India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ரேஷன் கடைகளில் மாதத்தின் கடைசி பணி நாளில் ஒத்திசைவு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுவதில்லை. இந்த மாதத்தின் கடைசி பணி நாளான மார்ச்.29 சனிக்கிழமையாக அமைவதோடு மார்ச்.30,31 அரசு விடுமுறை என்பதால் குடும்ப அட்டைதாரர்களின் நலன் கருதி நெல்லையில் மார்ச்.29 அன்று ரேஷன் கடைகள் செயல்படும் என தமிழ்நாடு உணவு பொருள் வழங்கல்,நுகர்வோர் பாதுகாப்பு துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
திசையன்விளையை சேர்ந்த அந்தோணி செல்வம் (40) ஆன்லைன் கிரிப்டோ கரன்சி டிரேடிங் தொழில் செய்து வருகிறார். இவரிடம் ரியாஸ் (36), அய்யாதுரை (37), இசக்கி முத்து (28) ஆகியோர் ரூ.75 லட்சம் கொடுத்து 82,691 எண்ணிக்கையிலான அமெரிக்க டெதர் டாலர் கிரிப்டோ கரன்சியை ஆன்மூலம் பெற்றுள்ளனர். அவர்கள் கொடுத்த ரூ.75 லட்சம் கலர் ஜெராக்ஸ் என தெரியவந்த நிலையில் 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சுமார் 2000 வருட பாரம்பரியம் கொண்டது நெல்லையப்பர் செப்பறை நடராஜர் திருக்கோவில். இங்குள்ள சிலையே உலகின் முதல் நடராஜர் சிலையாக கருதப்படுகிறது. சிவபெருமான் நடனமாடிய 5 சபைகளில் தாமிர சபையாக இந்த கோவில் சிறப்பு பெற்றது. கூரைகள் செப்பு தகடுகளால் வேயப்பட்டதால் தாமிர சபை எனவும் அழைக்கப்படுகிறது. திருமணத்தடை குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இங்கு பிராத்திக்கலாம். *மற்றவர்களுக்கு பகிரவும்*
வீரநல்லூரில் 2011-ம்ஆண்டு ரத்தினம் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சுப்பையா தாஸ், சுரேஷ், கொம்பையா, சுரேஷ் ஆகிய 4 பேருக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நெல்லை முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி இன்று தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் 21 பேர் மீது விசாரணை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. தீர்ப்பை முன்னிட்டு நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
நெல்லை மாவட்டத்தில் அவ்வப்போது பல்வேறு பகுதிகளில் மிதமான மழையும், கனமழையும் பெய்து வருகிறது. இந்த நிலையில் தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. *உங்கள் பகுதியில் மழை பெய்தால் கமெண்ட் செய்யவும்*
சேரன்மகாதேவி அரசு பேருந்து பணிமனை அருகில் தொழிலாளர் முன்னேற்ற சங்கதின் தொழிற்சங்க அலுவலகம் புதிய கட்டு திறப்பு விழா நேற்று (மார்ச்-25) நடைபெற்றது. விழாவிற்கு தொமுச மாவட்ட பொதுச்செயலாளர் தர்மன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன் கலந்துகொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார்.
நெல்லையில் கடந்த வாரம் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் காவலர் ஜாகிர் உசேன் பிஜிலி வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி அவரது மகன் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்துள்ளார். மனுவை விசாரித்த நீதிபதிகள் விசாரணை நிலையை அறிக்கையாக தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டு 8 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
நெல்லை டவுனில் முன்னாள் எஸ்ஐ ஜாகீர் உசேன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. இது தொடர்பாக நெல்லை கலெக்டர், தமிழ்நாடு டிஜிபிக்கு விளக்கம் கேட்டு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் 4 வாரங்களுக்குள் முழு அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
திசையன்விளையில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள பேரூராட்சிக்கு சொந்தமான 6 கடைகளை பகிரங்க ஏலம் விடாமல் அதிமுக திசையன்விளை பேரூராட்சி செயலாளரும், பேரூராட்சி துணைத் தலைவருமான ஜெயக்குமார், திமுக நகர செயலாளர் சேர்ந்து ஏலம் எடுத்துக் கொண்டனர். இதனால் மக்களிடத்தில் பதில் சொல்ல முடியாமல் கிளைச் செயலாளர்கள் 6 பேர் நேற்று ராஜினாமா செய்து எடப்பாடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட செயலாளர் கருப்பசாமி பாண்டியன் இன்று காலை உடல் நலக்குறைவு காரணமாக திருநெல்வேலியில் உயிரிழந்தார். இவர் தற்போது அதிமுக அமைப்புச் செயலாளராக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவிற்கு அதிமுக நிர்வாகிகள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது மறைவு நெல்லை அரசியல் வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.