Tirunelveli

News August 6, 2024

பல்கலைக்கழக வளாகத்தில் கைத்தறி கண்காட்சி

image

10 வது தேசிய கைத்தறி நாள் விழா சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை, நாளை (7.8.20 24) காலை 10.30 மணி அளவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொடங்குகிறது. இதனை மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப. கார்த்திகேயன் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றுவார் என மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 6, 2024

மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைத்த நெல்லை எம்.பி

image

டெல்லியில் மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மன்ஷூக் மான்டவியாவை சந்தித்து பீடித் தொழிலாளர்களின் மாத ஓய்வூதியத்தை ரூ.800-ல் இருந்து ரூ-6000 ஆக உயர்த்தி வழங்குமாறு நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ் இன்று (ஆக.6) கோரிக்கை மனு அளித்தார். மனுவை பெற்றுக்கொண்ட மத்திய அமைச்சர் இது குறித்து பரிசளிப்பதாக கூறினார்.

News August 6, 2024

நெல்லை இளைஞர்களுக்கு நற்செய்தி

image

நெல்லை மாவட்ட எஸ்.பி சிலம்பரசன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நெல்லை மாவட்ட ஊர்காவல் படையில் சேர விண்ணப்பிக்கலாம். 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18-45 வயதுக்குட்பட்டவர்கள் 07.08.2024-க்குள் நெல்லை மாவட்ட ஆயுதப்படை காவல் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

News August 6, 2024

நெல்லையில் சிஇஓ நேர்முக உதவியாளர் நியமனம்

image

நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளராக (இடைநிலை கல்வி) கூவாச்சிபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதிவேல் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை பள்ளிக்கல்வி பணியாளர்கள் தொகுதி இணை இயக்குனர் பிறப்பித்துள்ளார். இதற்கு அவருக்கு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

News August 6, 2024

வீடு தேடி வரும் தேசியக்கொடி

image

நாட்டின் சுதந்திர தின விழா ஆக.15 அன்று கொடாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அஞ்சல அலுவலகங்களில் தேசிய கொடி விற்பனை முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அனைத்து தலைமை மற்றும் கிளை அஞ்சல் அலுவலகங்களில் தேசிய கொடி விற்பனைக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதனை பொதுமக்கள் வாங்கி பயன்பெறுமாறு நெல்லை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.

News August 6, 2024

நெல்லையில் நிர்வாகிகளை நியமனம் செய்த ஓபிஎஸ்

image

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின், திருநெல்வேலி மாநகர மாவட்ட கழக நிர்வாகிகளை நியமனம் செய்து அக்கட்சி ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் மாவட்ட அவைத் தலைவராக பாலசுப்பிரமணியனும், மாவட்ட இணை செயலாளராக வெங்கடேஸ்வரியும், துணைச் செயலாளராக கணபதி சுந்தரம் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

News August 6, 2024

நெல்லையில் 22 ஆண்டுக்குப் பின் கைது

image

ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் உள்ள SBI வங்கி கிளையில், ரூ.50 லட்சம் மோசடி செய்த வழக்கில் குற்றவாளி என ஸ்ரீ சலபதி ராவ் என்பவரை கடந்த 2002 ஆம் ஆண்டு நீதிமன்றம் அறிவித்திருந்தது. அன்றிலிருந்து தலைமறைவாக இருந்த சலபதிராவை, CBI போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் நெல்லை சுத்தமல்லி பகுதி வீட்டில் சலபதிராவ் வாடகைக்கு தங்கி இருப்பதாக வந்த தகவலையடுத்து, இன்று(ஆக.,6) அவரை CBI அதிகாரிகள் கைது செய்தனர்.

News August 6, 2024

மூன்றடைப்பு அருகே சிக்கிய ரூ.75 லட்சம் கள்ள நோட்டுகள்

image

நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு தேசிய நெடுஞ்சாலையில் இன்று(ஆக.,6) அதிகாலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அவ்வழியாக வந்த பொலிரோ வாகனத்தில் ரூ.75 லட்சம் கள்ள நோட்டு இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து, வாகனத்தில் வந்த சிவகாசியை சார்ந்த சீமைசாமி, கோபாலகிருஷ்ணன் & சங்கரன்கோவிலை சேர்ந்த கிருஷ்ண சங்கர், தங்கராஜ் ஆகிய 4 பேரை கைது செய்து மூன்றடைப்பு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News August 6, 2024

நெல்லையில் ஐடிஐ மாணவர் சேர்க்கை தேதி நீட்டிப்பு

image

நெல்லை மாவட்டத்தில் இயங்கும் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் நடப்பு ஆண்டில் மாணவர்கள் நேரடியாக சேர்க்கப்படுகின்றனர். இதற்கான சேர்க்கை தேதி வருகிற ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 890370 298 மற்றும் 9486251843, 9499055790 ஆகிய கைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News August 5, 2024

தூய்மை பணியால் 2 நாட்கள் பாபநாசம் சோதனை சாவடி மூடல்

image

காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா முன்னிட்டு கடந்த 2-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நாளை 6-ஆம் தேதி மாலை 3 மணி வரை மட்டுமே தனியார் வாகனங்கள் பாபநாசம் வனசோதனை சாவடியை கடந்து செல்ல அனுமதி வழங்கப்படும். 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் கோவில் பகுதியில் தூய்மைப் பணிகள் நடைபெறுவதால் பாபநாசம் சோதனை சாவடி மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!