வே அறிவுறுத்தி உள்ளது.
சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தை சர்வதேச தரத்தில் மேம்படுத்தும் பணிகள் கடந்த ஒரு மாத காலமாக நடந்தன. இதனால் தென் மாவட்டங்களில் இருந்து செல்லும் ரயில்கள் பகுதி தூரம் ரத்து செய்யப்பட்டன. தற்போது ரயில் நிலையத்தில் பணிகள் நிறைவு பெற்றதால் தென் மாவட்டங்களில் இருந்து செல்லும் ரயில்கள் அனைத்தும் இன்று(ஆக.,19) முதல் சென்னை எழும்பூர் வரை வழக்கம்போல் செல்லும் என தெற்கு ரயில்வே நேற்று அறிவித்துள்ளது.
தாமிரபரணி ஆற்றில் தவறி விழுந்த நபரை மீட்கும் பணி இன்று(ஆக.,19) காலை 6.30 மணியிலிருந்து தொடங்கி நடைபெற்று கொண்டிருக்கிறது. மாவட்ட அலுவலரின் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து நிலையங்களில் இருந்தும் 50 தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தேடும் பணி துரிதமாக நடைபெறுகிறது. மாயமான வாலிபரை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நெல்லை ஏர்வாடி அருகேயுள்ள தளபதி சமுத்திரம், மேலூர் சிவன் கோயில் பகுதியை சேர்ந்தவர் பாபநாசம். மணிமுத்தாறு பட்டாலியன் ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளரான இவரது மனைவி வள்ளியம்மாள். இவர் நேற்று முன்தினம் இரவு காற்றுக்காக கதவை திறந்து வைத்துள்ளார். நேற்று(ஆக.,18) அதிகாலை வீடு புகுந்த மர்ம நபர், வள்ளியம்மாள் அணிந்திருந்த 7 பவுன் நகையை பறித்துச் சென்றுள்ளார். ஏர்வாடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றில் இன்று (ஆக.18) மதியம் மீன் பிடிக்கும் போது தவறி விழுந்து நீரில் மூழ்கிய 24 வயதான பேட்டையைச் சேர்ந்த அப்துல் ரகுமான் என்ற வாலிபரை தீயணைப்பு துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். மாலை 6.30 மணி ஆகியும் வாலிபரின் உடல் கண்டெடுக்கப்படவில்லை. இந்தநிலையில், மீட்பு பணிகள் நாளை காலை 6.30 மணிக்கு தொடரும் என தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு வருகின்ற செப்டம்பர் மாதம் 6, 7, 8, 9 ஆகிய தேதிகளில் நெல்லையில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் விஎஸ்ஆர் ஜெகதீஷ் ஏற்பாட்டில் அகில இந்திய அளவிலான மின்னொளி கபாடி போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கு தமிழ்நாடு மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை விஎஸ்ஆர். ஜெகதீஷ் இன்று நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.
நெல்லை மின்வாரியத்தினர் விடுத்துள்ள செய்தி குறிப்பில், உங்கள் பழைய மாத மின் கட்டணம் சரி செய்யப்படாததால், இன்றிரவு மின் இணைப்பு துண்டிக்கப்படும். இதை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள செயலியை செயல்படுத்தி குறைந்த பட்ச ரூ.3 அல்லது தகவல்களை தரவும் என குறுஞ்செய்தி வந்தால், அதை பொருட்படுத்தாதீர். பதட்டப்படாமல், சைபர் குற்ற எண் 1930ல் புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் சசிகலா அதிமுக தொண்டர்களை நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். இந்நிலையில் நேற்று அம்பை பகுதிக்கு வந்த சசிகலாவிற்கு நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அவர் பேசுகையில், மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை காலி செய்ய சொல்லி மின்சாரம், குடிநீர் போன்றவற்றை நிறுத்தி விட்டார்கள். அரசாங்கம் மக்களுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும். நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட கூடாது என பேசினார்.
நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் செல்வராஜ் நேற்று விடுத்துள்ள அறிக்கையில், நெல்லை, தென்காசி மாவட்டத்தில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே கனமழை, சூறாவளி காற்று, இடி மின்னல் அதிகமாக இருந்தால் அவற்றிலிருந்து சமாளிக்க ஏதுவாக அனைத்து செயற்பொறியாளர்கள், மின் பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள், பணியாளர்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.
20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக தடகளப் போட்டி தென் அமெரிக்காவில் உள்ள பெரு நாட்டின் லிமா எனும் இடத்தில் வருகிற 27ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விளையாட்டுப் போட்டியில் திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளம் ஊரைச் சார்ந்த கனிஷ்டா டீனா 400×4 தொடர் ஓட்டத்தில் இந்திய அணியின் சார்பாக பங்கேற்க உள்ளார். இவர் இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டுமென ஊர் பொதுமக்கள் நேற்று பாராட்டினர்.
Sorry, no posts matched your criteria.