India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக சட்டப்பேரவை மதிப்பீட்டு குழு 2024-25 ஆம் ஆண்டிற்கான ஆய்வு பணியை மேற்கொள்வதற்காக வருகிற செப்டம்பர்.4 அன்று நெல்லைக்கு வருகை தர உள்ளது. ஏற்கனவே ஆக.28 அன்று வருவதாக இருந்த நிகழ்ச்சி தற்போது செப்டம்பர் 4 ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மதிப்பீட்டுக் குழு ஆய்விற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் மெல்ல கற்கும் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி கட்டகம் என்ற புத்தகம் தயாரிக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. அனுபவம் மிக்க ஆசிரியர்கள் இந்த பயிற்சி கட்டக புத்தகங்களை தயாரித்துள்ளனர். இவை விரைவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கி கூடுதல் மதிப்பெண் எடுப்பதற்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக கல்வி துறையினர் தெரிவித்தனர்.
நெல்லை மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் மெல்ல கற்கும் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி கட்டகம் என்ற புத்தகம் தயாரிக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. அனுபவம் மிக்க ஆசிரியர்கள் இந்த பயிற்சி கட்டக புத்தகங்களை தயாரித்துள்ளனர். இவை விரைவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கி கூடுதல் மதிப்பெண் எடுப்பதற்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக கல்வி துறையினர் தெரிவித்தனர்.
நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய மூன்று தினங்கள் விடுமுறையாக அறிவித்தும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பொதுமக்கள் வெளியே நடமாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இன்று (ஆக.26) நெல்லை மாவட்டத்தில் 101 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. கோடை காலத்தை மிஞ்சும் அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.
அம்பை மேற்கு தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை பகுதியில் தற்போது தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வேலையில்லாமல் வீட்டில் முடங்கியுள்ளனர். இதனால் வனவிலங்குகள் தேயிலை தோட்டத்திற்குள் சர்வசாதாரணமாக உலா வருகின்றன. இந்த நிலையில் நேற்று இரவு குடியிருப்பு பகுதியில் புகுந்த கரடி ஒன்று அப் பகுதியில் உலா வந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று(ஆக.,26) முதல் வரும் 29ஆம் தேதி வரை நெல்லை மாவட்டம் உள்ளிட்ட தென் தமிழக கடலோரப் பகுதிகளிலும், குமரி கடலிலும் மணிக்கு 55 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நெல்லை மாவட்ட மீனவர்கள் இதை கவனத்தில் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(37). இவர் கடந்த மாதம் 4 ஆம் தேதி தனது இன்ஸ்டாகிராம் கணக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது வந்த ஒரு ஆன்லைன் டிரேடிங் சம்பந்தமான whatsapp லிங்கை கிளிக் செய்த நிலையில், அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.33 லட்சம் எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பாலகிருஷ்ணன் நேற்று(ஆக.,25) கொடுத்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருநெல்வேலி மாநகராட்சி மேயராக திமுகவை சேர்ந்த கிட்டு என்ற ராமகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார். இதை தொடர்ந்து, கடந்த 2 வாரத்திற்கு முன்பு முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற இவர் நேற்று(ஆக.,25) அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சென்னையில் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துகளை பெற்றார். மாநகராட்சியை நல்ல முறையில் கொண்டு செல்ல மேயருக்கு அமைச்சர் அறிவுரை கூறி வாழ்த்தியதாக தகவல்.
ராதாபுரம் முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை தனது எக்ஸ் தளத்தில் இன்று ராதாபுரம் தொகுதி பழவூர் மலை, புலிகள் காப்பாக வனமாகும் . இங்கு மணல் அள்ள டாரஸ் லாரி செல்ல வசதியாக நீர்வழிப் போக்கு ஓடைகளை அழித்து பாதை அமைத்துள்ளனர். இதற்கு அனுமதி எவ்வாறு கிடைத்தது. இது தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், அமைச்சர் துரைமுருகன் ஆகியோருக்கு தெரியுமா என கேள்வி கேட்டு பதிவிட்டுள்ளார்.
விநாயகர் சதுர்த்தி தொடர்பாக நெல்லை ஆட்சியர் கார்த்திகேயன் இன்று செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் களிமண் உள்ளிட்ட அரசால் அனுமதிக்கப்பட்ட மூலப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். விநாயகர் சிலை வைத்து வழிபடும் இடங்கள் குறித்து சம்பந்தப்பட்ட அனைத்து அலுவலர்களின் அனுமதியும் முறைப்படி பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.