Tirunelveli

News December 15, 2024

குடிநீர் குழாய்கள் சீரமைக்கும் பணி – ஆட்சியர் தகவல்

image

தாமிரபரணியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஆற்றில் உறை கிணறு மற்றும் மின் மோட்டார்கள், பைப்புகள் வயர்கள் சேதம் அடைந்துள்ளதால் அவற்றை சீரமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் சிறப்பு குழுக்கள் மூலம் நடைபெற்று வருகிறது. படிப்படியாக குடிநீர் வினியோகம் சீரமைக்கப்பட்டு வருவதாகவும், குடிநீர் தொடர்பான புகார்களுக்கு 9786566111 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

News December 15, 2024

நெல்லை – ஷாலிமார் ரயிலை நீட்டிக்க வலியுறுத்தல்

image

பணகுடி, காவல்கிணறு, வள்ளியூர் வட்டார ரயில் பயணிகள் பலனடையும் வகையில் நெல்லை – ஷாலிமார் இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் வள்ளியூர் மார்க்கமாக நாகர்கோவில் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என தென்னக ரயில்வேக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுபோல் மதுரை கன்னியாகுமரி இடையே நெல்லை வழியாக மெமு ரயில்களை இயக்க வேண்டும். இதற்கான அறிவிப்பை ஜனவரி 1ஆம் தேதி அட்டவணையில் சேர்க்க வலியுறுத்தியுள்ளனர்.

News December 15, 2024

சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு இன்று அனுமதி

image

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்டம், பாபநாசம் வனச்சரகத்தில் உள்ள சொரிமுத்தையனார் கோயிலுக்கு செல்லும் வழியில் நேற்று மழை சாலையில் பெருக்கெடுத்து ஓடியது .இதனால் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. இன்று(டிச.15) பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அகஸ்தியர் அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

News December 15, 2024

நெல்லை மாவட்டத்தின் இன்றைய நிகழ்வுகள்

image

காலை 8.30 மணிக்கு காரியாண்டியில் வெள்ளநீர் கால்வாய் கருமேனியாற்றில் அமைந்துள்ள திருப்பு அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைக்கிறார். காலை 9:00 மணி முதல் வடக்கு சங்கன் திருடு பகுதியில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. நொச்சிகுளத்தில் பிற்பகல் 2:30 மணிக்கு இலவச நோய் தடுப்பு மருத்துவ முகாம் நடக்கிறது. நெல்லை இஸ்கான் கோயிலில் மாலை ஐந்து முப்பது மணிக்கு பகவத் கீதை வைபவம் நடக்கிறது.

News December 15, 2024

இன்று காய்ச்சல் தடுப்பு முகாம் நடைபெறும் இடங்கள் 

image

மானூர் வட்டாரம் வாகைகுளம், கட்டாலங்குளம் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள 9 வட்டாரங்கள் மற்றும் மாநகரில் 11 இடங்களில் இன்று (டிச.15) காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. தொடர்ந்து பெய்யும் கனமழை காரணமாக காய்ச்சல் பரவலைத் தடுக்க பொதுமக்கள் அருகே உள்ள தங்களது மையங்களுக்கு சென்று மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 15, 2024

திருநெல்வேலி – திருவனந்தபுரம் மெமு ரயில் என்னாச்சு?

image

திருநெல்வேலி – திருவனந்தபுரம் இடையே மெமு ரயில் இயக்க வேண்டும்  என்பது நெல்லை மாவட்ட மக்களின் நீண்ட கால கனவு. ஆனால் கேரளாவில் சோரனூர் – கண்ணூர், கொல்லம் – எர்ணாகுளம் ஆகிய இரண்டு பாசஞ்சர் ரயில்களை அங்குள்ளவர்கள் பெற்றுக் கொண்டனர். நெல்லை மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையான திருநெல்வேலி-திருவனந்தபுரம் இடையே மெமு ரயில் என்னவாயிற்று என பயணிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

News December 15, 2024

தண்ணீரை திறந்து வைக்கும் சபாநாயகர்

image

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு இன்று (டிச.15) காலை 8.30 மணிக்கு நாங்குநேரி வட்டம் காரியாண்டியில் இருந்து தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு நதிநீர் இணைப்புத் திட்ட வெள்ளநீர் கால்வாயில் கருமேனியாற்றில் அமைந்துள்ள திருப்பு அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைக்க உள்ளார். இதில் அதிகாரிகள், அலுவலர்கள் பங்கேற்க உள்ளனர்.

News December 15, 2024

நெல்லை நீதிமன்றத்தில் ஒரே நாளில் 7,124 வழக்குகள் விசாரணை

image

நெல்லை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று (டிச.14) மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்ற விசாரணை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சார்பில் செய்யப்பட்டது. இதுபோல் தென்காசி மாவட்டம் மற்றும் 10 தாலுகா நீதிமன்றங்களில் தேசிய மக்கள் நீதிமன்ற விசாரணை 37 அமர்வுகளுடன் நடந்தது. ஒரே நாளில் 7,124 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

News December 14, 2024

வெள்ள கட்டுப்பாட்டு அறையில் 60 புகார்கள் மீது நடவடிக்கை

image

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேர அவசர கால கட்டுப்பாட்டு மையம் செயல்படுகிறது. இதில் நெல்லை மாவட்டத்தில் கடந்த 12ஆம் தேதி தொடங்கிய மழை இன்று வரை பெய்யும் நிலையில் இன்று மாலை 4 மணி வரை 68 புகார்கள் இங்கு பதியப்பட்டன. இதில் 60 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. கடைசி எட்டு புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 14, 2024

நெல்லை: இரவு ரோந்து காவலர்கள் விபரம்

image

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவுப்படி, நெல்லை மாவட்ட காவல் சரக பகுதிகளில் இன்று (டிச.14) இரவு முதல் நாளை காலை வரை ஆய்வு பணி மேற்கொள்ளும் அதிகாரிகள் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு அவசர காவல் தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை அவர்களது கைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!