Tirunelveli

News March 22, 2025

திருமணத்தடை நீங்கும் ஆலயம்

image

நெல்லை, அம்பாசமுத்திரத்தில் அருள்மிகு அகத்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு நின்ற கோலத்தில் வலது கையில் ருத்ராட்ச மாலையுடன் அகத்தீஸ்வரர் சின்ன முத்திரை காட்டியபடி இருக்கிறார். இங்கு சிவனுக்குரிய முறையில் பூஜை நடக்கிறது. சிவராத்திரி அன்று 4 கால பூஜை நடக்கிறது. இந்த ஆலயத்தில் வேண்டினால் திருமணத்தடையும், செயல்களில் வெற்றியும் கிடைக்கும் என பக்தர்கள் கருதுகின்றனர். *மற்றவர்களுக்கு பகிரவும்*

News March 22, 2025

நெல்லை: கிரேன் சரிந்து விழுந்து இளைஞர் பலி

image

ராதாபுரம் அருகே இருக்கன் துறை கிராமம் புத்தேரி அருகே இயங்கி வரும் கல் குவாரியில் இன்று காலை கிரேன் பழுது பார்த்துக்கொண்டிருக்கும் போது கிரேன் சரிந்து விழுந்ததில் பீகாரைச் சேர்ந்த சர்ப்ரைஸ் ஆலம் என்பவர் படுகாயம் அடைந்தார்.சக ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். பழவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 22, 2025

நெல்லை மாவட்டத்தில்  64 மில்லி மீட்டர் மழை பதிவு

image

நெல்லை மாவட்டத்தில் இன்று மார்ச் 22 அதிகாலை 7 மணி  தற்போது வரை 64.80 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மூலைகரைப்பட்டியில் 15 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது .ராதாபுரம் வட்டாரத்தில் கடற்கரை கிராமங்களில்11 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. நம்பியார் அணைப்பகுதியில் 10 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. நாலுமுக்கு, ஊத்து தலா 4 மில்லி மீட்டர், நாங்குநேரி 10 மில்லி மீட்டர் மழை பதிவானது.

News March 22, 2025

BREAKING நெல்லையில் கனமழை அறிவிப்பு

image

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு இசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால் மார்ச்.26 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்நிலையில் இன்று நெல்லை மாவட்டத்தில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 22, 2025

பிஎம் கிருஷ்ணன் திட்டத்தில் 22,000 விவசாயிகள் பதிவு

image

நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நெல்லை மாவட்டத்தில் பிஎம் கிசான் திட்டத்தின் மூலம் சிறுகுறு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6000வழங்கப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டத்தில் 49,481 பி எம் கிஷான் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதுவரை சுமார் 22,000 பேர் பி எம் கிஷான் மற்றும் இதர விவசாயிகளின் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

News March 22, 2025

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ 5.50 லட்சம் நிவாரணம்

image

நெல்லை மாவட்டம் மானூர் வட்டாரத்தில் கடந்த ஜனவரி 5 அன்று எதிர்பாராத காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் இந்த பகுதியில் பயிர் செய்யப்பட்டிருந்த 36.69 ஹெக்டேர் நெல் பயிர்கள் சேதமானது. இதற்கு நிவாரண தொகையாக ரூ.5.50 லட்சம் 135 விவசாயிகளுக்கு வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் தெரிவித்துள்ளார். 

News March 22, 2025

பைக் மீது கார் மோதியதில் மாணவர் உயிரிழப்பு

image

வடக்கன்குளம் அருகே உள்ள சிவசுப்பிரமணியபுரத்தை சேர்ந்த சபரிராம் ( 11 ) என்பவர் பணகுடி தனியார் மெட்ரிக் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வந்ததுள்ளார். நேற்று இவர் பள்ளி முடிந்து அவரது அண்ணன் ஹரிஹரனுடன் பைக்கில் வந்துள்ளார். அப்போது எதிரே வந்த கார் பைக் மீது மோதியதில் சபரிராம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவ்விபத்து குறித்து பணகுடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 21, 2025

நெல்லை: பைக் மோதி பள்ளி மாணவன் சம்பவ இடத்திலேயே பலி

image

வடக்கன்குளம் காவல்கிணறு சாலையில் இரு பைக்குகள் மோதி விபத்து ஏற்பட்டு பணகுடி புனித அன்னாள் பள்ளி ஆறாம் வகுப்பு மாணவர் சபரி ராம்(11) என்பவர் பலியானார். பலியான மாணவர் வடக்கன்குளம் அருகே உள்ள சிவசுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது. காயம் அடைந்த நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து பணகுடி காவல் ஆய்வாளர் ராஜாராம் அவர்கள் விசாரணை செய்து வருகிறார்.

News March 21, 2025

பணகுடியில் பைக் மீது கார் மோதி இருவர் பலி

image

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள காவல் கிணற்றில் நேற்று (மார்ச்-20) மாலை காருடன் பைக் மோதிய விபத்தில் இருவர் பலியானார். இதில் பைக்கில் வந்த நாகர்கோவிலை சேர்ந்த நாகராஜன் மற்றும் வினோத் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலே பலியாகினர். இது குறித்து பணகுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 21, 2025

நெல்லையில் மாவட்ட ஹாக்கி லீக் போட்டிகள் அறிவிப்பு 

image

ஹாக்கி யூனிட் ஆப் திருநெல்வேலி சார்பில் மாவட்ட ஹாக்கி லீக் போட்டிகள் மே மாதத்தில் நடைபெறவுள்ளது. ஹாக்கி யூனிட் திருநெல்வேலி சட்ட திட்டங்கள் படி இப்போட்டிகள் நடத்தப்படும். ஆண் பெண் அணிகள் போட்டியில் பங்கேற்கலாம். ஹாக்கி வீரர்கள், வீராங்கனைகள், மற்றும் பொறுப்பாளர்கள் தங்கள் அணிகளை தயார்படுத்திக்கொள்ளுமாறு திருநெல்வேலி ஹாக்கி சங்க தலைவர் சேவியர் சற்குணம் தலைமையில் நிர்வாகிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

error: Content is protected !!