Tirunelveli

News September 4, 2024

எம்பிபிஎஸ்: இதுவரை 85 பேர் சேர்ந்துள்ளனர்

image

எம்பிபிஎஸ் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு முதற்கட்ட கலந்தாய்வு நடந்துள்ளது. இதில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான ஒதுக்கீடு உள்ளிட்ட இடங்களை பெற்ற மாணவர்கள் தங்களுக்குரிய கல்லூரிகளில் சேர்ந்து வருகின்றனர். நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் இதுவரை 85 பேர் சேர்ந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. வாய்ப்பு பெற்றவர்கள் 5ஆம் தேதிக்குள் சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News September 3, 2024

நெல்லை மாவட்டத்தில் சட்டமன்ற மதிப்பீட்டு குழு நாளை ஆய்வு

image

நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “நெல்லை மாவட்டத்தில் சட்டமன்ற மதிப்பீட்டு குழு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் செப் (4) நடைபெற உள்ளது. கூட்டத்தில் அரசுத்துறைகளின் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 3, 2024

நெல்லை – தாம்பரம் நாளை சிறப்பு ரயில்

image

திருநெல்வேலியில் இருந்து நாளை(செப்.04) இரவு 10.20 மணிக்கு (06040) தாம்பரம் சிறப்பு ரயில் புறப்பட்டு மறுநாள் காலை 11.25 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். விழுப்புரம், பண்ருட்டி, கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, தஞ்சை, திருச்சி, மதுரை வழியாக இந்த சிறப்பு ரயில் திருநெல்வேலி சென்றடையும் என ரயில்வே நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு இந்த ரயில் இயக்கப்படுகிறது.

News September 3, 2024

செஞ்சிலுவை சங்க புதிய நிர்வாகிகள் 19ஆம் தேதி தேர்வு

image

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்தி குறிப்பில், நெல்லை மாவட்ட செஞ்சிலுவை சங்கத்திற்கான புதிய நிர்வாகிகளுக்கான தேர்வு செய்யும் பொதுக்குழு கூட்டம் செப்.19ஆம் தேதி காலை 11 மணிக்கு வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் இன்ஜினியரிங் கல்லூரியில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் அனைத்து ஆயுள்கால உறுப்பினர்களும் தங்களுக்கு கிடைக்கப்பெற்ற சுற்றறிக்கையுடன் தவறாமல் ஆஜராக வேண்டும்.

News September 3, 2024

64 வணிக நிறுவனங்களுக்கு சிக்கல்!

image

நெல்லை தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) முருகப் பிரசன்னா விடுத்துள்ள செய்திக் குறிப்பில், நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஆக., மாதம் 109 கடை மற்றும் நிறுவனங்களில் எடை அளவு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 64 நிறுவனங்கள் விதி மீறியது கண்டறியப்பட்டது. சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றுள்ளார்.

News September 3, 2024

நெல்லை மக்களே! முக்கிய ரயில் சேவைகள் ரத்து

image

ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் கனமழை மற்றும் தண்டவாளத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக நாகர்கோவிலில் இருந்து நெல்லை வழியாக பெங்களூருக்கு இயக்கப்படும் விரைவு ரயில் இன்று(செப்.,3) ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதுபோல் மேற்கு வங்க மாநிலம் புருலியாவில் இருந்து நெல்லை வரும் ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. நெல்லை வழியாக குமரி செல்ல வேண்டிய கவுரா ரயிலும் ரத்தானது. SHARE IT.

News September 3, 2024

பாளை., அருகே கோர விபத்தில் அக்காள் – தம்பி பலி!

image

பாளையங்கோட்டை நான்கு வழி சாலை, ரெட்டியார்பட்டி அருகே இன்று(செப்.,3) அதிகாலை வேகமாக சென்ற காருடன் மற்றொரு வாகனம் மோதி கோர விபத்து ஏற்பட்டது. இதில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அக்காள், தம்பி இருவரும் உடல் நசுங்கி உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளிவந்துள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்த பாளை., தீயணைப்பு மீட்பு படையினர் & போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

News September 3, 2024

நெல்லை வரும் சட்டப்பேரவை மதிப்பீட்டு

image

தமிழக சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு நடப்பு நிதியாண்டிற்கான ஆய்வு நிகழ்ச்சிக்காக நெல்லைக்கு செப்.,4ஆம் தேதி வருகை தர உள்ளனர். வேளாண் உழவர் நலத்துறை உள்ளிட்ட துறைகளின் திட்ட செயல்முறை வளர்ச்சி மற்றும் தற்போதைய நிலை குறித்து கள ஆய்வு செய்கின்றனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் ஆய்வுக் கூட்டமும் நடைபெற உள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News September 3, 2024

ஒரே நாளில் ஐந்து பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

image

நெல்லை மாவட்டத்தில் இன்று பணகுடி முருகன் (35), வள்ளியூர் அஜித்குமார் (24) ஆ.திருமலாபுரம் ராமகிருஷ்ணன் (34) தேவர் குளம் ஆனந்தராஜ் (45) சீவலப்பேரி முத்துராஜா (20) ஆகியோர் நேற்று குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். வெவ்வேறு வழக்குகளில் தொடர்புடைய இவர்கள் எஸ் பி சிலம்பரசன் பரிந்துரையின் படி கலெக்டர் உத்தரவை அடுத்து குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

News September 2, 2024

மீனவ கிராமத்தில் வாலிபர் வெட்டிக் கொலை

image

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள மீனவர் கிராமமான கூந்தங்குழியில் இன்று அஜித் என்ற வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கூடங்குளம் போலீசார் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்றுள்ளதா ? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலையால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகின்றது.

error: Content is protected !!