Tirunelveli

News July 22, 2024

மாஞ்சோலை செல்ல தடை – வனத்துறை அதிரடி

image

அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள காரையார், சேர்வலாறு, அகஸ்தியர் அருவி பகுதிகளுக்கும் மணிமுத்தாறு அருவி, மாஞ்சோலை, நாலு முக்கு, காக்காச்சி பகுதிகளுக்கும் ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை சுற்றுலா செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் வேதனை அடைந்துள்ளனர்.

News July 22, 2024

“வனவிலங்கு பட்டியலிலிருந்து காட்டுப்பன்றி நீக்கப்படும்”

image

தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் பாளையில் இன்று (ஜூலை 22 ) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயத்தை அழிக்கும் காட்டுப்பன்றி வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்குவதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றும், அதற்கான அறிவிப்புகளை தமிழக முதல்வர் விரைவில் வெளியிடுவார் என்றும் தெரிவித்தார்.

News July 22, 2024

நெல்லைக்கு காங்கிரஸ் மாநில தலைவர் வருகை

image

மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களின் நினைவு தினம் நாளை ((ஜூலை 23) அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், நாளை தாமிரபரணி ஆற்றில் அஞ்சலி செலுத்துவதற்காக காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வபெருந்தகை வருகை தருகிறார். அவரை வரவேற்க காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் வருகை தரும்படி மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

News July 22, 2024

நெல்லை மாவட்ட அணை நிலவரம்

image

திருநெல்வேலி மாவட்ட அணை நீர் பிடிப்பு பகுதிகளில் மழைப்பதிவு குறைந்துள்ளது. இன்று (ஜூலை 22) காலை 7 மணி நிலவரப்படி மணிமுத்தாறு அணைக்கு நீர்வரத்து 31 கன அடியாக சரிந்தது. அணையில் இருந்து 200 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 72 அடியாக உள்ளது. அதேபோல் பாபநாசம் அணை நீர்வரத்து 843 அடியாக உள்ளது. வினாடிக்கு ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. 117 அடி நீர் இருப்பு உள்ளது.

News July 22, 2024

இடத்தை அளவீடு செய்ய கோரி முதல்வருக்கு கடிதம்

image

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அடுத்த பத்தமடை கிராமத்தில் பிற்படுத்தப்பட்டோர் 189 பேருக்கு கடந்த 2001 ஆம் ஆண்டு இலவச பட்டா வழங்கப்பட்டது. தற்போது வரை அந்த இடத்தினை அளவீடு செய்யாமல் பயனாளிகள் பயன்படுத்த முடியாமல் உள்ளது. எனவே இந்த இடத்தினை விரைவில் அளவீடு செய்து பயனாளிகளுக்கு பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு நேற்று முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

News July 22, 2024

நெல்லை மாவட்ட ரயில் பயணிகள் கவனத்திற்கு

image

பராமரிப்பு பணிகள் காரணமாக நாகர்கோவில்-தாம்பரம் அந்தியோதயா ரயில் நாளை முதல் ஜுலை.31 ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. மேலும், நாகர்கோவில்-தாம்பரத்திற்கு மாலை 4.30 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் இன்று, நாளை, 25, 29, 30 ஆகிய தேதிகளில் தாம்பரத்திற்கு பதிலாக எழுப்பூருக்கு சென்றடையும். இதேபோல், பல்வேறு ரயில்கள் முழுமையாகவும் பகுதியாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 22, 2024

நெல்லை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதனால் சில மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், திருநெல்வேலி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் வெளியில் செல்லும் போது முன்னெச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News July 21, 2024

அணு மின் நிலைய அதிகாரியின் முக்கிய பேச்சு

image

நெல்லையில் இன்று (ஜூலை 21) நடந்த அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள் பட்டமளிப்பு விழாவில் சிறப்புரையாற்றிய கூடங்குளம் அணு மின் நிலைய விஞ்ஞானி ஸ்ரீ ஜாய் வர்கீஸ் பேசுகையில், கூடங்குளம் அணு மின் நிலையத்தில் வெளியேற்றப்படும் வெப்பநீரால் கடல் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என பரப்பப்படும் தகவல் தவறானது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மிகவும் தரமான அளவில் அணுமின் நிலையம் கட்டமைக்கப்பட்டுள்ளது என்றார்.

News July 21, 2024

திருநெல்வேலி மாவட்டத்திற்கு மழை

image

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மேற்கு திசை காற்று மாறுபாடு காரணமாக, ஆங்காங்கு மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News July 21, 2024

நெல்லை டிஎஸ்பி திடீர் இடமாற்றம்

image

தமிழகத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் கடந்த சில தினங்களாக இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் திருநெல்வேலி புறநகர் சப்-டிவிஷன் டிஎஸ்பியாக பணி செய்து வந்த பாலசுந்தரம் மதுரை ஊமச்சிகுளம் சப்-டிவிஷன் டிஎஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை டிஜிபி சங்கர் ஜிவால் பிறப்பித்துள்ளார்.

error: Content is protected !!