India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் நெல்லையில் அனைத்து வகையான தீபாவளி பொருட்கள் விற்பனை களை கட்டியுள்ளது. உலகப்புகழ்பெற்ற நெல்லை இருட்டுக்கடை அல்வா வாங்குவதற்கு வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நெல்லை ரத வீதியில் நீண்ட வரிசையில் நின்று அல்வா வாங்க மக்கள் காத்திருந்தனர். இதுபோல் அனைத்து இனிப்பு கடைகளிலும் விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது.

நெல்லையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை நிறுவனங்கள் பங்கேற்கும் சிறிய அளவிலான வேலை வாய்ப்பு முகாம் பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரி வளாகத்தில் வருகிற 25-ம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது. இதில் டாட்டா பவர் சோலார் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட காற்றாலை மற்றும் சூரியன் உற்பத்தி நிறுவனங்கள் பங்கேற்ற 500க்கும் மேற்பட்ட வேலை நாடுகளில் தேர்ந்தெடுக்க பட உள்ளனர்.

நெல்லை காரியாகுளம் பகுதியை சேர்ந்த மகிழ்வதனா என்பவரிடம் சத்தியாதேவி (34) என்பவர் தன்னை சப் கலெக்டராக அறிமுகப்படுத்தி, ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு ஒப்பந்தத்தை பெற வேண்டி 10 பவுன் நகையை பெற்று கொண்டு மோசடியில் ஈடுபட்டுள்ளார். மகிழ்வதனா புகாரில் இன்று மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் சத்தியாதேவியை கைது செய்தது.

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள மன்னார்புரத்தில் இன்று அதிகாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக சாலையில் நடந்து சென்ற முதியவர் மீது கார் திடீரென மோதியது. இதில் முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்துக்குறித்து திசையன்விளை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் கேட்டுக்கொள்ளப்படுகிறது. பாதுகாப்பான முறையில் வெடி வெடித்து தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழவும், இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் என்று மாவட்ட ஆட்சியர் டாக்டர் சுகுமார் தெரிவித்தார்.

நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் விடுத்துள்ள செய்தி குறிப்பில்: நெல்லை பேட்டை ஐ டி ஐ யில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்காக புதிய தொழில் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த தொழிற்பயிற்சியில் அக்டோபர் 31ம் தேதி வரை நேரடியாக சேரலாம் பயிற்சி கட்டணம் கிடையாது. மாதம் 250 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இலவச மிதிவண்டி சீருடைகள் வரைபட கருவிகள் வழங்கப்படும்.

நெல்லை இளைஞர்களே, தமிழக அரசு, ஐடி துறையில் இளைஞர்களுக்கு எளிதில் வேலைகிடைக்கும் வண்ணம் அதற்கான பயிற்சிகளை இலவசமாகவும் வழங்கி வருகிறது. இதில் JAVA, C++, J2EE, Web Designing, coding, Testing என பல்வேறு Courseகள் உள்ளன. இங்கே <

மானூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 2010ம் ஆண்டு விபத்து ஏற்படுத்திய வழக்கில் ஈடுபட்ட மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் கிருஷ்ணா சேத்வால்(54) என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். இவர் நீதிமன்ற விசாரணைக்கு 1 வருடம் 3மாதங்களாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த நிலையில் தனிப்படை போலீஸ் மகாராஷ்டிராவில் கைது செய்து இன்று நெல்லை அழைத்து வந்தனர்.

தீபாவளிக்காக ஏஎஸ்பி டிஎஸ்பிக்கள் தலைமையில் 1600 போலீசார் மாவட்டம் முழுவதும் பணியில் உள்ளனர். அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும் 45 இருசக்கர வாகனங்கள் மற்றும் 36 நான்கு சக்கர வாகனங்களில் 24 மணி
நேரமும் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். 53 இடங்களில் வாகன சோதனைகள் மூலம் சந்தேகமான நபர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள் என எஸ்பி சிலம்பரசன் இன்று தெரிவித்துள்ளார்.

நெல்லை மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…
Sorry, no posts matched your criteria.