India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை ஆட்சியர் கார்த்திகேயன் இன்று விடுத்துள்ள அறிக்கையில், நெல்லை மாவட்ட மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் கிராமப் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. சுய உதவிக் குழு உறுப்பினர்கள் நடத்தும் பசுமை நிறுவனங்கள் தொழில் முனைவோர் கண்காணிப்பு இணையத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். விவரங்களுக்கு உதவி திட்ட அலுவலரை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டு நேற்று பல்வேறு பகுதியில் மழை பெய்தது. இந்த நிலையில் திருநெல்வேலியில் 32.2 மி.மீ., பாளையங்கோட்டையில் 14.4 மி.மீ., சேரன்மகாதேவியில் 4.4 மி.மீ., நாலு முக்கு பகுதியில் 1 மி.மீ. என மொத்தம் மாவட்ட முழுவதும் 52 மி.மீ. மழை பதிவாகி இருப்பதாக இன்று மாவட்ட நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் வருகின்ற 15ஆம் தேதி சுதந்திர தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தின விழாவினை முன்னிட்டு தமிழகத்தில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் நெல்லை மாநகர காவல் ஆணையாளர் ரூபஷ் குமார் மீனா உத்தரவின்படி 1,000 போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியை SDPI கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் முன்னிலையில் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் சந்தித்தனர். அப்போது தங்களது வாழ்வாதாரத்தை காக்க தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசின் டான் டீ மூலமாக தேயிலை நிறுவனத்தை அரசே ஏற்று நடத்த வலியுறுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று(ஆக.,13) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு தெரிவித்திருந்தது. அதன்படி நெல்லை மாவட்டத்தில் இன்று கனமழை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சில இடங்களில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. வெளியில் செல்வோர் முன்னெச்சரிக்கையுடன் குடை எடுத்துச் செல்லவும். தெரிஞ்சங்களுக்கு SHARE பண்ணுங்க!
பெருமாள்புரம் சிதம்பர நகரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 16-ஆம் தேதி காலை 10:30 மணிக்கு சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் கல்வி சான்று மற்றும் இதர சான்றிதழ்களுடன் பங்கேற்று பயனடையலாம் என மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய உதவி இயக்குனர் சகாய ஆண்டனி தெரிவித்துள்ளார்.
‘அம்மாவின் வழியில் மக்கள் பயணம்’ என்ற பெயரில் நாளை மற்றும் நாளை மறுநாள் நெல்லை மாநகர பகுதிகளில் மக்களை சந்திக்கிறார் சசிகலா. நாளை மாலை 3.30 மணிக்கு நெல்லை கொக்கரக்குளத்தில் எம்ஜிஆர் சிலை மற்றும் சந்திப்பு பகுதியில் உள்ள காமராஜர், அண்ணா, முத்துராமலிங்க தேவர், அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பின்னர் மாநகர பகுதிகளில் மக்களை சந்திக்க இருக்கிறார்.
நெல்லை மாவட்டம் வி.கே.புரத்தில் உள்ள கனரா வங்கியின் இரண்டாவது மாடியில் அரசு பொதுத் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 4, பேங்க், ரயில்வே, ப்ராஜெக்ட் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு தயாராகுபவர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம் என IGNIS அகாடெமி தெரிவித்துள்ளது.
பராமரிப்பு பணி காரணமாக நெல்லை – செங்கோட்டை வரை இயக்கப்படும் ரயில் நாளை பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நெல்லையில் இருந்து செங்கோட்டை செல்லும் ரயில் தென்காசி வரை மட்டுமே இயக்கப்படும். மேலும், செங்கோட்டையிலிருந்து நெல்லை வரை இயக்கப்படும் ரயில் தென்காசியிலிருந்து புறப்படும் என தென்னக ரயில்வே இன்று தெரிவித்துள்ளது
திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில் இன்று(ஆக.12) காலை நிலவரப்படி பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 474 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்த 1155 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகின்றது. இதன் காரணமாக விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்து விவசாய பணிகளை துரிதப்படுத்தி உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.