India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாட்டில் நாளை மறுநாள்(ஆக.13) திருப்பூர், ஈரோடு, தென்காசி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நெல்லை மாவட்டத்தில் நாளை மறுநாள்(ஆக.13) கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை பாராளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ் இன்று காலை 10மணி அளவில் நகை கடையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.தொடர்ந்து 10.30 மணிக்கு மாலைமுரசு அலுவலகத்தில் ராமச்சந்திர ஆதித்தனார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார் மதியம் 1.00அளவில் மேலச்செவல் தேவாலயத்தில் தோத்திரப் பண்டிகையில் கலந்து கொள்கிறார். மாலை 5 மணிக்கு கச்சநல்லூரில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்கிறார்.
பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க நெல்லை-செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. நெல்லையில் இருந்து ஆகஸ்ட் 13,18ஆம் தேதிகளில் இரவு 10.50 மணிக்கும், மறுமார்க்கத்தில் செங்கல்பட்டில் இருந்து ஆகஸ்ட் 14,19 ஆகிய தேதிகளில் மாலை 5:55 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே இன்று அறிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
தமிழக பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், தென் தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்து வருகிறது. அதன்படி நாளை(ஆக.11), நாளை மறுநாள்(ஆக.12), ஆக.13 ஆகிய 3 நாட்களுக்கு நெல்லை மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நெல்லை மாவட்டத்திற்கு இன்று (ஆக.10) இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராமநாதபுரம், தேனி, மதுரை, நெல்லை, விருதுநகர், குமரி உள்ளிட்ட 32 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வரும் நிலையில், விவசாயிகள் சாகுபடி பணிகளை துவங்கியுள்ளனர்.
தமிழ்நாட்டில் நாளை மறுநாள்(ஆக.12) தூத்துக்குடி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நெல்லை மாவட்டத்தில் நாளை மறுநாள் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாபநாசம் அணையின் நீர்மட்டம் 116.60 அடியாகவும் மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 69.86 அடியாகவும் சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 122.37 அடியாகவும் உள்ளது. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 317 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது, அணையில் இருந்து 1155 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மலைப்பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு வரும் நீர்வரத்தானது இன்று சரிந்துள்ளது.
நாகர்கோவிலில் இருந்து நெல்லை வழியாக கச்சிகுடாவிற்கு வாராந்திர சிறப்பு ரயில்(07436) நெல்லை, மதுரை, விழுப்புரம் வழியாக இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், விழுப்புரம் காட்பாடி பிரிவில் கண்ணமங்கலம் அருகே நடக்கும் தண்டவாள பணிகள் காரணமாக நாளை நாகர்கோவிலில் இருந்து புறப்படும் ரயில் திருச்சியில் இருந்து சேலம் வழியாக காட்பாடி செல்கிறது. ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லாது என இன்று அறிவிக்கப்பட்டது.
திருநெல்வேலி வரலாற்று சிறப்புமிக்க அருள்மிகு காந்திமதி அம்பாள் உடனுறை அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் திருக்கோவிலில் நாளை ஆகஸ்ட் 11 மாலை 5 மணிக்கு ஆடி சுவாதி சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை முன்னிட்டு நால்வர் சன்னதியில் முன், ஏழாம் திருமுறை விண்ணப்ப நிகழ்ச்சி நடைபெற உள்ளது. திருவுரு மாமலை பன்னிரு திருமுறை வழிபாட்டுக் குழுவின் திருமுறை ஆசிரியர் வள்ளிநாயகம் தலை தாங்குகிறார்.
பாளை தூய சவேரியர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 பொறுவதற்கான வங்கி பரிவர்த்தனை அட்டைகளை சபாநாயகர் அப்பாவு கல்லூரி மாணவர்களுக்கு வழங்கினார். பின்னர் பேசிய அவர், நெல்லை மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 69 கல்லூரிகளை சேர்ந்த 6,361 மாணவர்கள் பயன் பெறுகின்றனர். அவர்களுடைய வங்கி கணக்கில் ரூ.1000 செலுத்தப்பட்டுள்ளது என்றார்.
Sorry, no posts matched your criteria.