Tirunelveli

News November 24, 2024

VAO வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் வாலிபர் கைது

image

பேட்டை காந்திநகர் ஐஓபி காலனி தெருவை சேர்ந்த VAO அந்தோணி தங்கராஜ் என்பவர் வீட்டில் கடந்த 6 ஆம் தேதி 51 பவுன் நகை திருடுபோனது. இது குறித்து பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து 2 தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்ற ரகசிய தகவல் கிடைத்தது. கேரளா விரைந்த போலீசார் மதனராய் என்ற வாலிபரை கைது செய்தனர்.

News November 24, 2024

பாஜக பிரமுகர் கொலையில் வாலிபர் கைது

image

பாஜக இளைஞரணி பொதுச்செயலாளராக இருந்த பாளை மூலிகுளம் பகுதியைச் சேர்ந்த ஜெகன் பாண்டியன் கடந்த ஆண்டு ஆக.30 அன்று வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் பாளை போலீசார் 13 பேரை கைது செய்தனர். இவர்கள் ஜாமீனில் இருப்பதால் நீதிமன்ற விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும். இதில் அஜித் குமார் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்ததால் தலைமறைவாக இருந்த அஜித்குமார் இன்று கைது செய்தனர்.

News November 24, 2024

பழனிக்கு ரூ.120 இல் ரயில் பயணம் 

image

திண்டுக்கல் – கோவை சிறப்பு மெமு ரயில் மூலம் நெல்லைப் பயணிகள் ரூ.120 செலவில் பழனி செல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நாகர்கோவில்- கோவைக்கு பகலில் செல்லும் ரயிலில் நெல்லையிலிருந்து ஏறும் பயணிகள் மதியம் 1.20 மணிக்கு திண்டுக்கல்லில் இறங்கி அங்கிருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்படும் மெமோ ரயிலில் ஏறினால் 3 மணிக்கு பழனிக்கு செல்ல முடியும். இதற்கு நேரடி டிக்கெட் ரூ.120 மட்டுமே என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 24, 2024

சைக்கிளில் சென்று தூர்வாரும் பணியினை ஆய்வு செய்த மேயர்

image

டவுன் 25 வது வார்டுக்குட்பட்ட நெல்லை கால்வாயில் தூர் வாரும் பணி இன்று(நவ.24) நடைபெற்றது. இப்பணிகளை மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் சைக்கிளில் சென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து கால்வாயில் தேங்கியுள்ள பிளாஸ்டி கழிவு பொருட்கள், மண் ஆகியவற்றை முழுமையாக அப்புறப்படுத்த உத்தரவிட்டார். இந்த கால்வாய்யினை தூர்வாருவதின் மூலம் நெல்லை டவுன் பகுதிகளில் மழைக்காலங்களில் மழை நீர் தேங்காது என்பது குறிப்பிடத்தக்கது.

News November 24, 2024

வாக்காளர் திருத்த சிறப்பு முகாம்

image

பாளை வடக்கு பகுதி அதிமுக செயலாளர் ஜெனி, 37 வது வார்டு வட்ட செயலாளர் வேல் பாண்டியன், திருநெல்வேலி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அன்பு அங்கப்பன் ஆகியோர் கேடிசி நகர் 37வது வார்டு பகுதியில் உள்ள 7 பூத்துகளுக்கு நடைபெறும் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் பணியினை ரோஸ்மேரி பள்ளியில் இன்று பார்வையிட்டனர். இதில் வட்ட பிரதிநிதி சின்ன பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News November 24, 2024

1490 வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் இன்றும் நடைபெறுகிறது

image

நெல்லை மாவட்டத்தில் நெல்லை, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய ஐந்து சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் 1490 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இந்த வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பெயர் சேர்க்க, நீக்க, திருத்த சிறப்பு முகாம் கடந்த 16, 17, நேற்று நடைபெற்றது. தொடர்ந்து இன்றும் நடைபெறுகிறது. இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டது.

News November 24, 2024

27ஆம் தேதி பிஎஃப் குறைதீர்க்கும் முகாம் அறிவிப்பு

image

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நெல்லை உதவி ஆணையர் குமாரவேல் விடுத்துள்ள செய்தி குறிப்பில், நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் எஸ்ஏவி பாலகிருஷ்ணா பள்ளியில் வரும் 27ஆம் தேதி காலை 9 மணிக்கு வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. இதில் இ.எஸ்.ஐ. உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர், தொழிலதிபர்கள், அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் பங்கேற்கலாம் என தெரிவித்துள்ளார்.

News November 23, 2024

இரவு ரோந்து காவலர்கள் விபரம்

image

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின்படி இன்று (நவ.23) இரவு பொதுமக்களின் உதவிக்காக ரோந்து காவலர்கள் நியமனம் செய்யப்பட்டு அவர்களின் பெயர், தொடர்பு எண் உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய அட்டவணையை வெளியிட்டுள்ளனர். மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் இரவு நேர உதவிக்கு இந்த காவலர்களை பயன்படுத்திக் கொள்ள மாவட்ட காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

News November 23, 2024

ரயில்களில் கூடுதலாக 6 பெட்டிகள்

image

சென்னை தாம்பரத்திலிருந்து செங்கோட்டைக்கு வாரம் 3 முறை இயக்கப்படும் சிலம்பு சூப்பர் பாஸ்ட் ரயிலுக்கும், அதேபோன்று திருநெல்வேலி வழியாக நாகர்கோவிலுக்கு வாரம் 3 நாட்கள் இயக்கப்படும் சூப்பர் பாஸ்ட் ரயிலுக்கும் கூடுதலாக 6 பெட்டிகள் விரைவில் இணைக்கப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை தென்னக ரயில்வே வெளியிட்டுள்ளது. இதனால் இந்த வழித்தட ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News November 23, 2024

கட்சியிலிருந்து நீக்கப்பட்ட தினத்தை கொண்டாடிய கவுன்சிலர்

image

கடந்த ஆண்டு நவ.23 அன்று திமுக கட்சியில் இருந்து திருநெல்வேலி மாநகராட்சி கவுன்சிலர் பவுல்ராஜ் தற்காலிகமாக நீக்கப்பட்டதாக அறிவிப்பு வந்தது. திமுக தலைமைக்கு மன்னிப்பு கடிதம் கொடுத்தும் கட்சியில் இதுவரை சேர்க்கப்படவில்லை. இதையடுத்து அவர் கட்சியில் இருந்து நிரந்தரமாக விலகினார். இதனை நிகழ்வினை பாளை மத்திய சிறை எதிரில் உள்ள காது கேளாதார் பள்ளி மாணவர்களுக்கு இன்று மதிய உணவு வழங்கி கொண்டாடினார்.

error: Content is protected !!