India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருநெல்வேலி மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து துறைசார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கூடுதல் தலைமை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் நடைபெற்றது. உடன், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
திருநெல்வேலி மாநகர் குறுக்குத்துறை தாமிரபரணி நதிக்குள் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் கல்வெட்டுகளை நெல்லை பல்கலைக்கழக தொல்லியல் துறை மாணவிகள் மீனா, சுகன்யா, பாரதி, ராணா ஆகியோர் படிவம் எடுத்து ஆய்வு செய்தனர். இதில் 950 ஆண்டு பழமையான கோயில் என தெரியவந்துள்ளது. கருவறை 1000 ஆண்டு பழமை வாய்ந்ததாகும். ஆண்டுதோறும் வெள்ளம் வெள்ளத்தில் இக்கோயில் மூழ்கினாலும் கம்பீரமாக காட்சியளிக்கிறது.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நெல்லையில் இன்று மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை சந்தித்தார். அப்பொழுது வருகின்ற 10ஆம் தேதிக்குள் திருநெல்வேலியில் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குறித்த கவன ஈர்ப்பு மாநாடு நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வின் போது ஊத்து எஸ்டேட் பிரதீஷ், ஊத்து பால்சாமி, வழக்கறிஞர் விமல் ஆகியோர் உடன் இருந்தனர்.
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. 8 சிறப்பு கவுண்டர்களில் குறைகள் வாரியாக மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் குறைகளை கேட்டு மனுக்களை பெற்றார். மேலும் பொது நிவாரண நிதியிலிருந்து பயனாளிகளுக்கு உதவித்தொகைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி மாநகரத்தின் கிழக்கு காவல் துணை ஆணையராக விஜயகுமார் நியமனம் செய்யப்பட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து அவர் இன்று(செப்.,2) ஆணையாளர் அலுவலகத்தில் முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர் புதிய துணை ஆணையாளர் விஜயகுமாருக்கு சக காவலர்கள் பணி சிறக்க வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிகழ்வின்போது காவலர்கள் உடன் இருந்தனர்.
திருநெல்வேலி நெல்லையப்பர் சுவாமி கோயிலில் நடைபெறும் வருடாந்திர விழாவில் ஆவணி மூலத் திருவிழா மிகவும் பிரசித்திப்பெற்றது. இந்த விழா இன்று(செப்.,2) காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை தொடர்ந்து கோயில் கொடி மரத்திற்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாரதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள குறிப்பன்குளம் வெடிமருந்து தயாரிப்பு ஆலையில் நேற்று(ஆக.,31) முன்தினம் ஏற்பட்ட வெடி விபத்தில் பணியில் இருந்த 4 தொழிலாளிகள் சிக்கிக்கொண்டனர். இதில் கண்ணன், விஜய் ஆகிய இரு தொழிலாளிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்நிலையில், படுகாயமடைந்து சிகிச்சைக்காக பாளை., அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரில் செல்வம் என்பவரும் நேற்று இரவு(செப்.,1) உயிரிழந்தார்.
திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் தினம்தோறும் பல்வேறு அரசு நிகழ்ச்சி மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அந்த வகையில் இன்று அவர் பங்கேற்கும் நிகழ்ச்சி நிரல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாலை 4 மணிக்கு மாவட்ட ஊராட்சி அலுவலக கட்டிட திறப்பு விழா மற்றும் மாலை 4.30 மணிக்கு மகிளா காங்கிரஸ் பேரணியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார்.
நெல்லையப்பர் கோவிலில் நடைபெறும் வருடாந்திர விழாவில் ஆவணி மூலத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த விழா இன்று (செப்டம்பர் 2) காலை 7:00 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான கரூர் சித்தருக்கு நெல்லையப்பர் காட்சியளிக்கும் வைபவம் அம்பலவான சுவாமி கோயிலில் வரும் 12-ஆம் தேதி காலை 7.30 மணிக்கு நடைபெறும் என கோயில் நிர்வாக அலுவலர் ஐயர் சிவமணி தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் 3 தினங்களாக காற்றின் வேகம் மீண்டும் அதிகரித்துள்ளது. திசையன்விளை மற்றும் பாளையங்கோட்டை வட்டாரத்தில் வெப்பத் தாக்கம் இன்று பகலில் வெகுவாக குறைந்தது. இந்நிலையில், மாவட்டத்தில் அதிகபட்சமாக 94 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. ச
Sorry, no posts matched your criteria.