India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியை நேற்று(ஆக.05) நெல்லை மாநகர மாவட்ட அதிமுக அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், பாளையங்கோட்டை வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் மருதூர் சுப்பிரமணியன், அதிமுக கழக அமைப்பு செயலாளர் சுதா பரமசிவம் உள்ளிட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர். பின்னர் நெல்லையின் அரசியல் நிலவரம் குறித்து கலந்துரையாடல் நடத்தினர்.
நெல்லை மாநகராட்சியின் மேயராக திமுக கவுன்சிலர் சரவணன் தேர்வு செய்யப்பட்டார். இவருக்கும் சக கவுன்சிலர்களுக்கும் இடையிலான மோதல் போக்கின் காரணமாக மாமன்ற கூட்டங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டதால் சரவணனுக்கு எதிரான போக்கு வெடிக்க ஆரம்பித்தது. இதனால் ஜூலை.3 அன்று திமுக தலைமையின் உத்தரவின்படி மேயர் பதவியை ராஜினாமா செய்வதாக மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவிடம் கடிதம் அளித்தார்.
இதையடுத்து நெல்லை மாநகராட்சியின் பொறுப்பு மேயராக துணை மேயர் ராஜு நியமிக்கப்பட்டார். காலியாக உள்ள மேயர் பதவிக்கு ஆக.5 அன்று மறைமுக தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. ஜூலை.31 அன்று வேட்பு மனு விநியோகம் தொடங்கிய நிலையில் ஒருவர் கூட வேட்பு மனுவை வாங்கவில்லை. நேற்று நெல்லையில் அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
அதில் வேட்பாளராக கிட்டு (எ) ராமகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார். 55 வார்டுகள் கொண்ட நெல்லை மாநகராட்சியில் 4 வார்டுகள் அ.தி.மு.க வசமும், 51 வார்டுகள் தி.மு.க கூட்டணியிடம் உள்ளது.இன்று(ஆக.5) காலை 10:30 மணிக்கு வேட்பு மனு தாக்கல் செய்து போட்டி இருந்தால் தேர்தலை நடத்தி, பிற்பகலில் முடிவை அறிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நெல்லை மாநகராட்சி தி.மு.க மேயர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள கிட்டு (எ) ராமகிருஷ்ணன் தற்போது 25 வது வார்டு தி.மு.க கவுன்சிலராக உள்ளார். இவர் தற்போது 3வது முறையாக கவுன்சிலராக இருந்து வருகிறார். இவர் 3ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். தி.மு.க குடும்பத்தைச் சேர்ந்த இவருக்கு தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகளின் கவுன்சிலர்கள் மத்தியில் பெரும் ஆதரவு உள்ளது.
திருநெல்வேலி ஆட்சியர் ஆய்வுக்கு வராததால் அமைச்சர் நேரு கண்டித்த செய்தி நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஆட்சியர் கார்த்திகேயன் முகநூல் பக்கத்தில் இதற்கான விளக்கத்தை அளித்துள்ளார். அதில், “சொரிமுத்து அய்யனார் கோவில் விழா ஏற்பாடுகளை ஆய்வு செய்து விட்டு போக்குவரத்து நெரிசல் காரணமாக தாமதம் ஏற்பட்டதாகவும், ஆட்சியர் சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் பங்கேற்றதாகவும்” தெரிவித்துள்ளார்.
தமிழக கடற்கரை பகுதிகளில் நாளை முதல் கனமழை மற்றும் மணிக்கு 55 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, மறுஅறிவிப்பு வெளியாகும் வரை நெல்லை மாவட்ட மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களை அன்புடன் வரவேற்கிறேன். பக்தர்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் என்னை தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
17 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு இன்று(ஆக.04) உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபேஷ்குமார் மீனா நெல்லை மாநகர ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் நெல்லை சரக டி.ஐ.ஜி.யாக ஐ.பி.எஸ் அதிகாரி மூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த சரவணன் ராஜினாமா செய்த நிலையில், மேயர் வேட்பாளராக ராமகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்று அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு ஆகியோர் தலைமையில் நடந்த ஆலோசனையில் ராமகிருஷ்ணன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். நெல்லை மேயருக்கான தேர்தல் நாளை(ஆக.05) நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.