India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வாகைகுளத்தைச் சேர்ந்த தீபக் ராஜாவை கடந்த மே 20ஆம் தேதி பாளை நான்கு வழிச்சாலை அருகே ஓட்டல் முன்பு ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தது. இந்த கொலையில் தொடர்புடைய நவீன், முருகன், பவித்தன், காசிராமன், முத்து இசக்கி, ஐயப்பன் ஆகிய ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் ஆறு பேரையும் கமிஷனர் மூர்த்தி உத்தரவின் பேரில் குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்து நேற்று(ஜூலை 31) மதுரை சிறையில் அடைத்தனர்.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் இன்று விழிப்புணர்வு பதிவை வெளியிட்டுள்ளனர். அதில், “ இரு சக்கர வாகனங்களில் பெண்கள் பின்னால் அமர்ந்து பயணிக்கும்போது, தங்களுடைய ஆடைகள் சேலை மற்றும் துப்பட்டாவை காற்றில் பறக்காதபடியும், வண்டியின் சக்கரத்தில் ஆடைகள் சிக்காதபடியும் கவனமாக இருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு திருக்குறள் முற்றோதல் போட்டி நடைபெற உள்ளது. வெற்றி பெறும் மாணவர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகை மற்றும் பாராட்டு சான்று வழங்கப்படும். விண்ணப்பத்தை தமிழ் வளர்ச்சித் துறை அலுவலகத்தில் பெற்று 16ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ராதாபுரம் எம்எல்ஏவும் சபாநாயகருமான அப்பாவு இன்று தமிழக முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளார். அதில், “சீனா பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களுக்கு தடை விதித்து அறிவிப்பு வெளியிட வேண்டும். சீனா லைட்டர்களுக்கு தடை விதித்தாலும் வடநாட்டு நிறுவனங்கள் லைட்டர் மூலப்பொருட்களை இறக்குமதி செய்து தயாரிக்கின்றனர். இதனால் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு நடவடிக்கை வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்தில் வருகின்ற ஆகஸ்ட் மாதம் குறைதீர்க்கும் கூட்டம் தேதிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகின்ற 2 ஆம் தேதி வள்ளியூர் கோட்ட அலுவலகத்திலும், 6 ஆம் தேதி கல்லிடைக்குறிச்சி கோட்ட அலுவலகத்திலும், 9 ஆம் தேதி கிராமப்புற திருநெல்வேலி கோட்ட அலுவலகத்திலும் நடைபெற உள்ளதாக மேற்பார்வை பொறியாளர் அறிவித்துள்ளார்.
சமீபகாலமாகவே ‘கள்’ இறக்குவதற்கான தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பிலிருந்தும் முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக அண்ணாமலை, சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும் இதற்கு ஆதரவு தெரிவிப்பதுடன், பலதரப்பு போராட்டங்களும் முன்னெடுக்கப்படுகிறது. இந்நிலையில், ‘கள்’ விற்பனை மீதான தடையை நீக்க கோரிய மனுவை அரசு பரிசீலிக்க சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.
பனை மற்றும் தென்னை மரங்களிலிருந்து ‘கள்’ உற்பத்தி செய்யப்படுகிறது. பனை மரங்கள் நிறைந்து காணப்படும் தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மற்றும் சிவகங்கையில் கள் அதிகளவில் இறக்கப்பட்டது. கள்ளச்சராய பலி & ‘TASMAC’ மதுவின் தாக்கத்தை காட்டிலும் ‘கள்’ பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்ற கருத்தும் நிலவுகிறது. மீண்டும் ‘கள்’ விற்பனைக்கு வருவது குறித்த உங்கள் கருத்து என்ன?
தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று(ஜூலை 31) பிற்பகல் 1 மணி வரை லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலையில் ஒரு சில இடங்களில் பெய்த மழையின் காரணமாக நாங்குநேரி அருகே உள்ள கொடுமுடியாறு அணை பகுதியில் 11 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பாபநாசம் அணைப்பகுதியில் மழை இல்லாததால் அணைக்கு வரக்கூடிய நீர்வரத்தானது வினாடிக்கு 1940 கன அடியாக சரிந்துள்ளதாக இன்று காலை மாவட்ட நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.
கேரளா வயநாட்டில் நிலச்சரிவு மற்றும் திருச்சூர் மாவட்டத்தில் தண்டவாளங்களில் வெள்ளம் காரணத்தால் நெல்லை-பாலக்காடு எக்ஸ்பிரஸ் பகுதி தூரம் செய்யப்பட்டது. நெல்லையிலிருந்து நேற்று முன் தினம் இரவில் புறப்பட்டு சென்ற பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ் ஆலுவா ரயில் நிலையத்தில் நிறுத்தபட்டது. மறு மார்க்கமாக அம்பை வழியாக வந்த பாலக்காடு-நெல்லை எக்ஸ்பிரஸ் நேற்று ஆலுவாவில் இருந்து 6மணிக்கு புறப்பட்டு நெல்லை வந்தது.
Sorry, no posts matched your criteria.