India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கியமாக ஆலய திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு வருகிற 27 ஆம் தேதி முதல் செப்.,10 ஆம் தேதி வரை நாகர்கோவிலில் இருந்து நெல்லை வழியாக சிறப்பு SETC பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதில் பயணிக்க விருப்பம் உள்ளவர்கள் www.tnstc.in இணையதளம் மற்றும் TNSTC வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாளை., பெருமாள்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிப்பவர் மணிபாரதி(30). இவரிடம் கடந்த மாதம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய நபர், சட்ட விரோத கொரியர் பார்சல் வந்துள்ளதாகவும், இதிலிருந்து விடுபட ரூ.9.70 லட்சம் தர வேண்டும் என்றும் கூறி வங்கி மூலம் பணத்தைப் பெற்றுள்ளார். இதை நம்பி ஏமாற்றமடைந்த மணிபாரதி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபரை தேடி வருகிறார்.
திருநெல்வேலி – சென்னை எழும்பூருக்கு வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில் அடுத்த மாதம் 5ஆம் தேதி வரை நீட்டித்து இயக்கப்படுகிறது. மொத்தம் 6 ரயில் சேவைகளை நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில் விழுப்புரம், மயிலாடுதுறை, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. SHARE IT.
நாங்குநேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவி அகிலா நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து பயில இடம் கிடைத்துள்ளது. இவர் 521 மதிப்பெண் நீட் தேர்வில் எடுத்துள்ளார். இவரது பெற்றோர் விவசாயம் செய்து வருகின்றனர். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த மாணவி அகிலாவிற்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்ததற்காக சி இ ஓ சிவக்குமார், நீட் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணசாமி ஆகியோர் பாராட்டினர்.
நெல்லை டவுன் பொருட்காட்சி திடலில் உள்ள புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் மண்டல அலுவலகத்தில் தொழில் முனைவோர், தொழில் முனைய விரும்புவோருக்கான புத்தொழில் புத்தக பயிற்சி முகாம் நடைபெற்றது. இதை முன்னிட்டு பயிற்சி பெற்றவர்களுக்கு மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் நேற்று (ஆக. 23) சான்றிதழ் வழங்கி பாராட்டினார். நெல்லை மாவட்ட நிர்வாகம் அமெரிக்க தூதரகம் புத்தாக்க இயக்ககம் இணைந்து பயிற்சி அளித்தது.
நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றிய முத்துசாமி பணியிட மாறுதல் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக சென்னை தொடக்க கல்வி இயக்கக துணை இயக்குனராக பணியாற்றிய சிவகுமார் நெல்லை மாவட்ட புதிய முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டார். இவர் இன்று (ஆக.23) பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் ஏற்கனவே கடந்த 2020-21 ஆம் ஆண்டுகளில் நெல்லை மாவட்டத்தில் முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இயங்கி வரும் போதை மீட்பு
மையத்தில் காலியாக உள்ள ஆலோசகர்/மனநலசேவகர், செவிலியர் பணிக்கு தேசிய சுகாதார குழும திட்டத்தின் கீழ் முற்றிலும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பங்களை <
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மூலைக்கரைப்பட்டியில் ‘வின்ஸென்ட் டெக்ஸ் ஷாப்பிங்’ என்ற பெயரில் இயங்கி வந்த அடகு கடையில், நேற்று(ஆக.,22) ஜன்னல் கம்பிகளை உடைத்து மர்ம நபர்கள் ரூ.60 லட்சம் மதிப்பிலான நகைகள் & ரூ.3 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து மூலக்கரைப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர். இக்கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் சாக்ரடீஸ் நேற்று(ஆக.,22) விடுத்துள்ள செய்தி குறிப்பில், பல்கலைக்கழகத்தில் உள்ள Msc கணினி அறிவியல் படிப்பில் சேர ஒரு சில காலியிடங்கள் உள்ளன. இதற்கு புதிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்ப கட்டணம், நுழைவு கட்டணத்துடன் ஆக.,27ஆம் தேதி மாலை 4:30 மணிக்குள் துறை தலைவரிடம் சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி பிஎம்எஸ் ஐடிஐ வளாகத்தில் மாணவர்களுக்கு ரயில்வே தேர்வுகள் பற்றிய இலவச விழிப்புணர்வு கருத்தாகம் வருகிற ஆகஸ்ட் 25ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் ரயில்வே தேர்வு ஆலோசகர் பாண்டுரங்கன் கலந்து கொண்டு ரயில்வே தேர்வுகள் குறித்தும் தேர்வுகளுக்கு தயார் செய்து பற்றியும் ஆலோசனை வழங்குகிறார். இதில் கலந்து கொள்பவர்கள் 81222 -14189 என்ற எண்ணில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என இன்று தெரிவிக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.