India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் உள்ள சங்கர ரெட்டியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியரை கொல்ல கத்தியுடன் வந்த +2 மாணவர்கள் 3 கைது செய்யப்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர். ஒழுங்கினமாக நடந்து கொண்ட காரணத்திற்காக மதிப்பெண்னை குறைத்த ஆசிரியரை கொல்ல வந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே புதூரில் தனியார் பள்ளியில் மாணவர் பேரவை தலைவர் தேர்வு செய்வதில் மாணவர்களிடையே நேற்று மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு மாணவர் தாக்கப்பட்டார். பள்ளி நிர்வாகம் முதலில் தகராறில் ஈடுபட்ட & காயமடைந்த மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து சமரசம் செய்தது. ஆனால் பாதிக்கப்பட்ட மாணவன் போலீசில் புகார் செய்ததை அருத்து வள்ளியூர் போலீசார் 6 மாணவர்களை கூர்நோக்கு இல்லத்தில் இன்று அடைத்தனர்.
நெல்லை மண்டல வருங்கால வைப்பு நிதி அலுவலக உதவியாளர் குமாரவேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 3 ஆண்டுகளுக்கு மேல் உயிர் வாழ் சான்றிதழை சமர்ப்பிக்காதவர்கள் அருகில் உள்ள அஞ்சல் நிலையம், ஓய்வூதியம் அளிக்கும் வங்கி கிளை அல்லது பொது சேவை மையம் மூலம் உடனடியாக டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். கைப்பேசி மூலமும் செயலியை பதிவிறக்கம் செய்து சான்றிதழ் சமர்ப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் அணையின் நீர்மட்டம் இன்று(ஆக.08) காலை 117.75 அடியாகவும் மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 70.11 அடியாகவும் சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 125.39 அடியாகவும் உள்ளது. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 451 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1155 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மலைப் பகுதிகளில் மழைப்பொழிவு எதுவும் பதிவாகவில்லை. வறண்ட வானிலை நீடிக்கிறது.
நெல்லை இ.எஸ்.ஐ. மண்டல இயக்குநர் அருண் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் துணை மண்டலம் சார்பில் இ.எஸ்.ஐ. திட்டத்தில் உள்ள பயனீட்டாளர்களுக்கான குறைகளை தீர்க்கும் பொருட்டு, மாதந்தோறும் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த மாதத்திற்கான கூட்டம் வரும் 14ஆம் தேதி மாலை 4 மணிக்கு இஎஸ்ஐசி துணை மண்டல அலுவலகத்தில் நடைபெறுவதாக தெரிவித்துள்ளார்.
தாம்பரம் ரயில் நிலையத்தில் நடைமேடை பணிகள் நடைபெற்று வருவதால் நெல்லையில் இருந்து சென்னை செல்லும் ரயில்கள் 15,16,17 ஆகிய தேதிகளில் பகுதி நேரமாகவும் முழுவதுமாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. நெல்லை சென்னை ரயில் எண் 20666 வந்தே பாரத் ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. வண்டி எண் 12632 நெல்லை SF எக்ஸ்பிரஸ் பகுதியாக ரத்து செய்யப்பட்டு செங்கல்பட்டு வரை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
நெல்லை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் உதவி மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றிய கதிரவன் தேனி மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். தேனி மாவட்டத்தில் உதவி மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி வந்த மகாகிருஷ்ணன் திருநெல்வேலிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், அவர் இன்று (ஆக.7) முறைப்படி திருநெல்வேலி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு உதவி அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
நெல்லை மாநகராட்சியில் கடந்த 5ம் தேதி நடைபெற்ற மேயர் மறைமுக தேர்தலில் ராமகிருஷ்ணன் (எ) கிட்டு 30 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதையடுத்து புதிய மேயராக பொறுப்பேற்க உள்ள ராமகிருஷ்ணன் சென்னை சென்று திமுக நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்நிலையில், இன்று (ஆக.07) சென்னை மெரினாவில் உள்ள மறைந்த முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் தனது வெற்றி சான்றிதழை வைத்து ஆசி பெற்றார்.
திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் நடைபெற்று வருகின்றது. இந்த வழக்கு தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வரும் நிலையில் இந்த வழக்கானது இன்று (ஆக.07) விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கானது மீண்டும் வரும் 14ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை மலையில் இருந்து கீழே இறக்க கூடாது என திருநெல்வேலியை சேர்ந்த வன ஆர்வலர் முத்துராமன் என்பவர் தேசிய மனித உரிமை ஆணையத்தில் அளித்திருந்தார். இதனை தொடர்ந்து புகாரில் உரிய நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளுமாறு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.