India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்று காலை 10 மணிக்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இந்திய தேர்தல் ஆணைய அறிவுரையின்படி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல்களை மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கார்த்திகேயன் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட உள்ளார். இதில் கலந்துகொண்டு பொதுமக்கள் தங்கள் வாக்காளர் பட்டியல் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
திருநெல்வேலி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கிருஷ்ணகுமார் ஆலோசனைப்படி விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி ஆந்திர மாநிலம் கான்லாப்பூர் நிறுவனத்திலிருந்து 1,196 மெட்ரிக் டன் யூரியா ரயில் மூலம் கங்கைகொண்டான் ரயில் நிலையத்திற்கு இன்று வந்தது. இங்கிருந்து நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி ஆகிய மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் பிரித்து அனுப்பும் பணி நடைபெற்றது.
தட்டச்சு தேர்வு வரும் 31 மற்றும் செப்.,1ஆம் தேதி நடைபெறுகிறது. நெல்லை மண்டலத்தில் தாழையூத்து சங்கர் நகர், சங்கர் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் சேரன்மகாதேவி ஸ்காட் கல்லூரி உள்ளிட்ட 4 மையங்களில் இந்த தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு இளநிலை முதுநிலை பிரிவுகளில் மொத்தம் 5,000 பேர் தேர்வு எழுத உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
அம்பை அருகே ஊர்க்காடு கிராமத்தில 14 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சங்கர் என்ற மூர்த்தி மற்றும் மாரியப்பன் ஆகிய 2 பேருக்கு தலா 25 ஆண்டு சிறை தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.10 லட்சம் அரசு இழப்பீடு வழங்கவும் நெல்லை போக்சோ நீதிமன்ற பொறுப்பு நீதிபதி சுரேஷ் இன்று (ஆக.28) தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
நெல்லை எம்.பி ராபர்ட் ப்ரூஸ் நெல்லை ரயில் நிலையத்தை நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், ஆண்டுக்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டித் தரும் திருநெல்வேலி ரயில் நிலையத்தை தலைமையிடமாக கொண்டு தனிக்கோட்டம் உருவாக்க வேண்டும். பகல் நேரத்தில் நெல்லையில் இருந்து சென்னைக்கு பயணிகள் இயக்க வேண்டும் என மத்திய அரசிடம் தான் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தார்.
நெல்லை பெருமாள்புரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(32). இவர் கடந்த 16ஆம் தேதி பகுதி நேர வேலைக்காக தனது whatsapp எண்ணிற்கு வந்த தகவலை நம்பி செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபரின் அறிவுறுத்தல்படி, பல்வேறு வங்கி கணக்குகளுக்கு மொத்தம் ரூ.18,17,500 அனுப்பியுள்ளார். பின்னரே, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மணிகண்டன் புகாரின் பேரில் மாநகர சைபர் கிரைம் போலீசார் நேற்று(ஆக.,27) வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
அபிஷேகப்பட்டி M.S.யுனிவர்சிட்டியில் நேற்று(ஆக.,27) நடைபெற்ற 4 மாவட்ட அளவிலான ‘நான் முதல்வன்’ திட்ட கருத்தரங்கில் நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் பேசினார். அப்போது, “சந்திரனுக்கு விண்கலம் போனாலும் அதற்கான எரிபொருள் மற்றும் எஞ்சின் மகேந்திரகிரியில் இருந்தது செல்கிறது. தமிழ்நாட்டின் அடுத்த வளர்ச்சியில் ஒருங்கிணைந்த நெல்லை மண்டலம் முக்கிய பங்களிப்போடு திகழ்ந்து கொண்டிருக்கிறது” என்றார்.
திருநெல்வேலி மாவட்ட முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள் முன்பதிவு செய்து பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். கூடுதல் விவரங்களுக்கு 95140 0777 என்ற எண்ணை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார். கடைசி நாள் செப்.,2ஆம் தேதி ஆகும்.
நெல்லை வழியாக நாகர்கோவில் – சென்னை வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி விரைவில் தொடங்கி வைக்கிறார். நாகர்கோவிலில் இருந்து தினமும் பிற்பகல் 2:20 மணிக்கு புறப்பட்டு நெல்லை வழியாக இரவு 11 மணிக்கு சென்னை சென்றடையும். சென்னை எழும்பூரில் இருந்து தினமும் அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 1:50 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். புதன்கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் இந்த ரயில் இயங்கும்.
பிரதம மந்திரியின் விருதான ஐந்து முதல் 18 வயதுக்குட்பட்ட தன்னலமற்ற செயல்களை செய்த குழந்தைகள், வீரதீர செயல் செய்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன. இதற்கு விண்ணப்பிக்கும் தேதி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு 6369101252 என்ற எண்ணிலும், குழந்தைகள் பாதுகாப்பு அலகிலும் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் கார்த்திகேயன் இன்று (ஆக.27) தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.