Tirunelveli

News July 30, 2024

மாஞ்சோலையை எடுத்து நடத்த இயலாது – டேன் டீ

image

நெல்லை மாவட்டம் அம்பை மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மாஞ்சோலை விவகாரத்தில் தமிழ்நாடு தேயிலை தோட்டம் விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று (ஜூலை 30) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகம் சார்பாக மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை அரசு எடுத்து நடத்த இயலாது என பதில் அளித்துள்ளது.

News July 30, 2024

பாதுகாப்பு பணியில் 620 போலீசார் – டிஎஸ்பி தகவல்

image

அம்பை அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள காரையார் சொரிமுத்து அய்யனார் கோயில் ஆடி அமாவாசை திருவிழா வருகிற 4ஆம் தேதி வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இது தொடர்பாக அம்பை டிஎஸ்பி சதீஷ்குமார் நேற்று கூறுகையில்; ஆடி அமாவாசை திருவிழாவிற்காக 20 இன்ஸ்பெக்டர், 54 எஸ்ஜகள் உட்பட 620 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பக்தர்கள் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்றார்.

News July 30, 2024

நெல்லையில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நெல்லை மாவட்டத்திலும் இன்று(ஜூலை 30) காலை 10 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சில இடங்களில் மழை நீர் தேங்கி, போக்குவரத்து பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. வெளியில் போகும்போது முன்னெச்சரிக்கையாக குடை எடுத்துட்டு போங்க மக்களே!

News July 30, 2024

நெல்லையில் பல சுற்றுலா தலங்கள் மூடல்

image

அம்பை அருகே காரையாறு சொரிமுத்தையனார் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு வருகிற 31.07.2024 முதல் 08.08.2024 வரை பாபநாசம் அகஸ்தியர் சூழல் சுற்றுலா அருவி, முண்டந்துறையில் vehicle safari, மணிமுத்தாறு சூழல் சுற்றுலா அருவி மற்றும் மாஞ்சோலை சூழல் சுற்றுலா பகுதிகள் மூடப்படுவதாக களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துறை இயக்குநர் இளையராஜா நேற்று(ஜூலை 29) தெரிவித்துள்ளார்.

News July 30, 2024

வீரவநல்லூரில் முன்னோடி முகாம்: கலெக்டர் அறிவிப்பு

image

சேரன்மகாதேவி அருகே வீரவநல்லூர் கிராமத்தில் மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடர்பு முகாம் ஆக.28ஆம் தேதி நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு ஆக.1ம் தேதி வடக்கு வீரவநல்லூர் பேரூராட்சி திருமண மண்டபத்தில் வைத்து காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை ‘முன்னோடி முகாம்’ நடைபெற உள்ளது. முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு மனு அளிக்குமாறு மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் நேற்று கேட்டுக்கொண்டுள்ளார்.

News July 30, 2024

வீரவநல்லூரில் முன்னோடி முகாம்; ஆட்சியர் அறிவிப்பு

image

சேரன்மகாதேவி அருகே வீரவநல்லூர் கிராமத்தில் மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடர்பு முகாம் வருகிற ஆக.28ஆம் தேதி நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு வருகிற ஆக.1ம் தேதி வடக்கு வீரவநல்லூர் பேரூராட்சி திருமண மண்டபத்தில் வைத்து காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை முன்னோடி முகாம் நடைபெற உள்ளது. முகாமிற்கு பொதுமக்கள் கலந்து கொண்டு மனு அளிக்குமாறு மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று கேட்டுக்கொண்டார்.

News July 30, 2024

மீனவர்கள் குறை தீர்க்கும் கூட்டம் ஒத்திவைப்பு

image

திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த குறை தீர்க்கும் கூட்டம் வருகின்ற ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், குறைதீர்க்கும் கூட்டம் குறித்தான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ராதாபுரம் மீன்துறை உதவி இயக்குனர் இன்று அறிவித்துள்ளார்.

News July 30, 2024

மாணவர்களுக்கு நாளை சைக்கிள் வழங்கும்

image

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை புனித யோவான் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில், இன்று காலை 9 மணி அளவில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் கலந்து கொண்டு இலவச சைக்கிள்களை மாணவர்களுக்கு வழங்க உள்ளார்.

News July 29, 2024

மீனவர்கள் குறை தீர்க்கும் கூட்டம் ஒத்திவைப்பு

image

திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த குறை தீர்க்கும் கூட்டம் வருகின்ற ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், குறைதீர்க்கும் கூட்டம் குறித்தான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ராதாபுரம் மீன்துறை உதவி இயக்குனர் இன்று அறிவித்துள்ளார்.

News July 29, 2024

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 10 செ.மீ. மழை

image

தமிழகத்தில் நேற்று முதல் வரும் ஆகஸ்ட் இரண்டாம் தேதி வரை மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் இன்று தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் அம்பை அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள நாலு முக்கு தேயிலை தோட்ட பகுதியில், கடந்த 24 மணி நேரத்தில் 10 செ.மீ. மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை மையம் தற்போது அறிவித்துள்ளது.

error: Content is protected !!