Tirunelveli

News March 18, 2025

நெல்லை ஸ்டுடியோ அதிபரிடம் நூதன முறையில் கொள்ளை

image

நெல்லை சேர்ந்த காமராஜ் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இவரிடம் நேற்று விமல் என்பவர் திருமணத்திற்கு போட்டோ எடுக்க வேண்டும் என கோவை அழைத்து சென்றுள்ளார். அவர்கள் பஸ்ஸில் செல்லும் வழியில் பஸ் நின்றபோது அங்குள்ள கடையில் காபி குடிப்பதற்காக இவர் இறங்கி சென்றுள்ளார். அப்பொழுது விமல் அவரது கேமரா மற்றும் உபகரணங்களை திருடி சென்று தப்பியுள்ளார். இது குறித்து காமராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்

News March 18, 2025

நெல்லை முதல் பெண் அதிகாரி பதவி ஏற்பு

image

தென்காசி மாவட்டத்தில் பணிபுரிந்த மாவட்ட தீயணைப்பு அலுவலர் பானுப்பிரியா திருநெல்வேலி மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். எனவே அவர் திருநெல்வேலி மாவட்ட முதல் முதல் பெண் மாவட்ட அலுவலர் ஆவார். இந்நிலையில் இன்று அவர் பாளையங்கோட்டை அலுவலகத்தில் பொறுப்பேற்றார். முதல் பெண் அதிகாரியான அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

News March 18, 2025

நெல்லை: 75,000 செல்போன் அழைப்புகள் ஆய்வு

image

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கடந்த மே இரண்டாம் தேதி திசையன்விளை அருகே கரைச்சுத்து புதூரில் தோட்டத்தில் உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செல்போன் அழைப்புகளை இதுவரை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

News March 18, 2025

நெல்லையில் மின்சாரம் தாக்கி இருவர் பலி

image

நெல்லை கொக்கிரகுளம் பகுதியில் புதியதாக கட்டப்பட்ட வீட்டிற்கு தண்ணீர் நனைத்து கொண்டிருந்த போது வேலாயுதம் (30), ரவி (37) ஆகியோர் மின்சாரம் தாக்கி பலியானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News March 18, 2025

கொலை செய்யப்பட்ட முத்தவல்லி குறித்து வெளியான தகவல்

image

நெல்லை மாநகர டவுன் தொட்டி பாலத்தெருவை சேர்ந்த பள்ளிவாசல் முத்தவல்லி ஜாகிர் உசேன் பிஜிலி இன்று அதிகாலை மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இவர் குறித்து முக்கிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இவர் முன்னாள் காவலராக இருந்து விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். மேலும் கருணாநிதி ஆட்சி காலத்தில் முதலமைச்சரின் தனி பிரிவு அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

News March 18, 2025

குருவாயூர் விரைவு பயணிகள் கவனத்திற்கு

image

நெல்லை வழியாக குருவாயூர் – சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் 28ஆம் தேதி பகுதி தூரம் ரத்து செய்யப்படுகிறது. இதன்படி அன்றைய தினம் இந்த ரயில் சென்னையில் இருந்து 28ஆம் தேதி புறப்பட்டு நெல்லை வழியாக நாகர்கோவில் டவுன் வரை மட்டுமே செல்லும். அங்கிருந்து குருவாயூர் வரை ரத்து செய்யப்படுகிறது. மறு மார்க்கத்தில் 29ஆம் தேதி காலை 5.15 மணிக்கு நாகர்கோவில் டவுனில் இருந்து நெல்லைக்கு புறப்படும்.

News March 18, 2025

விவசாயிகள் குறைதீர் கூட்டம் -ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் இந்த மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம் வரும் 21-ஆம் தேதி நடைபெறுவதாக இன்று மாவட்ட ஆட்சியர் சுகுமார் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். இரண்டாவது தளத்தில் உள்ள கூட்டங்கில் காலை 11 மணியளவில் கூட்டம் நடைபெறும் என்றும், ஏற்கனவே அளிக்கப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கை குறித்து விவாதிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

News March 18, 2025

நெல்லை:  இரவு ரோந்துபணி காவல் அதிகாரிகள் விவரம்

image

திருநெல்வேலி மாவட்டத்தில், உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பட்டியலை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி திருநெல்வேலி ஊரகப்பகுதி, நாங்குநேரி, வள்ளியூர், சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம் ஆகிய உட்கோட்டங்களில், ரோந்து பணிகள் மேறிகொள்ளப்படுகின்றன. இந்த பணிகளில் தாழையூத்து, களக்காடு, வள்ளியூர், வீரவல்லூர் காவல் ஆய்வாளர்களும், கல்லிடைக்குறிச்சி உதவி காவல் ஆய்வாளர்களும் ஈடுபடுகின்றனர்.

News March 17, 2025

பாளையங்கோட்டை சிறை கைதி – திடீர் மரணம்

image

மேலப்பாளையத்தைச் சேர்ந்தவர் கவுது இப்ராகிம் (வயது 59). இவர் கடந்த 2020ஆம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதித்து அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை அவர் இறந்தார். பெருமாள்புரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News March 17, 2025

தாமிரபரணி ஆற்றில் குளித்தால் ஆபத்து

image

நெல்லையில் தொழிற்சாலை கழிவுகள், சாக்கடை நீர் கலப்பது, விவசாய உரங்கள், பூச்சிக்கொல்லிகள் என பல்வேறு காரணங்களால் தாமிரபரணி ஆறு மாசுபடுகிறது. ஆய்வில் ஹெவி மெட்டல்ஸ் என்று அழைக்கப்படும் உலோகங்கள் ஆர்சனியம், நிக்கல், குரோமியம், காட்மியம், நைட்ரேட்ஸ் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உடலில் பல்வேறு பகுதிகளில் புற்றுநோய் ஏற்பட இது காரணமாக அமைகிறது என மருத்துவர் புகழேந்தி தெரிவித்துள்ளார். SHARE IT

error: Content is protected !!