India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திமுக இளைஞர் அணி செயலாளரும், தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினை திருநெல்வேலி மாநகராட்சி முன்னாள் மேயர் பி.எம் சரவணன் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார். பின்னர் கட்சி பணிகள் குறித்து உதயநிதி ஸ்டாலினிடம், முன்னாள் மேயர் சரவணன் ஆலோசனை பெற்றார். இதில் திமுகவினர் உடன் இருந்தனர்.
நெல்லை மாவட்ட காங்கிரஸ் விவசாயப் பிரிவு தலைவராக மேலப்பாளையம் குறிச்சியைச் சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவர் நியமிக்கப்பட்டார். நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் பரிந்துரையின் பேரில் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை நியமனம் செய்தார். புதிய விவசாய பிரிவு மாவட்ட தலைவருக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் இன்று (ஜூலை.19) வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் ஈரோடு மாவட்டத்திற்கு வணிகவரித்துறை இணை இயக்குனராக மாறுதலாகி செல்வதை தொடர்ந்து, மாநகராட்சி மைய அலுவலகத்தில் பிரிவு உபசார விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் துணை ஆணையாளர் தாணுமூர்த்தி, செயற்பொறியாளர் தங்கபாண்டியன், மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் சார்பில் ஆணையருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
நெல்லை மாநகரில் சட்டம் ஒழுங்கிற்கு குந்தகம் ஏற்படுத்தும் 466 ரவுடிகளில் மிக முக்கியமான 30 ரவுடிகள் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படுகின்றனர். கடந்த ஒரு வருடத்தில் 64 பேர் கைதாகி அதில் 31 பேர் குண்டர் சட்டத்தில் கைதாகியுள்ளனர். குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருக்க 178 நபர்களிடம் நன்னடத்தை பிணை பத்திரம் பெறப்பட்டுள்ளது என்று நெல்லை மாநகர காவல்துறை இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறையின் சார்பில் திருநெல்வேலி மாவட்ட பகுதி நேர நாட்டுப்புற கலை பயிற்சி வகுப்புகள் கடந்த 12ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது. இப்பயிற்சிக்கு 2024-25ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை ஜூலை 1ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றது. கலை பயிற்சி பெறுவதற்கான இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று (ஜூலை 19) அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்ட முன்னாள் படைவீரர்கள், படைவீரர்களை சார்ந்தோர்கள் நலனை கருத்தில் கொண்டு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் வரும் 26ஆம் தேதி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே முன்னாள் படைவீரர்கள் அவரை சார்ந்தோர்கள் தங்களுக்கு குறைகள் இருப்பின் மாவட்ட ஆட்சி தலைவரால் நடத்தப்படும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயனடையுமாறு ஆட்சியர் கார்த்திகேயன் இன்று தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் 2023 அக்டோபர் மாதம் முதல் 2024 மார்ச் மாதம் வரை 6 மாத காலத்திற்கு 65 கிளை கறவை கூடங்கள் மூலம் 13லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து சாதனை படைத்துள்ளது. அரசு ஆணைப்படி தினசரி பால் நெல்லை ஆவினுக்கு அனுப்பப்படுகிறது. இதில் கறவை உறுப்பினர்களை ஊக்கப்படுத்த போனஸ் வழங்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் இன்று (ஜூலை.19) விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் உள்ள ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கூறுகையில் மாவட்டத்தில் ஜூன், ஜூலையில் வழக்கமான தென்மேற்கு பருவ மழையை விட இந்த ஆண்டு குறைவாகவே மழை பெய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
நெல்லையில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் இன்று (ஜூலை.19) செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், திருமாவளவன், கிருஷ்ணா சாமி, சீமான் போன்ற தலைவர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் எனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை, திமுக வந்தது அதை திரும்பபெற்றது. மேலும் தனக்கு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் வேளாண்மை இயந்திரமாக்குதல் திட்டத்தின் கீழ் 40,000 மானியத்தில் ரோட்டோ கல்வெட்டேரியை விவசாயி முருகேசனுக்கும், 10 லட்சம் மதிப்பிலான டிராக்டரை திருக்குறுங்குடி வாழை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவர் ஆறுமுகத்திற்கும் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று வழங்கினார். இதில் அலுவலர்கள் உடனிருந்தனர்.
Sorry, no posts matched your criteria.