Tirunelveli

News July 25, 2024

களக்காட்டில் சந்தன மரம் வெட்டி கடத்தல்

image

நெல்லை மாவட்டம் களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடம் சிங்கம்பத்தில் உள்ளது. இங்கு சந்தன மரம் உள்ளிட்ட ஏராளமான மரங்கள் உள்ளன. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவில் மர்ம நபர்கள் அங்குள்ள சந்தன மரத்தை வெட்டி கடத்தி சென்றுள்ளனர். நேற்று காலை கோவிலுக்கு வந்த பக்தர்கள் மரம் வெட்டப்பட்டு இருப்பதைக் கண்டு நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து களக்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News July 25, 2024

TNPL: நெல்லை அணி அதிர்ச்சி தோல்வி

image

திருப்பூர் – நெல்லை இடையேயான TNPL போட்டி நேற்று நெல்லையில் நடைபெற்றது. முதலில் ஆடிய திருப்பூர் அணி, அதிரடியாக விளையாடி 20 ஓவர்கள் முடிவில் 189 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய நெல்லை அணி, தொடக்கத்தில் தடுமாறினாலும் மிடில் ஆர்டரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ரித்திக்-சோனுவின் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தும், 4 ரன்கள் வித்தியாசத்தில் நெல்லை அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

News July 24, 2024

ஒரே நாளில் 200 பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்பு

image

தனியார் துறை நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபர்மேஷன் நிறுவனம் சார்பில் நெல்லை மாவட்டத்தில் உள்ள பல்வேறு 200 காலி பணியிடங்களுக்கு சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 26 ஆம் தேதி காலை 10 மணி முதல் நடைபெறுகிறது. 10ஆம் வகுப்பு முதல் பட்டதாரி வரை, 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் கல்வி சான்று ஆதார் அட்டையுடன் பங்கேற்கலாம் என வேலைவாய்ப்பு மைய உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

News July 24, 2024

“வீரவநல்லூரில் கைதான ரவுடிக்கு சம்பந்தமில்லை”

image

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் கைது செய்யப்பட்ட ரவுடி வீரமணிக்கும் சென்னை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்குக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னை ரவுடி பட்டியலில் இருக்கும் வீரமணி சொந்த ஊரில் வைத்து வேறொரு வழக்கு சம்பந்தமாக கைது என கூடுதல் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 24, 2024

நெல்லை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று(ஜூலை 24) 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நெல்லை மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 24, 2024

46 ஆசிரியர்களுக்கு ஒரே நாளில் டிரான்ஸ்பர்

image

திருநெல்வேலி மாவட்ட அளவில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு நேற்று(ஜூலை 23) காலை முதல் இரவு வரை நடைபெற்றது. இதில் காலிப்பணியிடங்களுக்கு இட மாறுதலாகி செல்ல 46 ஆசிரியர்கள் ஒப்புதல் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் விரும்பிய இடத்திற்கான டிரான்ஸ்பர் உத்தரவை முதன்மை கல்வி அலுவலர் முத்துசாமி வழங்கினார். தொடர்ந்து இன்று(ஜூலை 24) வெளி மாவட்ட மாறுதல் கலந்தாய்வு நடந்தது.

News July 24, 2024

திருநெல்வேலியில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

image

சட்டம் ஒழுங்கு குறைபாடு, ரேசன் கடையில் பாமாயில் பருப்பு சீராக வழங்காதது, மின் கட்டண உயர்வு ஆகியவற்றை கண்டித்து திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் இன்று(ஜூலை 24) அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேச ராஜா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னணி நிர்வாகிகள் பலர் பேசினர். ஏராளமான தொண்டர்கள் கட்சி கொடிகள் மற்றும் கண்டன பதாதைகளுடன் பங்கேற்றனர்.

News July 24, 2024

நெல்லை அருகே வயிற்றில் பாய்ந்த குண்டு?

image

திசையன்விளை அருகே உள்ள கீரைகாரன்தட்டு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திசன்(49). இவர் நேற்று(ஜூலை 23) திசையன்விளை அருகே உள்ள மன்னார்புரம் காட்டுப்பகுதியில் நடந்து சென்றபோது, வனவிலங்குகளை வேட்டையாடும் கும்பல் சுட்டதில் வயிற்றில் ஏர்கன் குண்டு பாய்ந்ததாக கூறி அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். தகவலறிந்த போலீசார் அதன் உண்மை தன்மை குறித்து விசாரித்து வருகின்றனர்.

News July 24, 2024

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

image

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்ட்டுள்ளார். சென்னையைச் சேர்ந்த ரவுடி வைரமணி, ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப் பின்பு தனது சொந்த ஊரான வீரநல்லூரில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் நெல்லையில் அவரை கைது செய்தனர். அவர் ஆற்காடு சுரேஷின் கூட்டாளி என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது, கொலை சம்பவத்தில் தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News July 24, 2024

நெல்லையில் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

குமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல். இந்த மூன்று மாவட்டங்களிலும் மதியம் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் சில இடங்களில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதல் தென் மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!