India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் தொடர் கனமழையின் காரணமாக மணிமுத்தாறு அருவியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி நாளை (13.12.2024 ) முதல் மணிமுத்தாறு அருவி மற்றும் குதிரைவெட்டி வன ஓய்வு விடுதிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என வனத்துறையினர் இன்று தெரிவித்தனர்.

நெல்லை மாவட்டத்தில் இன்று காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பெய்த மழை விபரம் மாவட்ட நிர்வாகத்தால் தற்போது அறிவிக்கப்பட்டது. மொத்தம் 242 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக அம்பாசமுத்திரத்தில் 61.40 மில்லி மீட்டர் மழை, சேரன்மகாதேவி 55 மிமீ, மணிமுத்தாறு 45 .20 மிமீ, நாங்குநேரி 24 மிமீ, நெல்லை 15 மீ, பாளையங்கோட்டை 14 மில்லிமீட்டர் மழை பெய்தது.

நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் விடுத்துள்ள அறிக்கையில் வானிலை மையம் நெல்லையில் கனமழை இருக்கும் என முன்னெச்சரிக்கை விடுத்துள்ளதால் பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஆங்காங்கே உள்ள ஓடைகள், காட்டாற்று மூலம் வரப்பெறும் மழை நீர் ஆற்றில் செல்ல வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் எந்த ஒரு நீர் நிலையிலும் இறங்கி வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டத்தில் இன்று காலை முதல் தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மாலை நேரத்தில் மிக கனமழை பல்வேறு இடங்களில் பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக நாளை(டிச.13) நெல்லை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். SHARE பண்ணுங்க மக்களே

கனமழை எதிரொலியாக நெல்லை மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்ட அறிக்கையில், மாவட்டத்தில் அணைகளின் நீர் இருப்பு குறைவாகவே உள்ளதாலும், சுமார் 60% குளங்களில் பாதிக்கும் குறைவான நீர் இருப்பு மட்டுமே உள்ளதாலும் உடனடியாக எந்த வெள்ள அபாயமும் இல்லை. வானிலை மையம் கனமழை இருக்கும் என முன்னெச்சரிக்கை விடுத்துள்ளதால் பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என கூறியுள்ளார்.

விஜயாபதி அடுத்த காடுதலா கிராமத்தைச் சேர்ந்த வீரன் என்பவர் 2019 ஆம் ஆண்டு மனநலம் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல் செய்துள்ளார். வள்ளியூர் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இந்த வழக்கு வள்ளியூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று குற்றவாளி வீரனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.6000 அபாரம் விதித்து நீதிபதி சுபத்ராதேவி தீர்ப்பளித்தார்.

நெல்லை மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று பகலில் பல இடங்களில் விட்டு விட்டு கனமழை பெய்கிறது. இந்த நிலையில் பொதுமக்கள் மழை தொடர்பான அவசர சேவைக்கான உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவசர கட்டுப்பாட்டு மையம், மின் சேவை, தீயணைப்பு, காவல்துறை எண்களை கைவசம் வைத்துக்கொண்டு தேவைப்படுபவர்கள் உதவிக்கு தொடர்பு கொள்ளலாம்.

திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் உதவி இயக்குனர் மரிய ஆண்டனி நேற்று(டிச.11) வெளியிட்ட செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் சார்பில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 20ம் தேதி காலை 10:30 மணிக்கு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் இளைஞர் வழிகாட்டு மையத்தில் நடைபெற உள்ளது என தெரிவித்துள்ளார்.

சென்னை வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையின்படி இன்று முதல் தென் தமிழகம், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா கடற் பகுதியில் காற்றின் வேகம் 35 முதல் 45 கிலோ மீட்டர் முதல் அதிகபட்சமாக 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே திருநெல்வேலி மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்குள் செல்லக்கூடாது என ராதாபுரம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அறிவித்துள்ளார்.

ராதாபுரம் பகுதியை சார்ந்த 28 மீனவர்கள் ஈரான் நாட்டில் மீன் பிடித்து செய்தபோது பக்ரைன் கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து அவர்கள் டிசம்பர் 10ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களை சொந்த ஊருக்கு திரும்புவதற்கான விமான கட்டணம் உட்பட அனைத்து செலவுகளையும் தமிழக அரசு ஏற்று கொண்டு சொந்த ஊருக்கு அழைத்து வர வேண்டுமென முதல்வரிடம் அப்பாவு நேற்று வலியுறுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.