India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாபநாசம் அணையின் நீர்மட்டம் இன்று(ஆக.12) காலை 115.20 அடியாகவும் மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 69.56 அடியாகவும் சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 120.24 அடியாகவும் உள்ளது பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 474 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1155 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மணிமுத்தாறு அணை பகுதிகளில் இன்று காலை வரை 2.6 மில்லிமீட்டர் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று(ஆக.11) பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அந்த வகையில் மாவட்டம் முழுவதும் இன்று காலை நிலவரப்படி 8.82 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக சேரன்மகாதேவி பகுதியில் 21 மி.மீ., மழையும் மூலக்கரைப்பட்டியில் 20 மி.மீ., மழையும் பதிவாகியுள்ளது. தென் மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் அவ்வப்போது மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
திருவனந்தபுரத்தில் பராமரிப்பு பணிகள் இந்த வாரத்தில் நடப்பதால் மதுரையிலிருந்து நெல்லை வழியாக புனலூர் செல்லும் எக்ஸ்பிரஸ் இன்றும் 15ம் தேதியும் நெல்லை வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரயில் நாகர்கோவில், திருவனந்தபுரம் புனலூர் ஆகிய இடங்களுக்கு செல்லாது. மறு மார்க்கமாக புனலூரிலிருந்து மதுரை செல்லும் எக்ஸ்பிரஸ் 13, 16ம் தேதிகளில் புனலூரில் தொடங்கி நெல்லை வரை ரத்து செய்யப்படுவதாக இன்று அறிவிக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி திவ்ய தேசங்களில் ஒன்றாக அழைக்கப்படும் வானமாமலை பெருமாள் திருக்கோயிலில் சுவாதி நட்சத்திர தினத்தை முன்னிட்டு இன்று (ஆக.11) இரவு சிறப்பு கருட சேவை நடைபெற்றது. இதில் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளினார். இதில்ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
நெல்லை மின்வாரியம் சார்பில் இன்று (ஆக.11) வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழகத்தில் சூரிய மின்சக்தி உற்பத்தியில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 2 இல் 5,704 மெகாவாட் மின் உற்பத்தி என்பது அதிகபட்ச சாதனையாக இருந்தது. இது கடந்த 9 ஆம் தேதி 5,979 மெகாவாட் என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் முதன்மையாக இருப்பதை இது உறுதிப்படுத்தியுள்ளது.
அதிமுக தொண்டர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் சசிகலா ஈடுபட்டு வருகிறார். இதற்கான முதற்கட்ட சுற்றுப்பயணத்தை கடந்த மாதம் தென்காசியில் தொடங்கினார். அதைதொடர்ந்து ஆக.13 இல் திருநெல்வேலி, ஆக.14 பாளையங்கோட்டை, ஆக.16 நாங்குநேரி, ஆக.18 ராதாபுரம், ஆக.17 அம்பாசமுத்திரத்தில் சுற்றுபயணம் மேற்கொள்ள உள்ளதாக புரட்சித்தாய் சின்னம்மா மக்கள் தொடர்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் வட தமிழக மாவட்டங்கள், தென் தமிழக உள்மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.இதனால் தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி இன்று இரவு 7 மணி வரை நெல்லை மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சுதந்திர தின விழாவையொட்டி தொடர் விடுமுறையால் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் நெல்லையிலிருந்து செங்கல்பட்டிற்கு ஆக. 13, 18 ஆகிய தேதிகளில் இரவு 10.50 மணிக்கும், மறுமார்க்கத்தில் செங்கல்பட்டிலிருந்து ஆக.14,19 ஆகிய தேதிகளில் மாலை 05.55 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு இன்று(ஆக.,11) காலை 8 மணிக்கு தொடங்கியது.
தமிழ்நாட்டில் நாளை மறுநாள்(ஆக.13) திருப்பூர், ஈரோடு, தென்காசி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நெல்லை மாவட்டத்தில் நாளை மறுநாள்(ஆக.13) கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை பாராளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ் இன்று காலை 10மணி அளவில் நகை கடையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.தொடர்ந்து 10.30 மணிக்கு மாலைமுரசு அலுவலகத்தில் ராமச்சந்திர ஆதித்தனார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார் மதியம் 1.00அளவில் மேலச்செவல் தேவாலயத்தில் தோத்திரப் பண்டிகையில் கலந்து கொள்கிறார். மாலை 5 மணிக்கு கச்சநல்லூரில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்கிறார்.
Sorry, no posts matched your criteria.