India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நெல்லை மாநகர காவல்துறை முக்கிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. அதில், உங்கள் வீட்டை வாடகைக்கு கொடுக்கும்போது அந்த வீட்டில் அந்த நபர்கள்தான் குடியிருக்கிறார்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். வீட்டு உரிமையாளரின் அனுமதியின்றி குத்தகைக்கு அல்லது வாடகைக்கு பெற்ற நபர் அவ்வீட்டினை உள் வாடகைக்கு கொடுப்பது சட்டப்படி குற்றமாகும். இது போன்று செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

தமிழக சட்டப்பேரவை தலைவரும் ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினருமான அப்பாவு, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த நேரத்தில் அதிமுகவை சேர்ந்த எம்எல்ஏக்களை மீது அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்யப்பட்டது. இதை எதிர்த்து, அதிமுக செய்தி தொடர்பாளர் பாபு முருகவேல் நேற்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

நெல்லை மின் பகிர்மான வட்ட கழகம் சார்பில் இன்று வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பதிவில், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மழை காலங்களில் மின்கம்பங்கள் மற்றும் மின்மாற்றி அருகே பொதுமக்கள் நின்றால் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு ஏற்படும் நிலை உள்ளது. எனவே மின்கம்பங்கள் & மின்மாற்றிகளின் அருகே பொதுமக்கள் நிற்க வேண்டாம் என வலியுறுத்தியுள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு வனத்துறை அதிகாரிகள் அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் நெல்லை மாவட்ட வன அலுவலராக இருந்த முருகன் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். அதேபோல் நெல்லை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக கலா இயக்குநராக இருந்த மாரிமுத்து வேலூர் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி தொழிலாளர் உதவி ஆணையர் திருவள்ளுவன் நேற்று(நவ.27) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல் சட்டத்தின்படி, குழந்தைகளை எந்த ஒரு பணியிலும் அபாயகரமான தொழில்களிலும் பணியமர்த்தக் கூடாது. மீறினால், வேலை அளிப்பதற்கு 50 ஆயிரம் அபராதமும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என எச்சரித்தார்.

நெல்லை, சுத்தமல்லி கொலை வழக்கில் தொடர்புடைய இளைஞர் சேரன்மகாதேவி கோர்ட்டில் சரணடைந்துள்ளார். இளைஞர் முத்துகிருஷ்ணன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அதே பகுதியை சேர்ந்த முருகன் நேற்று சேர்ன்மகாதேவி கோர்ட்டில் நேற்று(நவ.,27) சரணடைந்துள்ளார். முத்துகிருஷ்ணன் உடலை வாங்க மறுத்து, அவரது உறவினர்கள் 4-வது நாளாக இன்றும்(நவ.,28) போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நெல்லை மாவட்டத்தில் இன்று(நவ.,28) மாலை 4 மணிக்கு நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. #மாலை 4:30 மணிக்கு பாளையங்கோட்டை சிவன் கோயிலில் கிருத்திகை மாத பிரதோஷ வழிபாடு நடைபெறுகிறது.#மாலை 5.30 மணிக்கு நெல்லை டவுன் நெல்லையப்பர் கோயிலில் ஆறுமுக சனதியில் விசாக வழிபாடு பஜனை நடைபெறுகிறது.

நெல்லை மாவட்டம் சுத்தமல்லியில் கொலை செய்யப்பட்ட முத்துக்கிருஷ்ணன் வீட்டிற்கு நேரில் சென்று அவர்களது குடும்பத்தினரிடம் பசுபதி பாண்டியன் சகோதரி பார்வதி சண்முகம் நேற்று ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து, உண்மை குற்றவாளிகளை விரைந்து கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாரிடம் வலியுறுத்துவதாக அவர் தெரிவித்தார். இந்த நிகழ்வின்போது முத்துகிருஷ்ணன் குடும்பத்தினர் & பார்வதி ஆதரவாளர்கள் உடன் இருந்தனர்.

நெல்லை மாவட்ட அளவில் நேர யுவகேந்திரா சார்பில் இளையோர் திருவிழா டிச.4-ம் தேதி பாளை சேவியர்ஸ் கல்லூரியில் நடைபெற உள்ளது. இதில் 5 தலைப்புகளில் மாணவர்களுக்கு ஓவிய உள்ளிட்ட போட்டிகள் நடைபெற உள்ளன. பங்கேற்க விரும்புபவர்கள் டிச.2ம் தேதி மாலை 5 மணிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும் மேலும் தகவலுக்கு என் ஜி ஓ காலனியில் உள்ள நேரு யுவகேந்திரா அலுவலகத்தில் தொடர்பு கொள்ளலாம் என அலுவலர் ஞானசந்திரன் தெரிவித்துள்ளார்

திருநெல்வேலி மாநகர காவல் துறை ஆணையர் ரூபேஷ் குமார் மீனா உத்தரவுப்படி, நெல்லை மாநகர காவல் நிலைய பகுதிகளில் இன்று நவ.27 இரவு முதல் நாளை காலை வரை பணியில் இருக்கும் காவல் அதிகாரிகள் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, காவல் சேவை தேவைப்படும் பொதுமக்கள் அவர்களது சம்பந்தப்பட்ட கைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு சேவையை பெறலாம்.
Sorry, no posts matched your criteria.